இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி….! அமரர் திரு.இராமலிங்கம் பசுபதிபிள்ளை (சின்னைய்யா)


Warning: strpos() [function.strpos]: Offset not contained in string in /usr/www/users/webone/wp-content/themes/options_old2/app/loop-functions.php on line 69

இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி….! அமரர் திரு.இராமலிங்கம் பசுபதிபிள்ளை (சின்னைய்யா) புங்குடுதீவு 3ம் வட்டாரம் யாழ்ப்பானம் ஆர்.பி ஸ்டோஸ் உறிமையாளர் அன்பிற்கு இலக்கணமாய் பண்பிற்கு சிகரமாய் பாசத்திற்கு ஒளிவிளக்காய் வாழ்ந்து எமை பாரினிலே எமை வளர்த்து பரிதவிக்கவிட்டு சென்ற எம் தெய்வமே! கண்ணை இமைக் காப்பது போல் எமை காவல் காத்த எம் காவல் தெய்வமே! விழி நீர் ஓயவில்லை இராண்;டு சென்றதுவே கண்முன்னே நடப்பது போல் நினைவுகள் வாட்டுகின்றன துணையின்றி உம்பிரிவால் நடைபிணம் போல் நிற்கின்றோம். பூப்போன்று என்னை என் செல்வங்கள் பார்த்தாலும் என் மனப்பாரம் இறக்கிவைக்க முடியவில்லை நாள்தோறும் உம் செல்வங்கள் உமக்கு பூ வைத்து வணங்குகின்றனர்…!! புங்குடுதீவு 3ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் கொழும்பு பொரலையை வதிவிடமாகவும் கொண்ட யாழ்ப்பானம் ஆர்.பி ஸ்டோஸ் உறிமையாளருமான அமரர் திரு.இராமலிங்கம் பசுபதிபிள்ளை (சின்னைய்யா) அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி. அன்னார், திரு.திருமதி. இராமலிங்கம் தம்பதிகளின் அன்பு மகனும் , திருமதி.புவனேஸ்வரி  அவர்களின் அன்புக் கணவரும் ,  ஜெயபாலன் , ஜெயகுமார் , ஜெசுகந்தன்  , ஜெயகாந்தன்  ,  ஜெயசிலன்  , ஜெயபரமேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்  ஆவார். அன்னாரின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி  23.12.2011 இன்று அன்னாரி கொழும்பு இல்லத்தில் நடைபெறும் என்பதினை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் தெரிவித்து கொள்வதேடு அன்னாரின் ஆத்மசாந்திக்காக பிராத்திக்கும் வன்னம் கேட்டுகொள்கின்றோம்.. தகவல் : மனைவி மற்றும் மகன்மார்கள் ஜெயபாலன்  லண்டன்   balanleicester@hotmail.co.uk ஜெயகுமார்  இலங்கை +94773507390 ஜெயசிலன்  இலங்கை   +94776366434  Read More »

இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி….! அமரர் திரு.இராமலிங்கம் பசுபதிபிள்ளை (சின்னைய்யா)

சூதாடிய தருமனும் துகிலுரிந்த துச்சாதனனும் (பாகம் 69) ‍ சித்திறெஜினா..! ”


Warning: strpos() [function.strpos]: Offset not contained in string in /usr/www/users/webone/wp-content/themes/options_old2/app/loop-functions.php on line 69

