இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி….! அமரர் திரு.இராமலிங்கம் பசுபதிபிள்ளை (சின்னைய்யா)


Warning: strpos() [function.strpos]: Offset not contained in string in /usr/www/users/webone/wp-content/themes/options_old2/app/loop-functions.php on line 69

இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி….! அமரர் திரு.இராமலிங்கம் பசுபதிபிள்ளை (சின்னைய்யா) புங்குடுதீவு 3ம் வட்டாரம் யாழ்ப்பானம் ஆர்.பி ஸ்டோஸ் உறிமையாளர் அன்பிற்கு இலக்கணமாய் பண்பிற்கு சிகரமாய் பாசத்திற்கு ஒளிவிளக்காய் வாழ்ந்து எமை பாரினிலே எமை வளர்த்து பரிதவிக்கவிட்டு சென்ற எம் தெய்வமே! கண்ணை இமைக் காப்பது போல் எமை காவல் காத்த எம் காவல் தெய்வமே! விழி நீர் ஓயவில்லை இராண்;டு சென்றதுவே கண்முன்னே நடப்பது போல் நினைவுகள் வாட்டுகின்றன துணையின்றி உம்பிரிவால் நடைபிணம் போல் நிற்கின்றோம். பூப்போன்று என்னை என் செல்வங்கள் பார்த்தாலும் என் மனப்பாரம் இறக்கிவைக்க முடியவில்லை நாள்தோறும் உம் செல்வங்கள் உமக்கு பூ வைத்து வணங்குகின்றனர்…!! புங்குடுதீவு 3ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் கொழும்பு பொரலையை வதிவிடமாகவும் கொண்ட யாழ்ப்பானம் ஆர்.பி ஸ்டோஸ் உறிமையாளருமான அமரர் திரு.இராமலிங்கம் பசுபதிபிள்ளை (சின்னைய்யா) அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி. அன்னார், திரு.திருமதி. இராமலிங்கம் தம்பதிகளின் அன்பு மகனும் , திருமதி.புவனேஸ்வரி  அவர்களின் அன்புக் கணவரும் ,  ஜெயபாலன் , ஜெயகுமார் , ஜெசுகந்தன்  , ஜெயகாந்தன்  ,  ஜெயசிலன்  , ஜெயபரமேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்  ஆவார். அன்னாரின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி  23.12.2011 இன்று அன்னாரி கொழும்பு இல்லத்தில் நடைபெறும் என்பதினை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் தெரிவித்து கொள்வதேடு அன்னாரின் ஆத்மசாந்திக்காக பிராத்திக்கும் வன்னம் கேட்டுகொள்கின்றோம்.. தகவல் : மனைவி மற்றும் மகன்மார்கள் ஜெயபாலன்  லண்டன்   balanleicester@hotmail.co.uk ஜெயகுமார்  இலங்கை +94773507390 ஜெயசிலன்  இலங்கை   +94776366434  Read More »

இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி….! அமரர் திரு.இராமலிங்கம் பசுபதிபிள்ளை (சின்னைய்யா)

சூதாடிய தருமனும் துகிலுரிந்த துச்சாதனனும் (பாகம் 69) ‍ சித்திறெஜினா..! ”


Warning: strpos() [function.strpos]: Offset not contained in string in /usr/www/users/webone/wp-content/themes/options_old2/app/loop-functions.php on line 69

