காலி மாவட்டம் ஊருகல்மங்கந்திய பொலிஸ் வலயத்திற்குட்பட்ட கல்பொத்தாவல பிரதேசத்தில் வீடொன்றில் தனியாக வசித்து வந்த 54வயதான பெண்ணொருவர் கோரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலம் வீட்டின் சமையல் அறைக்குள்ளிருந்து மீட்கப்பட்டதாக ஊருகஸ்மங்கந்திய பொலீசார் தெரிவித்துள்ளனர். இவர் வங்கிக் கிளையொன்றில் உதவியாளராக பணிபுரிபவர் என்று தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் முறைப்பாடு கிடைத்தததும் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய்களுடனும், கைரேகை நிபுணர்களுடனும் சென்ற பொலீசார் தீவிர பரிசோதனைகளை நடத்தியுள்ளனர். நீதவான் விசாரணைகளைத் தொடர்ந்து சடலத்தை கராப்பிட்டிய வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு [...]
















