அண்மையில் ஒரு அரசியல் நிகழ்வொன்றில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்.. கடந்த காலங்களில் நாமே எமக்கான புதைகுழிகளை தோண்டியிருக்கின்றோம். தற்போது இந்நிலை மாறியுள்ளது… இந்த அமைதிச் சூழலை நாம் அனைவரும் பாதுகாக்கும் நிலையிலேயே ஒளிமயமான எதிர்காலம் ஒன்றை நோக்கி எம்மால் பயணிக்க முடியும் என்றும் பின்னர் இன்னொரு சந்தர்ப்பத்தில் எதிர்ப்பு அரசியலின் மூலம் எதனையும் சாதிக்க முடியாது.. ஆனால் இணக்க அரசியலின் மூலம்தான் அதைச் சாதிக்க முடியும்.. என்றும் அவர் கூறியிருக்கும் வார்த்தைகள் உண்மையில் அர்த்தமுள்ளவைகள்தான்… அதேபோல‌.. புலிகள் தமிழ் ஈழம் எடுத்து தருவார்கள் .. தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் விடுதலைக்காக குரல் கொடுக்கும் என்றும் இனியும் வட கிழக்கு மக்கள் நம்புவார்களாயின் அவர்களை கடவுளினால் கூட காப்பாற்ற முடியாது.. என்று புளொட் இயக்கத்தின் தலைவர் சித்தார்த்தன் அவர்கள் கூறியிருப்பதையும் பார்க்கும்போது இவர்கள் அரசியல் சூதாட்டங்களை கடந்து அதற்கு அப்பால் இலங்கைத் தமிழினம் மீண்டும் ஒரு மனித‌ப் பேரழிவில் விழுந்து விடாமல் தடுக்க‌ விடுக்கப்படும் ஒரு எச்சரிக்கையாகவே இந்த வார்த்தைகளை கணிக்க முடிகிறது… இவர்கள் கூறியிருக்கும் இந்த கூற்றுகளில்தான் எத்தனை உண்மைகள் புதைந்து கிடக்கின்றன.. அந்தத் தமிழீழம் என்ற வார்த்தையில்தான் எத்தனை அழிவுகள் மறைந்து கிடக்கின்றன‌… இலங்கையில் தாங்கள் வாழ்ந்த சொந்த‌ மண்ணிலேயே தங்கள் சொத்தை இழந்து.. சொந்த பந்தங்களை இழந்து.. அனுதினமும் கண்ணீர் வடிக்கும் பரிதாபத்திற்குரிய‌ மக்கள்.. பெற்றோரை இழந்து தவிக்கும் பச்சிளம் பிள்ளைகள்.. தாலாட்டி சீராட்டி பாராட்டி வழர்ந்த தம் பிள்ளைச் செல்வங்களை போருக்கு பலி கொடுத்து பரிதவிக்கும் பெற்றோர்கள்.. கணவன்மார்களை பறிகொடுத்து பித்துப் பிடித்தலையும் அந்த மனைவிகள்.. கொலைகள்.. ஆட்கடத்தல்கள்.. குண்டு வெடிப்புகள்.. இவைகள் அனைத்துமே அன்றைய புலிகளின் காலகட்டத்தில் இலங்கைப் பத்திரிகைகளில் வெளி வந்து நெஞ்சை பதற வைத்து இரத்தத்தை உறைய வைத்த செய்திகளாக இருந்தன‌.. ஆனால் அன்றைய கால கட்டத்தில் இவைகள் யாவுமே வெளி நாடுகளில் வாழும் சிலருக்கு அவர்கள் வாழ்க்கையில் செல்வம் கொழிக்க‌ வைக்கும் விளம்பரங்களாக அமைந்திருந்தன‌.. . இப்படிப்பட்ட‌ விளம்பரங்களை செய்து அதனால் பலனடைந்தவர்கள் யாவரும் தமிழினத்தின் கண்ணீர் வெள்ளத்தில் தங்கள் வாழ்க்கை படகை வழமாகச் செலுத்தத் தெரிந்த‌ கில்லாடிகளாக‌ இருந்தார்கள்… ஆம் இந்தக் கண்ணீர் வடிப்புகளும் கதறல்களும் பரிதபிப்புகளும் இலங்கையில் இல்லாமல் போயிருந்தால்.. வெளி நாடுகளில் இவர்கள் வாழ்க்கையிலும் வசந்த காலம் என்பது இல்லாமல் போயிருக்கும்.. ஆகவே இவைகள் யாவும் தொடர்ந்து அங்கே நடைபெற்றுக் கொண்டிருக்க‌ வேண்டும் என்ற காரணத்திற்காகத்தான் அன்று அந்த பஞ்சமா பாதகங்கள் இலங்கையில் நடப்பதை ஊக்குவித்து தமிழீழம் என்ற இந்த வியாபாரத்தை வெளி நாடுகளில் கொடிகட்டிப் பறக்க வைத்தார்கள் அன்றிருந்த புலிப் பினாமிகள்… இன்று அந்த வியாபாரம் இலங்கையில் நிர்வாகமற்று போய்விட்ட நிலையில் அதை நாடு கடக்க வைத்து உருத்திரகுமாரனின் தலைமையில் “நாடு கடந்த தமிழீழமாக” பரிணமிக்க வைத்து அந்த வியாபாரத்தை மீண்டும் வெற்றிகரமாக நடத்தும் கைங்கரியத்தில் சுறுசுறுப்பாக‌ இறங்கியிருக்கிறார்கள்.. அன்று பிரபாகரனின் தலைமையில் வெளிநாட்டுப் புலிப் பினாமிகள் செய்து வந்த அதே நெஞ்சை பதற வைத்து இரத்தத்தை உறைய வைக்கும் விளம்பரங்களையே