அண்மையில் ஒரு அரசியல் நிகழ்வொன்றில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்.. கடந்த காலங்களில் நாமே எமக்கான புதைகுழிகளை தோண்டியிருக்கின்றோம். தற்போது இந்நிலை மாறியுள்ளது… இந்த அமைதிச் சூழலை நாம் அனைவரும் பாதுகாக்கும் நிலையிலேயே ஒளிமயமான எதிர்காலம் ஒன்றை நோக்கி எம்மால் பயணிக்க முடியும் என்றும் பின்னர் இன்னொரு சந்தர்ப்பத்தில் எதிர்ப்பு அரசியலின் மூலம் எதனையும் சாதிக்க முடியாது.. ஆனால் இணக்க அரசியலின் மூலம்தான் அதைச் சாதிக்க முடியும்.. என்றும் அவர் கூறியிருக்கும் வார்த்தைகள் உண்மையில் அர்த்தமுள்ளவைகள்தான்… அதேபோல‌.. புலிகள் தமிழ் ஈழம் எடுத்து தருவார்கள் .. தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் விடுதலைக்காக குரல் கொடுக்கும் என்றும் இனியும் வட கிழக்கு மக்கள் நம்புவார்களாயின் அவர்களை கடவுளினால் கூட காப்பாற்ற முடியாது.. என்று புளொட் இயக்கத்தின் தலைவர் சித்தார்த்தன் அவர்கள் கூறியிருப்பதையும் பார்க்கும்போது இவர்கள் அரசியல் சூதாட்டங்களை கடந்து அதற்கு அப்பால் இலங்கைத் தமிழினம் மீண்டும் ஒரு மனித‌ப் பேரழிவில் விழுந்து விடாமல் தடுக்க‌ விடுக்கப்படும் ஒரு எச்சரிக்கையாகவே இந்த வார்த்தைகளை கணிக்க முடிகிறது… இவர்கள் கூறியிருக்கும் இந்த கூற்றுகளில்தான் எத்தனை உண்மைகள் புதைந்து கிடக்கின்றன.. அந்தத் தமிழீழம் என்ற வார்த்தையில்தான் எத்தனை அழிவுகள் மறைந்து கிடக்கின்றன‌… இலங்கையில் தாங்கள் வாழ்ந்த சொந்த‌ மண்ணிலேயே தங்கள் சொத்தை இழந்து.. சொந்த பந்தங்களை இழந்து.. அனுதினமும் கண்ணீர் வடிக்கும் பரிதாபத்திற்குரிய‌ மக்கள்.. பெற்றோரை இழந்து தவிக்கும் பச்சிளம் பிள்ளைகள்.. தாலாட்டி சீராட்டி பாராட்டி வழர்ந்த தம் பிள்ளைச் செல்வங்களை போருக்கு பலி கொடுத்து பரிதவிக்கும் பெற்றோர்கள்.. கணவன்மார்களை பறிகொடுத்து பித்துப் பிடித்தலையும் அந்த மனைவிகள்.. கொலைகள்.. ஆட்கடத்தல்கள்.. குண்டு வெடிப்புகள்.. இவைகள் அனைத்துமே அன்றைய புலிகளின் காலகட்டத்தில் இலங்கைப் பத்திரிகைகளில் வெளி வந்து நெஞ்சை பதற வைத்து இரத்தத்தை உறைய வைத்த செய்திகளாக இருந்தன‌.. ஆனால் அன்றைய கால கட்டத்தில் இவைகள் யாவுமே வெளி நாடுகளில் வாழும் சிலருக்கு அவர்கள் வாழ்க்கையில் செல்வம் கொழிக்க‌ வைக்கும் விளம்பரங்களாக அமைந்திருந்தன‌.. . இப்படிப்பட்ட‌ விளம்பரங்களை செய்து அதனால் பலனடைந்தவர்கள் யாவரும் தமிழினத்தின் கண்ணீர் வெள்ளத்தில் தங்கள் வாழ்க்கை படகை வழமாகச் செலுத்தத் தெரிந்த‌ கில்லாடிகளாக‌ இருந்தார்கள்… ஆம் இந்தக் கண்ணீர் வடிப்புகளும் கதறல்களும் பரிதபிப்புகளும் இலங்கையில் இல்லாமல் போயிருந்தால்.. வெளி நாடுகளில் இவர்கள் வாழ்க்கையிலும் வசந்த காலம் என்பது இல்லாமல் போயிருக்கும்.. ஆகவே இவைகள் யாவும் தொடர்ந்து அங்கே நடைபெற்றுக் கொண்டிருக்க‌ வேண்டும் என்ற காரணத்திற்காகத்தான் அன்று அந்த பஞ்சமா பாதகங்கள் இலங்கையில் நடப்பதை ஊக்குவித்து தமிழீழம் என்ற இந்த வியாபாரத்தை வெளி நாடுகளில் கொடிகட்டிப் பறக்க வைத்தார்கள் அன்றிருந்த புலிப் பினாமிகள்… இன்று அந்த வியாபாரம் இலங்கையில் நிர்வாகமற்று போய்விட்ட நிலையில் அதை நாடு கடக்க வைத்து உருத்திரகுமாரனின் தலைமையில் “நாடு கடந்த தமிழீழமாக” பரிணமிக்க வைத்து அந்த வியாபாரத்தை மீண்டும் வெற்றிகரமாக நடத்தும் கைங்கரியத்தில் சுறுசுறுப்பாக‌ இறங்கியிருக்கிறார்கள்.. அன்று பிரபாகரனின் தலைமையில் வெளிநாட்டுப் புலிப் பினாமிகள் செய்து வந்த அதே நெஞ்சை பதற வைத்து இரத்தத்தை உறைய வைக்கும் விளம்பரங்களையே இன்று மீண்டும் உருத்திரகுமாரனின் தலைமையில் செய்வதற்கான‌ ஆயத்தப் பணிகளில் துணிகரமாக‌வும் இறங்கியிருக்கிறார்கள்… உலகில் தலை சிறந்த வியாபார ஸ்தாபனங்கள் அனைத்துமே தங்கள் வியாபார முன்னேற்றத்திற்காக‌ கவர்ச்சிகரமான‌ விளம்பர சுலோகங்களை உருவாக்கி அதன் மூலம் மக்கள் மனதை கவர்ந்து தங்கள் வியாபாரத்தை ஓஹோ என்று நடைபெறச் செய்கிறார்க‌ள்.. உதாரணமாக இளம் சமூகத்தினர் விரும்பிப் பருகும் குளிர் பானமான‌ கொக்கா கோலாவை எடுத்துக் கொண்டால்.. இதன் ஆரம்ப காலமான 1904 ம் ஆண்டில் “இன்சுவையும் புத்துணர்வும்” என்று பொருள்பட Delicious and refreshing என்று ஆரம்பித்து ஒவ்வொரு வருடமும் புத்துப்புது சுலோகங்களை உருவாக்கி அதன் பாவனையாளர்களை அசத்தி வந்தார்கள்.. “புத்துணர்வுக்கு மூடியை திருகு!” Twist The Cap To Refreshment என்று 2010 ம் ஆண்டிலும் “வாழ்க்கை இங்கே ஆரம்பமாகிறது” Life Begins here என்று 2011ம் ஆண்டிலும் இவர்களால் உருவாக்கப்பட்ட அந்த சுலோகங்கள் அதன் பாவனையாளர்கள் மத்தியில் மிகவும் பிரசித்தி பெற்றிருந்தன‌.. இதன் பலனாக மேலும் பல கோடி டாலர்களை கொக்கா கோலா ஸ்தாபனம் கூடுதல் இலாபமாக‌ சம்பாதிக்க முடிந்தது… பொதுவாகவே விளம்பரங்கள் என்பது மனோதத்துவ ரீதியில் மக்கள் மனதை கவர்ந்து தங்கள் வியாபாரத்தை பெருக்குவதற்காக‌ உருவாக்கப்படும் ஒரு சாதனமே..இதே பாணியில்தான் இலங்கைத் தமிழர்களின் பிரச்சனைகளை வைத்து வியாபாரம் செய்த.. செய்து கொண்டிருக்கும் நமது தமிழ் அரசியல்வாதிகளும் காலத்துக் காலம் மக்கள் மனதைக் கவரக் கூடியபடி புத்துப்புது சுலோகங்களை உருவாக்கி அதன் மூலம் தமிழர்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தி வந்தார்கள் என்பதை கடந்தகால சரித்திரங்களை ஆராய்ந்து பார்த்தவர்களுக்கு நன்கு புரிந்திருக்கும்… தமிழீழ வியாபாரம் இப்படித்தான் ஆரம்பமானது … மற்றைய தமிழ் கட்சிகளுடன் சேர்ந்து கூட்டமைத்துக் கொண்ட‌ தமிழரசுக் கட்சியினர் தமிழர் விடுதலைக் கூட்டணியாக பரிணாம‌ம் அடைந்த‌ கால கட்டத்தில்தான் தமிழர்களுக்கென்று ஒரு பாரம்பரிய பிரதேசம் இருக்கிறது அதை வென்றெடுக்கும் பட்சத்தில் அதன் பெயர் தமிழீழமாக அமையும் என்று ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த தமிழீழ வியாபாரத்திற்கான சுலோகம் “தமிழர்களுக்கான தீர்வு சுதந்திரத் தமிழ் ஈழமே” என்றிருந்தது.. அதன் பின்னர் இந்த வியாபாரத்தை அவர்களிடமிருந்து பலவந்தமாக பறித்துக் கொண்ட விடுதலைப் புலிகளின் தலைமை தங்களுக்கு சாதமாக அதை “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” என்று மாற்றியமைத்து அதன் மூலம் தங்கள் காலத்தில் பல கோடிகளை இலாபமாக சம்பாதித்துக் கொண்டது… புலிகளின் மறைவிற்குப் பின்னர் அந்த தமிழீழ வியாபாரத்தை புலிகளின் முக்கிய பதவியிலிருந்த கே.பி தனக்காக சுவீகரித்துக் கொள்ள‌ முயன்று கொண்டிருந்த போது இலங்கை அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்ட சூழ்நிலையில் தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்ற தோரணையில் அந்த தமிழீழத்தை தூக்கி கடாசி விட்டு அன்றே இலங்கை அரசாங்கத்துடன் ஒப்புரவாகிக் கொண்டார் அவர்… அவருக்குப் பின் வெளி நாட்டில் பாதுகாப்பாக வாழ்ந்து கொண்டிருந்த‌ உருத்திர குமாரனன் கோஸ்டியினரால் அது கையேற்கப்பட்டு அதற்கு மீண்டும் புத்துயிர் கொடுக்கப்பட்டு “நாடு கடந்த தமிழீழம்” என்று புதிய நாமம் சூட்டப்பட்டு மீண்டும் இயங்கத் தொடங்கிய சூழ்நிலையில் அதற்காக‌ உருவாக்கப் பட்டிருக்கும் புதிய சுலோகம்தான் “தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம்” என்பதாகும்… நாளை ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் உருத்திரகுமாரரின் உயிருக்கும் இலங்கை அரசாங்கத்தால் ஆபத்து ஏற்படும் பட்சத்தில் அவரும் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள இந்த தமிழீழ வியாபாரத்தை தூக்கி கடாசிவிட்டு சரணாகதி அடையத் தயங்க மாட்டார் என்பது நிட்சயமே.. (தங்கள் உயிருக்கு ஆபத்து என்றவுடன் சயனைட் குப்பியாவது மண்ணாங்க‌ட்டியாவது என்று தங்கள் கழுத்தில் கட்டியிருந்ததை கழட்டி கடாசி விட்டு தங்கள் கொள்கைகளை தூக்கி குப்பையில் எறிந்து விட்டு சரணாகதியடைவதுதான் சமயோசிதமான வழி என்பதற்கு பல புலிப் பிரமுகர்களும் பல புலி தள(ர்)பதிகளும் இன்றுவரை சாட்சிகளாக இருந்து வருகிறார்கள் எனபது வேறு விசயம்).. அப்படி உருத்திரகுமாரன் அவர்களும் தளர்ந்துபோய் சரணாகதியடையும் பட்சத்தில் அதை மீண்டும் கொண்டு நடத்த வெளிநாடுகளில் பலர் போட்டி போட்டுக் கொண்டு முன்வருவார்கள்.. ஏனெனில் தங்கள் உயிருக்கு பாதுகாப்பான வெளி நாடுகளில் இருந்து கொண்டு இந்த வியாபாரத்தை கொண்டு நடத்துவது என்னவோ அவ்வளவு கடினமான காரியமல்ல‌.. வெளி நாடுகளில் சிந்திக்கத் தெரியாத இலங்கைத் தமிழர்கள் உள்ள‌வரை அவர்கள் காதுகளில் நைசாக‌ பூச்சுற்றி குறுகிய காலத்தில் பல கோடிகளை கறந்து கொள்ளும் அலாவுதீனின் அற்புத விளக்காக இந்த தமிழீழ வியாபாரம் அமைந்திருப்பதுதான் அதற்குக் காரணம்… இப்படிப்பட்ட இந்த தமிழீழ வியாபாரம் ஆரம்பிக்கப்பட்ட வரலாறு சுவையானது.. இதன் ஆரம்ப கர்த்தாக்களான தமிழரசுக் கட்சியினர் இதை தமிழர்களின் விடிவுக்காக உருவாக்காமல் அன்றைய காலகட்டத்தில் வாழ்ந்த‌ தமிழர்கள் மத்தியில் தாங்கள் இழந்து போயிருந்த‌ செல்வாக்கை மீண்டும் கட்டி எழுப்புவதற்காகத்தான் இதை உருவாக்கியிருந்தார்கள் என்ற அந்த உண்மையை கடந்தகால வரலாற்றை ஆராய்ந்து பார்க்கும்போது தெரிய வருகிறது… சுதந்திரமடைந்த இலங்கையில் அகில இலங்கை தமிழ் காங்கிரசிலிருந்து எஸ். ஜே. வி. செல்வநாயகம் தலைமையில் வெளியேறிய அணியினரால் டிசம்பர் 1949ம் ஆண்டில் யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தில் வைத்து உருவாக்கப்பட்டதே இலங்கைத் தமிழரசுக் கட்சியாகும்… அந்த நாட்களில் “தமிழரசுக் கட்சி” என்ற‌ பெயரே இவர்களுடைய அரசியல் வியாபாரத்திற்கு ஒரு கவர்ச்சிகரமான விளம்பரமாக அமைந்திருந்தது.. இதன் மூலம் தமிழர்களுக்கான அரசொன்று மலரப் போகிறது போன்ற ஒரு தோற்றப்பாடை தமிழ் மக்கள் மனதில் ஏற்படுத்தி அதன் மூலம் அவர்கள் மனதை கவர்ந்து அவர்கள் வாக்குகளை வென்று பாராளுமன்ற ஆசனங்களைக் கைப்பற்றி வந்தார்கள்.. தங்களால் தமிழ் மக்களுக்கென்று எதையுமே சாதிக்க முடியாது என்பதை நன்கு அறிந்திருந்த அவர்கள் தங்களுடைய கையாலாகாத் தனத்தை மறைப்பதற்காக தங்கள் அரசியலில் அன்று மூட்டி வைத்த‌ இனவெறித் தீதான் அவர்களைப் போன்ற அரசியல்வாதிகளால் இன்றுவரை அணைந்து விடாமல் பாதுகாக்கப்பட்டு தமிழினத்தின் எதிர்காலத்தை சீரளித்துக் கொண்டிருக்கிறது என்பது ஒரு புறமிருக்க‌.. அன்றைய கால கட்டத்தில் இவர்கள் தங்களுக்கென்று எதையுமே உருப்படியாக சாதிக்கப் போவதில்லை என்பதை புரிந்து கொண்ட தமிழ் மக்கள் சலிப்படைந்து இவர்களை நிராகரிக்கத் தொடங்கி விட்டார்க‌ள் என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டிய கால‌ம் 1970ம் ஆன்டுப் பகுதியில் ஏற்பட்டிருந்தது. 1970ல் இலங்கையில் நடைபெற்ற‌ பொதுத் தேர்தலில் த‌மிழரசுக் கட்சியினரால் சிங்கள அரசாங்கத்திற்கும் சிங்கள மக்களுக்கும் எதிரான இனவெறிப் பொறி பறிக்கும் மேடை பேச்சுக்கள் குடாநாட்டு அரசியல் மேடைகளில் களைகட்டியிருந்தாலும் அது மக்கள் மத்தியில் எடுபடாமல் பல இடங்களில் அந்தப் பேச்சுக்களை மக்கள் நிராகரித்திருந்தார்கள்.. அதன் பலனாக தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் அன்றைய பாரளுமன்றத் தேர்தலில் வடக்கில் படு தோல்வியைத் தழுவிக் கொண்டார்கள்… நல்லூர் தொகுதியில் தமிழரசுக் கட்சியின் முக்கிய செயலாளர் நாயகம் நாகநாதனை தோற்கடித்து அவரை மண் கவ்வச் செய்திருந்தார் தமிழ் காங்கிரஸ் கட்சியில் போட்டியிட்ட அருளம்பலம் அவர்கள்.. அதேபோல கிளிநொச்சித் தொகுதியில் போட்டியிட்ட தமிழரசுத் தூண் ஆலாலசுந்தரத்தை வீழ்த்தி தமிழ் மக்கள் மத்தியில் தனக்கிருந்த‌ செல்வாக்கை காட்டியிருந்தார் தமிழ் காங்கிரஸில் போட்டியிட்ட ஆனந்தசங்கரி அவர்கள்.. இந்தத் தோல்விகளுக்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல் தமிழரசுக் கட்சிக்கு எவராலும் முட்டுக்கட்டை போட முடியாத கோட்டையாய் விளங்கிய‌ வட்டுக் கோட்டை தொகுதியில் தந்தை செல்வாவின் வாரிசாக தன்னை இனம் காட்டிக் கொண்ட அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களையே தோற்கடித்து அங்கே தன் வெற்றிக் கொடியை நாட்டியிருந்தார் ஏ.தியாகராஜா அவர்கள்… இதில் ஆச்சரியம் என்னவென்றால் 1970 ல் நடைபெற்ற இந்த‌ தேர்தலில் இன விடுதலை பற்றிப் பேசிய‌ தமிழரசுக் கட்சிக்கு எதிராக களமிறங்கி அவர்களை தோற்கடித்தவர்க‌ள் வைத்த கோரிக்கைகள் எதிலுமே அடக்கு முறைக்கு எதிராகவோ அல்லது இன விடுதலைக்கு ஆதரவாகவோ எதுவுமே இடம் பெற்றிருக்கவில்லை.. மாறாக‌ அவைகள் யாவுமே குடா நாட்டு மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில் தொழில் வாய்ப்புகள்.. கல்வி முன்னேற்றம்.. விவசாயக் கடன்.. தொகுதி மேம்பாடு போன்றவற்றின் திட்டங்களின் அடிப்படையிலேயே அமைந்திருந்தன‌ . அதைத்தான் அன்றைய கால கட்டத்தில் அங்கு வாழ்ந்த தமிழ் மக்கள் எதிர்பார்த்திருந்தார்கள் ஆகவேதான் சிங்கள இனத்தை எதிரியாக காட்டி தமிழரசுக் கட்சியினர் நடத்தி வந்த அந்த‌ அரசியல் பேய்க்காட்டல் அவர்களுக்கு அலுத்துப் போயிருந்தது ஆகவே அவர்களை நிராகரித்து இவர்களை அந்த பாராளுமன்ற தேர்தலில் தெரிவு செய்திருந்தார்கள்… இந்த எதிர்பாராத‌ தோல்விகளால் அதிர்ந்து போனது தமிழரசுக் கட்சி.. இந்த மண் கவ்வலைத் தொடர்ந்து விழித்துக் கொண்டார்கள் அதன் தலைவர்கள்.. இவ்வளவு காலமும் தாங்கள் அனுபவித்து வந்த‌ தங்கள் சொகுசான அரசியல் வாழ்வுக்கு வடபகுதித் தமிழர்கள் வெகு விரைவில் சாவு மணியடிக்கப் போவதற்கான முதல் எச்சரிக்கைதான் இந்த தேர்தல் தோல்வி என்பதை சரிவரப் புரிந்து கொண்ட அவர்கள் இனிமேல் தங்கள் இனவெறிப் பிரச்சாரங்கள் தமிழ் மக்கள் மத்தியில் எடுபடாது என்ற உண்மையையும் கூடவே உணர்ந்து கொண்டார்கள்.. ஆகவே ஏதாவது ஒரு வழியில் அவர்கள் கவனத்தை திருப்பி அடுத்த பாராளுமன்றத் தேர்தலிலாவது தங்கள் பாராளுமன்ற ஆசனங்களை கைப்பற்ற வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ஏற்பட்டிருந்தது… ஆகவே வேறு ஏதாவது ஒரு மாற்றீடை அதற்குப் பதிலாக கொண்டு வந்து மீண்டும் அவர்கள் வாக்குகளை கவர போடப்பட்ட திட்டத்தின் அடிப்படையில் மற்றைய தமிழ் கட்சிகளையும் இணைத்து உருவாக்கப்பட்டதுதான் தமிழர் விடுதலைக் கூட்டணி அமைப்பாகும்.. மேலும் தமிழர்களுக்கான ஒரு தாயகத்தை தங்களால் உருவாக்க முடியும் என்று மக்களை நம்பச் செய்வதற்காக அவர்கள் சூதாட்டச் சிந்தனையில் உதித்த “தமிழீழம்” என்ற வார்தைப் பதம் 1976 ஆம் ஆண்டு மே மாதத்தில் தந்தை செல்வாவின் தலைமையில் அமிர்தலிங்கம் அவர்கள் படு தோல்வியை சந்தித்திருந்த வட்டுக் கோட்டையில் பண்ணாகம் என்ற இடத்தில் வைத்து பிரகடனம் செய்யப்பட்டது… இதை உருவாக்கிய அதன் முக்கிய தலைவர்கள் அனைவருமே சட்ட வல்லுணர்கள்.. பொய்யை மெய்யாகவும்.. மெய்யைப் பொய்யாகவும் மாற்ற சட்டத்தின் ஓட்டைகளுக்குள் புகுந்து விளையாடும் சூட்சுமம் அறிந்தவர்கள் .. ஒரு நிரபராதியை குற்றவாளியென்றும் ஒரு குற்றவாளியை நிரபராதியென்றும் நிரூபித்து சட்டத்தையும் மக்களையும் ஏமாற்றும் சூதாட்டக்காரர்கள்.. அதனால்தான் நிறைவேற்ற முடியாத ஒன்றுக்கு தமிழீழமென்று பெயரிட்டு தமிழ் மக்களுக்கு ஆசைகாட்டி அவர்களை மோசம் செய்து அவர்கள் வாழ்க்கையை படுகுழிக்குள் தள்ளி அவர்கள் அழிவுக்கு அன்றே வலிகோலி வைத்து விட்டுப் போயிருக்கிறார்கள்… அதுமட்டுமல்லாமல் தமிழீழம் என்றை ஒருவாக்க தீர்மானிக்கப்பட்ட‌ போதே யாழ்ப்பாண மக்கள் மத்தியில் செல்வாக்குடன் திகழ்ந்து இவர்களின் இனவெறிப் பித்தலாட்டத்திற்கு முட்டுக் கட்டையாக‌ இருந்த யாழ் மேயர் அல்பிரட் துரையப்பா அவர்களை போட்டுத் தள்ளும் தீர்மானமும் கூடவே நிறைவேற்றப்பட்டு அதற்கான நாளும் தெரிவு செய்யப்பட்டு அதை செய்து முடிக்க அனுப்பி வைக்கப்பட்ட பிரபாகரன் என்ற இருபத்தொரு வயது இளைஞனை கொண்டு யாழ் நகரத்திற்காகவும் அங்குள்ள‌ மக்களின் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட அந்த நல்ல மனிதரை படு கொலையும் செய்வித்தார்கள்.. ஆம் தமிழீழத்தின் ஆரம்பமே ஒரு படு கொலையுடன்தான் ஆரம்பித்து வைக்கப்பட்டது.. பிரபாகரனை தங்கள் சுயநலத் தேவைக்காக உபயோகித்தன் பலனாக தமிழர் சமுதாயத்தில் ஒரு சீரியல் கில்லரையும் உருவாக்கி அவர் மூலம் தாங்களும் அழிந்து இவர்கள் ஆரம்பித்து வைத்த‌ தமிழீழம் என்ற திருகு தாளத்தை உண்மையென்று நம்பி விடுதலை வேட்கையுடன் ஆயுதமேந்திப் போராடப் புறப்பட்ட ஆயிரக் கணக்கான மற்றைய இயக்க‌ இளைஞர்களையும்.. அதன் சாத்தியமற்ற தன்மையை புரிந்து கொண்டு அதற்கு எதிர்ப்பு தெரிவித்த புத்தி ஜீவிகளையும்.. புலிகளுக்கு ஆதரவளிக்காத பொது மக்கள் என்று இலட்சக்கணக்கான இன்னுயிர்களையும் பிரபாகரனால் கொன்றொழிக்க வழிகோலி முடிவில் அந்தப் பிரபாகரனின் கூட்டமும் அழிந்தொழிந்து போக‌ வழி அமைத்துக் கொடுக்க‌ இந்த தமிழீழ வியாபாரம்தான் மூல‌ காரணமாக அமைந்திருந்தது… அத்துடன் நின்று போய் விடவில்லை தமிழீழமென்ற அந்த சாத்தானின் சக்தி இன்றுவரை அதன் பின்விளைவுகள் தமிழர் சமூகத்தின் மத்தியில் தொடரத்தான் செய்கிறது.. தமிழீழ வியாபாரத்தை இவர்களிடம் இருந்து அபகரித்து தொடர்ந்த பிரபாகரப் புலிகள் ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து முடிவில் மனிதர்களைக் கடிக்கும் கதையாக வ‌ங்கிகளில்.. பொது நிறுவனங்களில்.. கைவைத்து முடிவில் பொது மக்களின் சொத்துகளிலேயே கை வைக்கும் அளவுக்கு முன்னேறி தாங்களே முன்னோடியாக இருந்து.. இன்று இலங்கைத் தமிழர் சமூதாயத்தில் உழைத்துப் பிழைக்க வேண்டிய தமிழ் இளைஞர் சமூகம் ஒன்றை பொதுமக்களின் வீடுகளில் அத்துமீறிப் புகுந்து ஆயுதங்களை காட்டி வெருட்டி அவர்கள் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி சேர்த்து வைத்த செல்வங்களை எல்லாம் அவர்கள் கையைக் கட்டி காலைக் கட்டி கொள்ளையடித்துச் செல்லும் ஓடுகாலி சமூகமாக மாற்றியமைத்து விட்டுப் போயிருக்கிறது.. இலங்கை தமிழினத்திற்குள் புலிகள் நுழைவதற்கு முன்னர் இப்படியான நிகழ்வுகள் நடந்ததில்லையே…! இன்று நாடு கடந்து வந்து வெளி நாட்டில் குடியிருக்கும் இந்த தமிழீழமென்னும் சாத்தான் இந்தியாவிலும் அகலக் கால் பரப்பத் தவறவில்லை.. அதன் தீய சக்தியானது அன்று காங்கிரஸ் தலைவர் ராஜீவ் காந்தியை கொன்றதன் மூலம் புலிகள் இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக இந்தியாவின் பகையை வலுக்கட்டாயமாக வம்புக்கிழுக்க வைத்த‌து போல‌ இன்று தமிழகத்தில் காங்கிரசுக்கு எதிராக அதன் தலைவர்களை வாய்க்கு வந்தபடி வசைபாடும் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானுடன் இந்த நாடு கடந்த தமிழீழ கோஸ்டியை கூட்டுச் சேர வைத்திருக்கிறது… அண்மையில் தமிழகத்திற்கு விஜயம் செய்திருந்த அதன் உள்ளக அமைச்சர் நாகலிங்கம் பாலச்சந்திரன் சீமானை அவரது “நாம் தமிழர்” கட்சி தலைமை அலுவலகத்தில் சந்தித்தபொழுது அவரிடம் நாம் உங்களுக்கு என்றும் ஆதரவளிப்போம் என்று கூறியபோது “ஆதரவென்ன ஆதரவளிதே தீரணும்.. அண்ணன் கிட்ட சொல்லுங்க தைரியமா இருக்கும்படி” என்று சீமான் பதிலளித்திருப்பதன் பின்னணியில் மறைந்து கிடக்கும் அந்த திட்டங்கள்தான் என்ன?.. இவர்களின் இந்த சந்திப்பின் முழு விபரம் இன்னமும் வெளியிடப்படவில்லை.. ஆனால் வெளியிடப்பட்டிருக்கும் இந்த வீடியோவில் இருந்து சீமானுக்கு இவர்கள் நிட்சயம் ஆதரவளித்தே தீர வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது தெளிவாகவே தெரிகிறது.. இந்த நாம் தமிழர் இயக்கம்தான் இவர்கள் செய்து கொண்டிருக்கும் இந்த தமிழீழ வியாபாரத்தின் முக்கிய பங்காளிகளா?.. இந்த இயக்கத்தில் இருக்கும் இளைஞர்களை கொண்டுதானா எஞ்சியிருக்கும் நமது இலங்கைத் தமிழர்களின் அழிவுக்காக‌ இலங்கையில் மீண்டும் கலவரங்களை ஆரம்பிக்க‌ சீமான் தயாராகிக் கொண்டிருக்கிறார்? அதற்காகத்தானா அண்ணா உருத்திரகுமாரனை மனம் தளராமல் இருக்க்கும்படி கூறியிருக்கிறார்…? இதற்கு ஆதாரமாக‌ கீழ்காணும் வீடியோவை பார்வையிடவும் http://www.youtube.com/watch?v=qZ3B5xOeSQo பைத்தியகாரர்களே! உலகிலுள்ள தமிழ் அமைப்புகள் எல்லாம் உங்கள் நாடு கடந்த‌ தமிழீழ அரசுடன் பதிவு செய்து இணைந்து செயல்படுமாறு உங்கள் நாகலிங்கம் பாலச்சந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளாரே… அதற்கு முதல் நீங்கள் தேட வேண்டியது இந்தியாவின் ஆதரவையல்லவா? தமிழகத்தில் யார்தான் ஆட்சியமைத்தாலும் இன்னும் மூன்றரை வருடங்களுக்கு நடக்கப் போவது காங்கிரஸ் ஆட்சியல்லவா? நீஙகள் தென் சூடானின் அங்கீகாரத்தை பெற்றிருந்தாலும் அல்லது தென் கொரியாவின் அங்கீகாரத்தை பெற்றிருந்தாலும் அதனால் எதுவித பயனும் இருக்கப் போவதில்லை என்பது உறுதியாகும்.. இலங்கைத் தமிழர்களை அங்கே தமிழகத்தில் பகடைக் காய்களாக வைத்து சூதாட்டம் நடத்தும் சீமான் தனது சுயநலத்திற்காகத்தான் காங்கிரசின் பகைவன் போல் நடித்துக் கொண்டிருக்கிறார் என்ற உண்மை உங்களுக்குத் தெரியுமா? நீங்களே உங்கள் தமிழீழ வியாபாரத்திற்காக் எமது தமிழினத்தின் இன்னுயிர்களை பலி கொடுக்கத் தயாராகும்போது அவரை குற்றம் சொல்வதில்தான் என்ன பயன்? மனித குலத்தால் ஜீரணிக்க முடியாத‌ இவைகளை எல்லாம் இலட்சியம் செய்யாமல் வெளிநாடுகளில் சொகுசாக வாழ்ந்து கொண்டு உங்கள் சுயலாபத்திற்காக நாடு கடந்த தமிழீழமொன்றை ஆரம்பித்து மீண்டும் தமிழ் மக்களை பலி கொடுக்க தயாராகிக் கொண்டிருக்கும் உங்கள் புதிய புலித் தலைமை தமிழினத்தின் விடிவிற்காக‌ எதையும் சாதிக்கப் போவதில்லை என்பது உறுதியானதொன்றாகும்… அன்று அந்த இரண்டாம் உலக மகா யுத்தத்திற்கு வித்திட்ட‌ சர்வாதிகாரி ஹிட்லரின் இனவெறி பாசிச‌ சிந்தனைகளுக்கு பின்னால் அணி திரண்ட‌ ஜேர்மன் மக்கள் எப்படி கோடிக் கணக்கில் அழிந்தொழிந்து போனார்களோ அதே போல இன்று வெளி நாடுகளில் மீண்டும் எழும் இந்த நாடு கடந்த தமிழ் ஈழத்தின் பின்னால் புலம் பெயர்ந்த தமிழர்கள் அணி திரள முற்பட்டால் இங்கே இலங்கைத் தீவில் எஞ்சியிருக்கும் எமது பரிதாபத்திற்குரிய தமிழினத்தின் தலைவிதி மீண்டும் ஒரு அழிவுப்பாதையை நோக்கி பயணிக்கப் போவது நிட்சயமே… இந்த இலங்கை இந்திய இளைஞர்களைக் கொண்டு இலங்கையில் ஒரு போர் சூழல் உருவாக்கப்படும் பட்சத்தில் அந்தப் போரிலே சுட்டு வீழ்த்தப்படும் ஒரு இளைய சமுதாயமொன்றின் படங்களுக்கு வெளி நாடுகளில் குத்து விளக்கேற்றி குங்குமப் பொட்டு வைத்து தொட்டுக் கும்பிட்டு கையோடு கலக்சனுக்கும் காசு போடும் அந்த கேடு கெட்ட கலாச்சாரமும் மீண்டும் மீண்டும் களைகட்டும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை… அப்படியொரு யுத்த சூழ்நிலை இலங்கையில் உருவாக்கப்பட்டு அதனால் அல்லல்படப் போகும் பாவப்பட்ட நமது தமிழ் சமுதாயமோ.. ஒரு கொட்டும் மழையிலே கட்டிய கந்தல் துணியுடன் குடிசை வாசல்களில் குந்தியிருந்து புரண்டோடும் ஒரு ஆற்று வெள்ளத்தில் கலந்தோடும் தமது சொந்த பந்தங்களின் இரத்தத்தை பார்த்து ஒப்பாரி வைத்தழும்போது அவர்களுக்கு இந்த தமிழீழ வியாபாரிகளோ அல்லது அவர்களுடன் கூட்டு வியாபாரம் நடத்தும் இந்த தமிழக‌ அரசியல்வாதிகளோ உதவிக்கு வரப் போவதில்லை என்பது உறுதி.. ஆனால் அவர்களை எந்த சந்தர்ப்பத்திலும் விட்டு விலகாது என்றும் அவர்களுடன் கலந்து வாழும் மனித நேயம் கொண்ட மனிதர்கள் மட்டும் இலங்கை அரசாங்கத்தின் மூலமோ அல்லது சர்வதேச தொண்டு நிறுவனங்கள் மூலமோ அவர்களுக்கு ஒரு மறுவாழ்வு கிடைக்க இதய சுத்தியுடன் இயங்கிக் கொண்டுதான் இருப்பார்கள்.. தங்கள் தமிழீழ வியாபாரத்திற்கு இடையூறாக இருக்கும் இப்படிப்பட்ட‌ மனிதத் தலைவர்களை தங்கள் இணையத் தளங்களில் “தேசத் துரோகிகள்” என்று பட்டம் சூட்டி இந்த தமிழீழ‌ வியாபாரிகள் தினமும் திட்டித் தீர்த்துக் கொண்டுதான் இருப்பார்கள்… (தொடரும்) அன்புடன் சித்திறெஜினா  Read More »