இன்று மீண்டும் உருத்திரகுமாரனின் தலைமையில் செய்வதற்கான‌ ஆயத்தப் பணிகளில் துணிகரமாக‌வும் இறங்கியிருக்கிறார்கள்… உலகில் தலை சிறந்த வியாபார ஸ்தாபனங்கள் அனைத்துமே தங்கள் வியாபார முன்னேற்றத்திற்காக‌ கவர்ச்சிகரமான‌ விளம்பர சுலோகங்களை உருவாக்கி அதன் மூலம் மக்கள் மனதை கவர்ந்து தங்கள் வியாபாரத்தை ஓஹோ என்று நடைபெறச் செய்கிறார்க‌ள்.. உதாரணமாக இளம் சமூகத்தினர் விரும்பிப் பருகும் குளிர் பானமான‌ கொக்கா கோலாவை எடுத்துக் கொண்டால்.. இதன் ஆரம்ப காலமான 1904 ம் ஆண்டில் “இன்சுவையும் புத்துணர்வும்” என்று பொருள்பட Delicious and refreshing என்று ஆரம்பித்து ஒவ்வொரு வருடமும் புத்துப்புது சுலோகங்களை உருவாக்கி அதன் பாவனையாளர்களை அசத்தி வந்தார்கள்.. “புத்துணர்வுக்கு மூடியை திருகு!” Twist The Cap To Refreshment என்று 2010 ம் ஆண்டிலும் “வாழ்க்கை இங்கே ஆரம்பமாகிறது” Life Begins here என்று 2011ம் ஆண்டிலும் இவர்களால் உருவாக்கப்பட்ட அந்த சுலோகங்கள் அதன் பாவனையாளர்கள் மத்தியில் மிகவும் பிரசித்தி பெற்றிருந்தன‌.. இதன் பலனாக மேலும் பல கோடி டாலர்களை கொக்கா கோலா ஸ்தாபனம் கூடுதல் இலாபமாக‌ சம்பாதிக்க முடிந்தது… பொதுவாகவே விளம்பரங்கள் என்பது மனோதத்துவ ரீதியில் மக்கள் மனதை கவர்ந்து தங்கள் வியாபாரத்தை பெருக்குவதற்காக‌ உருவாக்கப்படும் ஒரு சாதனமே..இதே பாணியில்தான் இலங்கைத் தமிழர்களின் பிரச்சனைகளை வைத்து வியாபாரம் செய்த.. செய்து கொண்டிருக்கும் நமது தமிழ் அரசியல்வாதிகளும் காலத்துக் காலம் மக்கள் மனதைக் கவரக் கூடியபடி புத்துப்புது சுலோகங்களை உருவாக்கி அதன் மூலம் தமிழர்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தி வந்தார்கள் என்பதை கடந்தகால சரித்திரங்களை ஆராய்ந்து பார்த்தவர்களுக்கு நன்கு புரிந்திருக்கும்… தமிழீழ வியாபாரம் இப்படித்தான் ஆரம்பமானது … மற்றைய தமிழ் கட்சிகளுடன் சேர்ந்து கூட்டமைத்துக் கொண்ட‌ தமிழரசுக் கட்சியினர் தமிழர் விடுதலைக் கூட்டணியாக பரிணாம‌ம் அடைந்த‌ கால கட்டத்தில்தான் தமிழர்களுக்கென்று ஒரு பாரம்பரிய பிரதேசம் இருக்கிறது அதை வென்றெடுக்கும் பட்சத்தில் அதன் பெயர் தமிழீழமாக அமையும் என்று ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த தமிழீழ வியாபாரத்திற்கான சுலோகம் “தமிழர்களுக்கான தீர்வு சுதந்திரத் தமிழ் ஈழமே” என்றிருந்தது.. அதன் பின்னர் இந்த வியாபாரத்தை அவர்களிடமிருந்து பலவந்தமாக பறித்துக் கொண்ட விடுதலைப் புலிகளின் தலைமை தங்களுக்கு சாதமாக அதை “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” என்று மாற்றியமைத்து அதன் மூலம் தங்கள் காலத்தில் பல கோடிகளை இலாபமாக சம்பாதித்துக் கொண்டது… புலிகளின் மறைவிற்குப் பின்னர் அந்த தமிழீழ வியாபாரத்தை புலிகளின் முக்கிய பதவியிலிருந்த கே.