சூதாடிய தருமனும் துகிலுரிந்த துச்சாதனனும் (பாகம் 69) ‍ சித்திறெஜினா..! ”

ஏனைய செய்திகள்

வடக்கு இத்தாலியில் நில நடுக்கம்: 7 பேர் பலி

வடக்கு இத்தாலியில் நில நடுக்கம்: 7 பேர் பலி

இத்தாலியின் வடக்கே பல நகரங்களில் ஏற்பட்டுள்ள நில நடுக்கத்தினால் குறைந்தது 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர் (at EST 10:30 AM) , 50 பேர் வரையில் காயமடைந்துள்ளனர், பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. தொடர்புடைய விடயங்கள் உலகம், பருவநிலை மாற்றம் போலோங்னா நகரின் வடக்கே 35 கிலோமீட்டர் தொலைவில் (6.0-மக்னிடியூட் அளவில்) நள்ளிரவில் இந்த நில நடுக்கம் பதிவாகியுள்ளது. எமிலியா ரோமாங்னா பகுதியில் உள்ள கலாசார பாரம்பரிய முக்கியத்துவமிக்க பிரதேசம் இந்த நலநடுக்கத்தில் கடுமையான சேதமடைந்துள்ளது. பெருமளவிலானோர் கட்டட இடிபாடுகளுக்குள் [...]

வடக்கு, கிழக்கில் இராணுவத்தை அகற்றுமாறு அமெரிக்கா கோரிக்கை... // இலங்கை மீது அழுத்தம் கொடுக்க அமெரிக்காவைக் கோருகிறது மன்னிப்பு சபை

வடக்கு, கிழக்கில் இராணுவத்தை அகற்றுமாறு அமெரிக்கா கோரிக்கை… // இலங்கை மீது அழுத்தம் கொடுக்க அமெரிக்காவைக் கோருகிறது மன்னிப்பு சபை

இலங்கை மீது அழுத்தம் கொடுக்க அமெரிக்காவைக் கோருகிறது மன்னிப்பு சபை இலங்கையில் பொறுப்பு கூறும் தன்மையை அமுல்படுத்துமாறு அமெரிக்கா இலங்கைக்கு நெருக்குதல் கொடுக்க வேண்டுமென சர்வதேச மன்னிப்பு உரிமைக் காப்பகம் கோருகிறது. 30 வருட உள்நாட்டுப் போரில் இடம்பெற்ற துஷ்பிரயோகங்களுக்கு மார்ச் மாதம் இடம்பெற்ற ஐ. நா. மனித உரிமை சபையில் அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஹிலாரிகிளின்டன் எடுத்த நடவடிக்கைகள் பயன் தர இக்கூட்டத்தை பயன்படுத்த வேண்டுமென வாஷிங்டனிலுள்ள சர்வதேச மன்னிப்புச் சபையின் தலைவரான பிராங்ஐன்னுசி அறிக்கை [...]

தெரிவுக்குழுவில் கூட்டமைப்பு பங்குபெறும் சூழ்நிலை இல்லை...!!! மனோ கணேசன் // நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் பங்குபற்றுவது தொடர்பில் இன்னும் தீர்மானிக்கவில்லை...!!! இரா. சம்பந்தன்

தெரிவுக்குழுவில் கூட்டமைப்பு பங்குபெறும் சூழ்நிலை இல்லை…!!! மனோ கணேசன் // நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் பங்குபற்றுவது தொடர்பில் இன்னும் தீர்மானிக்கவில்லை…!!! இரா. சம்பந்தன்

நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் பங்குபற்றுவது தொடர்பில் இன்னும் தீர்மானிக்கவில்லை…!!! இரா. சம்பந்தன் இனப்பிரச்சினை தீர்வுக்கான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்குபற்றுவது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னும் தீர்மானிக்கவில்லை என்று கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று வீரகேசரி வார வெளியீட்டுக்குத் தெரிவித்தார். நாடாளுமன்ற தெரிவுக்குழு குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஐ.தே.கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினருக்குமிடையிலான பேச்சுவார்த்தை விவரங்களை ரணில் விக்கிரமசிங்க எம்மிடம் விபரித்தார். பேச்சு வார்த்தையில் கலந்து கொள்வதன் அவசியம் குறித்தும் அவர் எம்மிடம் [...]

சரத் பொன்சேகா விடுதலை: விடுதலை தொடர்பாக வெளிவரும் முரணான தகவல்கள்... // ஜனாதிபதி கையெழுத்து

சரத் பொன்சேகா விடுதலை: விடுதலை தொடர்பாக வெளிவரும் முரணான தகவல்கள்… // ஜனாதிபதி கையெழுத்து

விடுதலை தொடர்பாக வெளிவரும் முரணான தகவல்கள் முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா விடுதலை தொடர்பாக முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. சரத் பொன்சேகாவை விடுதலை செய்யும் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ எழுத்து மூல அறிவிப்பு இன்று சிறைச்சாலை ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்படும் என்று ஒரு சிங்கள பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. சரத்பொன்சேகா மீதான ஆயுதக் கொள்வனவு உடன்படிக்கை தொடர்பான வழக்கில் 30 மாத கால தண்டனை கடந்த மாதம் முடிவடைந்தது. அவர் தற்போது வெள்ளைக் கொடி [...]

முல்லைத்தீவு: மீண்டும் துளிர்விடும் நம்பிக்கை...

முல்லைத்தீவு: மீண்டும் துளிர்விடும் நம்பிக்கை…

தெளிந்த நீரில் பல்வேறு வகையான பறவைகள் தமக்கான இரையைத் தேடிக்கொண்டிருக்கின்றன. நன்னீர் மீன்கள் நிறைந்து காணப்படுவதால், இரை தேடுவதற்காக பல இடம்பெயர் பறவைகள் அங்கு குழுமியிருக்கின்றன. அப்பகுதியைச் சூழவிருந்த கண்ணிவெடிகள் அப்புறப்படுத்தப்பட்டதால், நந்திக் கடல் ஏரிப் பகுதி இப்போது மீன்பிடிப்பில் மீண்டும் பிரசித்தமாகியிருக்கின்றது. கடந்த காலப் பயங்கரங்களையெல்லாம் தன்னுள் விழுங்கிய படியே நிச்சலனமற்றிருக்கிறது நந்திக் கடல். இன்று அப்பகுதி அமைதியாகக் காட்சி தந்தாலும், தயானி (வயது 24), ஜெகதாஸ் (வயது 36) தம்பதியினருக்கு, நந்திக்கடல் இன்னமும் பயங்கரமானதாகவே [...]

குழந்தைகளுக்கு வில்லனாகும் டிவி ரியாலிட்டி ஷோக்கள்...

குழந்தைகளுக்கு வில்லனாகும் டிவி ரியாலிட்டி ஷோக்கள்…

தொலைக்காட்சிகளில் குழந்தைகள் பங்கேற்கும் டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகளினால் பெரும்பாலான குழந்தைகள் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வரும் குழந்தைகளுடன் தமது குழந்தைகளை பெற்றோர்கள் ஒப்பிட்டு பேசுவதால் குழந்தைகளுக்கு மன அழுத்தம் அதனைத் தொடர்ந்து உடல் நல பாதிப்பும் ஏற்படும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். பிரபலமான தொலைக்காட்சியில் பிரசித்தி பெற்ற ரியாலிட்டி ஷோ. சீசன் 3 வரை வந்து விட்டது. சின்னக்குழந்தை ஒன்று மைக் பிடித்து அழகாக பாடிக்கொண்டிருக்கிறது. அந்த நிகழ்ச்சிக்கு வந்திருப்பவர்களோ குற்றம் [...]

புலிகளுக்கு எதிராக கோதபய இந்தியாவை இழுத்தது எப்படி...???

புலிகளுக்கு எதிராக கோதபய இந்தியாவை இழுத்தது எப்படி…???

கொழும்பு, மே 19: விடுதலைப் புலிகளுக்கு எதிரான சண்டையில் சாமர்த்தியமாக இந்திய அரசைச் சேர்த்தது எப்படி என்பதையும் இந்திய அரசியல் தலைவர்களுக்கு அதில் முக்கியப் பங்கு இல்லாமல் தவிர்த்தது எப்படி என்பதையும் புதிய புத்தகம் ஒன்று விவரிக்கிறது.   விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை அரசு போர் நடத்தி அதில் வெற்றியும் பெற்ற 3-வது ஆண்டு தினத்தையொட்டி இந்தப் புத்தகம் வெளியிடப்படுகிறது. சி.ஏ. சந்திரபிரேம என்ற பத்திரிகையாளர் எழுதிய இந் நூலுக்கு “”கோதா’வின் யுத்தம்” என்று தலைப்பிடப்பட்டிருக்கிறது.   இலங்கை [...]

சிங்கள மக்களின் நல்லிணக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதற்காக சரத் பொன்சேகாவை விடுதலை செய்யும் அரசாங்கம் தமிழ் அரசியல் கைதிகளையும் விடுவிக்க வேண்டும்...!!! தமீழீழ மக்கள் விடுதலைக் கழகத் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன்

சிங்கள மக்களின் நல்லிணக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதற்காக சரத் பொன்சேகாவை விடுதலை செய்யும் அரசாங்கம் தமிழ் அரசியல் கைதிகளையும் விடுவிக்க வேண்டும்…!!! தமீழீழ மக்கள் விடுதலைக் கழகத் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன்

சிங்கள மக்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதற்காக சரத் பொன்சேகாவை விடுதலை செய்யும் அரசாங்கம் ஏன் தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்து தமிழ் மக்களுடனான நல்லிணக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள முயலவில்லை என தமீழீழ மக்கள் விடுதலைக் கழகத் (PLOTE) தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன்  கேள்வியெழுப்பியுள்ளார். தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஏற்கனவே பல்வேறு சந்தர்ப்பங்களிலும் சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் பேச்சுக்களை நடத்தி வந்தோம். தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அரசாங்கத்துடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளோம். தேசிய நல்லிணக்கம் [...]

LTTE killed Rajiv Gandhi 21 years ago (May 21, 1991)

LTTE killed Rajiv Gandhi 21 years ago (May 21, 1991)

The 21st death anniversary of former Indian Prime Minister Rajiv Gandhi falls tomorrow. LTTE terrorists used a human bomb on May 21, 1991 to assassinate him in Sriperumbudur in Tamil Nadu. The Tigers used Thenmozhi Rajaratnam, also known as Dhanu, for the suicide attack at a political rally, killing Gandhi and 14 others. The 46-year-old [...]

'நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரை அமலாக்கலை பகிரங்கப்படுத்த வேண்டும்'

‘நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரை அமலாக்கலை பகிரங்கப்படுத்த வேண்டும்’

அமெரிக்க அரசுத்துறைச் செயலர் ஹிலாரி கிளிண்டனைச் சந்தித்த இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி. எல். பீரிஸ் அவர்கள், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கான திட்டம் குறித்து தமது சிரத்தை மிக்க, முழுமையான அணுகுமுறையை அவரிடம் விளக்கியதாக அரசுத்துறையின் சார்பில் பேசவல்ல ஒருவர் தெரிவித்துள்ளார். ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமல் படுத்துவதற்கான திட்டத்தில், அதனை பகிரங்கமாக்கவும், இலங்கைக்கு உள்ளேயும் வெளியேயும் இருப்பவர்கள் அறிந்துகொள்வதற்கு ஏதுவானதாக்கவும் தேவையானவையும் உள்ளடங்குவதாக அமெரிக்க அர்சுத்துறையின் சார்பில் பேசவல்ல விக்டோரியா நுலண்ட் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களின் கேள்விகளுக்கு [...]

இரட்டைத் தேசியம், எங்கிருந்து தொடங்குவது...???  ந.இரவீந்திரன்

இரட்டைத் தேசியம், எங்கிருந்து தொடங்குவது…??? ந.இரவீந்திரன்

இவ்வுலகத்துக்கான தீர்மானத்தன்மையுள்ள ஓர் அறிவியலின் பகுதியாகவும், மறுக்கக்கூடாத சம்பிரதாயமுமாய் “மார்க்சியம்” பார்க்கப்படுவதைக்கண்ட மார்க்ஸ், ‘நல்லவேளை நான் ஒரு மார்க்சிஸ்ட்டில்லை’ என்று சொல்லவேண்டியிருந்தது. எத்தகைய இறுக்கமான முடிந்த முடிவுகளை மார்க்சியத்தின் பேரால் முன்வைப்பதையும், அதனை ஒரு பொருளாதார வாதமாய் முடக்குவதையும் கார்ல் மார்க்ஸ் வெறுத்தார். “ஒவ்வொரு மக்கள் சமுதாயமும் தாம் எந்தெந்த வரலாற்றுச் சூழ்நிலைகளில் வசிக்க நேர்ந்தாலும், அவர்கள் மீது விதி சுமத்தும் பொதுவான வாழ்க்கைப் போக்கு பற்றிய ஒரு வரலாற்றியல்-மெய்யியல் கோட்பாடு மட்டுமே தம் படைப்பு” என்று [...]

புத்தரின் புனித பொருள்களை இலங்கைக்கு அனுப்பக் கூடாது...!!! வைகோ

புத்தரின் புனித பொருள்களை இலங்கைக்கு அனுப்பக் கூடாது…!!! வைகோ

பௌத்த சமயத்தைத் தோற்றுவித்த புத்தரின் எலும்புகள் உள்ளிட்ட புனித பொருள்கள் இலங்கையில் காட்சிப்படுத்துவதற்காக, டில்லியிலிருந்து அனுப்பப்பட இருக்கின்றன. இதனைக் கண்டித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இன்று கடிதம் எழுதியிருக்கிறார். அக்கடிதத்தில் வைகோ குறிப்பிட்டிருப்பதாவது; டில்லியில் உள்ள தேசிய ஆவணக்காப்பகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள, புத்த பெருமானின் எலும்புகள் உள்ளிட்ட புனித பொருள்களை, வருகின்ற ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி முதல், செப்டெம்பர் மாதம் 5 ஆம் திகதி வரையிலும், இலங்கை முழுவதும் [...]

அமைச்சர்.பீரிஸ்-ஹிலாரி சந்திப்பு: விக்ரோரியா நுலன்ட் விளக்கம் (பட இணைப்பு)

அமைச்சர்.பீரிஸ்-ஹிலாரி சந்திப்பு: விக்ரோரியா நுலன்ட் விளக்கம் (பட இணைப்பு)

வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசுக்கும் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரனுக்கும் இடையிலான சந்திப்பு மற்றும் அதில் பேசப்பட்ட விடயங்கள் குறித்து இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் விக்ரோரியா நுலன்ட் விளக்கமளித்துள்ளார். வொசிங்டனில் நேற்று நண்பகல் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் அளித்த விளக்கங்கள் வருமாறு- கேள்வி – இலங்கை வெளிவிவகார அமைச்சருடன் இன்றுகாலை இராஜாங்கச் செயலர் நடத்திய சந்திப்பு குறித்து தெளிவுபடுத்த முடியுமா? நுலன்ட் – இலங்கை வெளிவிவகார அமைச்சருடன் இராஜாங்கச்செயலர் இன்றுகாலை 45 நிமிடங்கள் சந்தித்துப் பேசினார். [...]

 முள்ளி வாய்க்கால் துயர் பகிர்வு நிகழ்வு

முள்ளி வாய்க்கால் துயர் பகிர்வு நிகழ்வு

மே 18 முள்ளி வாய்க்கால் துயர் பகிர்வு நிகழ்வு நேற்று பிற்பகல் 5.00 மணியளவில் யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியில் அமைந்துள்ள இலங்கை தமிழரசுக்கடசியின் அலுவலகத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உப தலைவர் பேராசிரியர் எஸ். சிற்றம்பலம் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் முள்ளிவாய்க்கால் உட்பட ஏனைய இடங்களில் படுகொலை செய்யப்பட்ட மக்களின் ஆத்ம சாந்தி வேண்டி மெழுகுதிரிகள் ஏற்றப்பட்டதுடன் தீபங்களும் ஏற்றப்பட்டன. இந்நிகழ்வில் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழசுக் கட்சியின் செயலாளருமான மாவை சேனாதிராசா சீ.வீ.கே.சிவஞானம் [...]

தமிழ் - ஆங்கில நாவல்களில் ஈழ அரசியல்: யமுனா ராஜேந்திரனி​ன் ஆய்வுரை (Saturday, May 19th)

தமிழ் – ஆங்கில நாவல்களில் ஈழ அரசியல்: யமுனா ராஜேந்திரனி​ன் ஆய்வுரை (Saturday, May 19th)

தமிழ் – ஆங்கில நாவல்களில் ஈழ அரசியல்: யமுனா ராஜேந்திரனி​ன் ஆய்வுரை  

யுத்த வெற்றியின் மூன்றாவது ஆண்டு நிறைவு விழா (பட இணைப்பு)

யுத்த வெற்றியின் மூன்றாவது ஆண்டு நிறைவு விழா (பட இணைப்பு)

யுத்த வெற்றியின் மூன்றாவது ஆண்டு நிறைவு விழா இன்று காலி முகத்திடலில் நடைபெற்றது. இதில் சர்வமத தலைவர்கள் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் முப்படை மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகள் வெளிநாட்டு இராஜதந்திரிகள் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ஜனாதிபதி காலி முகத்திடலுக்கு வருகைத்தந்ததைத் தொடர்ந்து தேசிய வெற்றி விழா ஆரம்பமானது. மேள வாத்தியங்கள் முழங்க ஜனாதிபதி தேசிய கொடியை ஏற்றினார். தொடர்ந்து முப்படையினர் மற்றும் பொலிஸாரின் அணி வகுப்பை ஜனாதிபதி பார்வையிட்டார். ஜனாதிபதிக்கு மரியாதை செலுத்தும் [...]

இராணுவ முகாம்கள் அகற்றப்படாது...!!! ஜனாதிபதி

இராணுவ முகாம்கள் அகற்றப்படாது…!!! ஜனாதிபதி

நாட்டில் அச்சுறுத்தல்கள் இருக்கும் வரை எந்தவொரு இராணுவ முகாம்களும் அகற்றப்படாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பு காலிமுகத்திடலில் இடம்பெற்ற, யுத்த வெற்றியின் மூன்றாம் ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றும்போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார். In English: Sri Lanka’s president rejects demands to rollback military camps By athirady • May 19, 2012

இது கவிதையல்ல... உடுப்புக்குளம் ராணிஸ்ரீ

இது கவிதையல்ல… உடுப்புக்குளம் ராணிஸ்ரீ

   இது கவிதையல்ல…   மனிதமுள்ள உலகத்தாருக்கு…!!! மரணித்துக் கொண்டிருக்கும் மக்களின் குரலிது…!!!    போரினால் துரத்தப்பட்டோம் வளமான வன்னிவிட்டு…!!! பட்டினியால் புதைக்கப்பட்டோம் துயர் சுமந்த மாத்தளனில்…!!! எறிகணைகள் எமை அறுக்க இறந்தோம் நாம் பொக்கனையில்…!!! முள்ளி வாய்க்கள் மண்ணிலே முகவரிகள் தாளிழந்து போக இடமின்றி அனுப்பப்பட்டோம் அகதி முகம்…!!!    அடைக்கப்படோம் அவலப்பட்டோம் அர்த்த சாமத்திலும் அழுதோம் ஆதரவுக்கு யாருமில்லாமல்…    துன்பப்பட்டோம் துயர் சுமந்தோம் இடர் நீக்கும் இதயங்களை இப் பாரினில் காணாமல்…    [...]

இறுதிக் கவிதை...

இறுதிக் கவிதை…

இறுதிக் கவிதை மொழிபெயர்த்தவர் – வளர்மதி என் குருதியை மரணித்த என் உடல் போர்த்திய துணியை என் உடலில் எஞ்சியிருப்பது அத்தனையும் எடுத்துச் செல்லுங்கள் கல்லறையில் தனித்திருக்கும் என் பிணத்தைப் புகைப்படமெடுங்கள் புவியெங்கும் அனுப்பி வையுங்கள் மனச்சான்றுள்ளோரும் நீதியரசரும் கொள்கைவழிப்பட்டோரும் நற்சிந்தையோரும் காண அனுப்பி வையுங்கள் கபடமறியா இவ்வான்மாவின் சுமையை வெட்கித் தலைகுனிந்து உலகின்முன் அவர்கள் சுமக்கட்டும் ”அமைதியின் பாதுகாவலர்” கரங்களில் பாவக்கறை படியாத பாழ்பட்ட இவ்வான்மா பட்ட துயரை தம் மழலையர்முன் அவர்கள் சுமக்கட்டும். – [...]

அருண் தம்பிமுத்துவின் கேள்விக்கணையால் வாயடைத்துப் போனார் சனல் 4 இயக்குநர்... // என்னுடைய மாமாவை புலிகள் சுட்டுக்கொண்டார்கள்...!!! ஜான் ஜனநாயகம் (YouTube)

அருண் தம்பிமுத்துவின் கேள்விக்கணையால் வாயடைத்துப் போனார் சனல் 4 இயக்குநர்… // என்னுடைய மாமாவை புலிகள் சுட்டுக்கொண்டார்கள்…!!! ஜான் ஜனநாயகம் (YouTube)

என்னுடைய மாமாவை புலிகள் சுட்டுக்கொண்டார்கள்! ஜான் ஜனநாயகம் ‘இலங்கை – நல்லிணக்கமும் நீதியும்’ என்ற தலைப்பில் நேற்றுமுன்தினம் இரவு லண்டனில் உள்ள புரொன்ட்லைன் கிளப்பில் இடம்பெற்ற தொலைக்காட்சி விவாதத்தில் கலந்துகொண்ட புலிகளின் தீவிர ஆதரவாளரான ஜான் ஜனநாயகம் தனது அங்கிள் (மாமா அல்லது சித்தப்பா அல்லது பெரியப்பா) புலிகளால் படுகொலை செய்யப்பட்டார் என்றும் புலிகளின் மிருகத்தனமான பல்வேறு மனித குலத்திற்கு எதிரான செயற்பாடுகளை தான் அறிந்து வைத்திருந்தாகவும் தெரிவித்துள்ளார். அருண் தம்பிமுத்துவின் கேள்விக்கணையால் வாயடைத்துப் போனார் சனல் [...]

புலிக்கு ஆலவட்டம் பிடித்து முள்ளிவாய்க்கால் வரை மனித பேரழிவுக்கு துணை போன வாக்கு சேர்க்கும் கூட்டத்தில்  ஓர் ஓநாயின் மாய அலறல்...

புலிக்கு ஆலவட்டம் பிடித்து முள்ளிவாய்க்கால் வரை மனித பேரழிவுக்கு துணை போன வாக்கு சேர்க்கும் கூட்டத்தில் ஓர் ஓநாயின் மாய அலறல்…

 ”எங்கள் உறவுகளுக்காக அழ முடியாத ஜனநாயக நாட்டில் நாங்கள் இருக்கின்றோம்…  தென்பகுதி போர் வெற்றிக் கொண்டாட்டம் தமிழர்களின் கண்ணீரில் நெருப்பை மூட்டுவதாக இருக்கிறது’”என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும்… புலிக்கு ஆலவட்டம் பிடித்து முள்ளிவாய்க்கால் வரை மனித பேரழிவுக்கு துணை போன வாக்கு சேர்க்கும் கூட்டத்தில்  அங்கம் வகிக்கும் ஓர்  ஓநா ய் மாவை சேனாதிராசா தெரிவித்தார் முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரின் போது உயிரிழந்தவர்களின் நினைவஞ்சலிக் கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாடில் இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ். [...]

ஓர் முகவரியில்லா இணையத்தின் அஞ்சல் முகவரி திருட்டு...???

ஓர் முகவரியில்லா இணையத்தின் அஞ்சல் முகவரி திருட்டு…???

ஓர் முகவரியில்லா இணையத்தின்  மின்னஞ்சல் முகவரி திருடப்பட்டுள்ளது….???  வாசகர்களே அவதானமாக இருந்து கொள்ளுங்கள். ஓர் முகவரியில்லா இணையத்தின்  வருகையை விரும்பாத தீயசக்திகளின் நடவடிக்கையே இந்த திருட்டு நடவடிக்கையாகும். கடந்த காலங்களில் பல்வேறு அச்சுறுத்தல்கள்…??? கொலை மிரட்டல்கள்…??? ஓர் முகவரியில்லா இணையத்தின்  வரவை தடுத்தல் என்று தொடர்ந்த சதி நடவடிக்கை தற்போது மின்னஞ்சல் முகவரியை திருடி ஓர் முகவரியில்லா இணையத்தின்  வரவை தடுப்பதற்கான முயற்சிகள என பல்வேறு மட்டங்களில் இருந்து இடம்பெறுவதாக தெரியவந்துள்ளது…. hmmm…!!! ஆகவே முகவரியில்லா இணையத்தினர் தமது அன்புக்குரிய வாசகர்களுடனான  தொடர்புகளை புதிய மின்னஞ்சல் முகவரி ஊடாக தொடரலாம் என்ற செய்தியை பகிர்ந்து [...]

இலங்கைக்கு உச்ச அளவிலான ஒத்துழைப்பை வழங்க சீனா தயார்... சீன அரசியல் பேரவை தூதுக் குழு ஜனாதிபதியிடம் உறுதி...!!!

இலங்கைக்கு உச்ச அளவிலான ஒத்துழைப்பை வழங்க சீனா தயார்… சீன அரசியல் பேரவை தூதுக் குழு ஜனாதிபதியிடம் உறுதி…!!!

இலங்கையின் வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலாத் துறை மேம்பாட்டுக்கு சீனா உச்ச அளவில் ஒத்துழைப்பு வழங்க முன் வந்துள்ளது. உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள சீன அரசியல் பேரவையின் தூதுக் குழுவினர் நேற்று முன்தினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியபோதே இந்த இணக்கப்பாட்டைத் தெரிவி த்துள்ளனர். அலரிமாளிகையில் நடைபெற்றுள்ள இந்த பேச்சுவார்த்தையில் சீன அரசியல் பேரவையின் உறுப்பினர்கள் மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர் மட்டப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டுள்ளனர். [...]

சரத் பொன்சேகாவுக்கு பிணையில் செல்ல அனுமதி... // தேசிய பிரச்சினைத் தீர்வுக்கு அரசாங்கத்துக்கு உதவத் தயார்... ரணில்

சரத் பொன்சேகாவுக்கு பிணையில் செல்ல அனுமதி… // தேசிய பிரச்சினைத் தீர்வுக்கு அரசாங்கத்துக்கு உதவத் தயார்… ரணில்

தேசிய பிரச்சினைத் தீர்வுக்கு அரசாங்கத்துக்கு உதவத் தயார்… ரணில் அரசியல் தீர்வை மையப்படுத்திய பாராளுமன்ற தெரிவுக் குழுவின் நிகழ்ச்சி நிரலைத் தயாரிக்க அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது. இதனை ஏற்றுக் கொண்டுள்ளதுடன் தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காண அரசாங்கத்திற்கு உதவத் தயாராகவே உள்ளோம். ஆனால் அரசாங்கம் வெளிப்படைத் தன்மையினைப் பாதுகாக்க வேண்டும் என்று எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்க தெரிவித்தார். யுத்தத்தின் போது வன்னியில் இரண்டு இலட்சம் பேர் மாத்திரமே பட்டினியில் கிடந்தார்கள். ஆனால் இன்று [...]

இடம்பெயர்ந்தவர்களுக்கு மட்டுமன்றி முன்னாள் போராளிகளுக்கும் அரசு மீள்வாழ்வளிக்கிறது

இடம்பெயர்ந்தவர்களுக்கு மட்டுமன்றி முன்னாள் போராளிகளுக்கும் அரசு மீள்வாழ்வளிக்கிறது

எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதிகளுக்கு எதிரான யுத்தத்தில் அரச படைகள் வெற்றிகண்டு, இந்நாட்டு மக்களை பயங்கர வாத பிடியில் இருந்து விடுவித்து, அவர்களுக்கு சுதந்தி ரமான சூழலில் நிம்மதியான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும் பெரும் சாதனையை அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது. பயங்கரவாதிகள் ஒழிக்கப்பட்டதை அடுத்து யுத்தத்தினால் சீர்குலைந்து போன நாட்டின் வடக்கு கிழக்கு மாகாணங்களை அபிவிருத்தி செய் யும் பணியில் அரசாங்கம் தீவிரமாக ஈடுபட்டு மக்களின் வாழ்க்கை க்கு அத்தியாவசியமான உட்கட்டமைப்பு வசதிகளுடன் நெடுஞ்சா லைகள், மேம்பாலங்கள், பாலங்கள் ஆகியவற்றையும் செய்து [...]

யாழ் பல்கலைக்கழக மாணவர் சங்க செயலாளர் தர்ஷானந்த் மீது தாக்குதல்... தாக்கப்பட்டதைக் கண்டித்து... பாதுகாப்பு வழங்க கோரி ஆர்ப்பாட்டம்... !!! - BBC // யாழ். மாவட்டத்தின் கல்வித்தரத்தை மேம்படுத்த சிறப்புத் திட்டம் ஒன்று வகுக்கப்பட வேண்டும்...!!! - ஈ.பி.டி.பி பா.உ

யாழ் பல்கலைக்கழக மாணவர் சங்க செயலாளர் தர்ஷானந்த் மீது தாக்குதல்… தாக்கப்பட்டதைக் கண்டித்து… பாதுகாப்பு வழங்க கோரி ஆர்ப்பாட்டம்… !!! – BBC // யாழ். மாவட்டத்தின் கல்வித்தரத்தை மேம்படுத்த சிறப்புத் திட்டம் ஒன்று வகுக்கப்பட வேண்டும்…!!! – ஈ.பி.டி.பி பா.உ

யாழ் பல்கலைக்கழக மாணவர் சங்க செயலாளர் தர்ஷானந்த் மீது தாக்குதல்…  தாக்கப்பட்டதைக் கண்டித்து… பாதுகாப்பு வழங்க கோரி ஆர்ப்பாட்டம்… !!! – BBC யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் பரமலிங்கம் தர்ஷானந்த் (24 வயது) அடையாளம் தெரியாதவர்களினால் தாக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் கலட்டிச் சந்தியில் வைத்து இவர் ஆயுததாரிகளால் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மாணவரின் செவ்வி உள்ளடங்கலான தகவல்கள் (ஒலி)   மாணவர் மீதான தாக்குதல் குறித்த செய்தி  யாழ் பல்கலைக்கழக மாணவர் மீதான தாக்குதல் குறித்த செய்தி. [...]

யுத்தத்தில் கொல்லப்பட்டவர்கள், காணாமல்போனோருக்காக தீபமேற்றிப் பிரார்த்திக்குமாறு த.தே.கூ. வேண்டுகோள்

யுத்தத்தில் கொல்லப்பட்டவர்கள், காணாமல்போனோருக்காக தீபமேற்றிப் பிரார்த்திக்குமாறு த.தே.கூ. வேண்டுகோள்

இறுதிக்கட்ட யுத்தத்தில் கொல்லப்பட்டவர்கள், காணாமல் போனவர்களை இன்றைய தினம் நினைவுகூர்ந்து அவர்களுக்காக தீபமேற்றி ஆத்மசாந்திப் பிரார்த்தனையில் ஈடுபடுமாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இதேவேளை, கொல்லப்பட்டவர்கள், காணாமல் போனவர்கள் தொடர்பாக இலங்கை பொறுப்புக் கூறுவதற்கு சர்வதேசம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. வீரகேசரி சகோதர வெளியீடான யாழ். ஓசைக்கு கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராஜா வழங்கிய நேர்காணலின்போதே இதனைத் தெரிவித்துள்ளார். “இலங்கையில் இன முரண்பாடு காரணமாக குறிப்பாக 2009 ஆம் ஆண்டு காலத்திற்கு இடைப்பட்ட [...]

இராணுவத்தினரிடம் சரணடையாத புலி உறுப்பினர்கள் மக்கள் மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்...!!! கோத்தபாய

இராணுவத்தினரிடம் சரணடையாத புலி உறுப்பினர்கள் மக்கள் மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்…!!! கோத்தபாய

இறுதிக்கட்டப் போரின் போது இராணுவத்தினரிடம் சரணடையாத தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள், மக்கள் மத்தியில் வாழ்ந்து வருவதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாள்தோறும் மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. சரணடையாதவர்கள் யார் யார் என்பது இன்னமும் புலனாகவில்லை. இவ்வாறு சரணடையாது மக்களுடன் மக்களாக புலி உறுப்பினர்கள் வாழ்ந்து வருவது நாட்டுக்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. பல நாடுகளில் இயங்கிவரும் சில அமைப்புக்கள் நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் ஏற்படுத்த முயற்சி எடுத்து வருகின்றன என [...]

lபுலம்பெயர் இலங்கையர்களுக்கு இரட்டைப் பிரஜாவுரிமை

lபுலம்பெயர் இலங்கையர்களுக்கு இரட்டைப் பிரஜாவுரிமை

புலம்பெயர் இலங்கையர்களுக்கு இரட்டைப் பிரஜாவுரிமை வழங்குவதற்காக குடிவரவு, குடியகல்வு சட்டத்தில் திருத்தம் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.இலங்கையிலிருந்து வெளிநாடு சென்ற பலர் இலங்கைப் பிரஜாவுரிமையை இழந்துள்ளனர். இவர்கள் மீண்டும் இலங்கைப் பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொள்ளும் வகையில் இந்தத் திருத்தங்கள் செய்யப்படவுள்ளன. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். வெளிநாடுகளில் பிரஜாவுரிமை பெற்றுக்கொண்ட புலம்பெயர் இலங்கையருக்கு மீண்டும் இலங்கைப் பிரஜாவுரிமையை இலகுவாக பெற்றுக்கொள்ள இது வசதியாக இருக்கும் [...]

போரும் வாழ்வும்: முள்ளிவாய்க்கால் நினைவுகள்...

போரும் வாழ்வும்: முள்ளிவாய்க்கால் நினைவுகள்…

  நேர்காணல்: முள்ளிவாய்க்கால்: “மிகவும் கோரமான சம்பவங்களின் சாட்சியாக நான் இருக்கிறேன்”   பாஷண அபேவர்த்தன தமிழில்: மீராபாரதி  நீங்கள், இலங்கையில் ஜனநாயகத்திற்கான பத்திரிகையாளர்கள் (Journalists for Democracy in Sri Lanka- JDS) என்ற உங்கள் அமைப்பினர், நண்பர்கள் ஆகியோர் பங்களிப்பு இல்லாமல் சர்வதேசச் சமூகத்தையே உலுக்கிய கைப்பேசி வீடியோவில் எடுக்கப்பட்ட படுகொலைக் காட்சிகள் வெளிச்சத்துக்கு வந்திருக்க மாட்டா. இந்த வீடியோ படங்களை சானல் 4 தொலைக்காட்சிக்குத்தான் வழங்க வேண்டுமென எப்படித் தீர்மானித்தீர்கள்? முதலில் நான் [...]