பி தனக்காக சுவீகரித்துக் கொள்ள‌ முயன்று கொண்டிருந்த போது இலங்கை அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்ட சூழ்நிலையில் தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்ற தோரணையில் அந்த தமிழீழத்தை தூக்கி கடாசி விட்டு அன்றே இலங்கை அரசாங்கத்துடன் ஒப்புரவாகிக் கொண்டார் அவர்… அவருக்குப் பின் வெளி நாட்டில் பாதுகாப்பாக வாழ்ந்து கொண்டிருந்த‌ உருத்திர குமாரனன் கோஸ்டியினரால் அது கையேற்கப்பட்டு அதற்கு மீண்டும் புத்துயிர் கொடுக்கப்பட்டு “நாடு கடந்த தமிழீழம்” என்று புதிய நாமம் சூட்டப்பட்டு மீண்டும் இயங்கத் தொடங்கிய சூழ்நிலையில் அதற்காக‌ உருவாக்கப் பட்டிருக்கும் புதிய சுலோகம்தான் “தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம்” என்பதாகும்… நாளை ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் உருத்திரகுமாரரின் உயிருக்கும் இலங்கை அரசாங்கத்தால் ஆபத்து ஏற்படும் பட்சத்தில் அவரும் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள இந்த தமிழீழ வியாபாரத்தை தூக்கி கடாசிவிட்டு சரணாகதி அடையத் தயங்க மாட்டார் என்பது நிட்சயமே.. (தங்கள் உயிருக்கு ஆபத்து என்றவுடன் சயனைட் குப்பியாவது மண்ணாங்க‌ட்டியாவது என்று தங்கள் கழுத்தில் கட்டியிருந்ததை கழட்டி கடாசி விட்டு தங்கள் கொள்கைகளை தூக்கி குப்பையில் எறிந்து விட்டு சரணாகதியடைவதுதான் சமயோசிதமான வழி என்பதற்கு பல புலிப் பிரமுகர்களும் பல புலி தள(ர்)பதிகளும் இன்றுவரை சாட்சிகளாக இருந்து வருகிறார்கள் எனபது வேறு விசயம்).. அப்படி உருத்திரகுமாரன் அவர்களும் தளர்ந்துபோய் சரணாகதியடையும் பட்சத்தில் அதை மீண்டும் கொண்டு நடத்த வெளிநாடுகளில் பலர் போட்டி போட்டுக் கொண்டு முன்வருவார்கள்.. ஏனெனில் தங்கள் உயிருக்கு பாதுகாப்பான வெளி நாடுகளில் இருந்து கொண்டு இந்த வியாபாரத்தை கொண்டு நடத்துவது என்னவோ அவ்வளவு கடினமான காரியமல்ல‌.. வெளி நாடுகளில் சிந்திக்கத் தெரியாத இலங்கைத் தமிழர்கள் உள்ள‌வரை அவர்கள் காதுகளில் நைசாக‌ பூச்சுற்றி குறுகிய காலத்தில் பல கோடிகளை கறந்து கொள்ளும் அலாவுதீனின் அற்புத விளக்காக இந்த தமிழீழ வியாபாரம் அமைந்திருப்பதுதான் அதற்குக் காரணம்… இப்படிப்பட்ட இந்த தமிழீழ வியாபாரம் ஆரம்பிக்கப்பட்ட வரலாறு சுவையானது.. இதன் ஆரம்ப கர்த்தாக்களான தமிழரசுக் கட்சியினர் இதை தமிழர்களின் விடிவுக்காக உருவாக்காமல் அன்றைய காலகட்டத்தில் வாழ்ந்த‌ தமிழர்கள் மத்தியில் தாங்கள் இழந்து போயிருந்த‌ செல்வாக்கை மீண்டும் கட்டி எழுப்புவதற்காகத்தான் இதை உருவாக்கியிருந்தார்கள் என்ற அந்த உண்மையை கடந்தகால வரலாற்றை ஆராய்ந்து பார்க்கும்போது தெரிய வருகிறது… சுதந்திரமடைந்த இலங்கையில் அகில இலங்கை தமிழ் காங்கிரசிலிருந்து எஸ். ஜே. வி. செல்வநாயகம் தலைமையில் வெளியேறிய அணியினரால் டிசம்பர் 1949ம் ஆண்டில் யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தில் வைத்து உருவாக்கப்பட்டதே இலங்கைத் தமிழரசுக் கட்சியாகும்… அந்த நாட்களில் “தமிழரசுக் கட்சி” என்ற‌ பெயரே இவர்களுடைய அரசியல் வியாபாரத்திற்கு ஒரு கவர்ச்சிகரமான விளம்பரமாக அமைந்திருந்தது.. இதன் மூலம் தமிழர்களுக்கான அரசொன்று மலரப் போகிறது போன்ற ஒரு தோற்றப்பாடை தமிழ் மக்கள் மனதில் ஏற்படுத்தி அதன் மூலம் அவர்கள் மனதை கவர்ந்து அவர்கள் வாக்குகளை வென்று பாராளுமன்ற ஆசனங்களைக் கைப்பற்றி வந்தார்கள்.. தங்களால் தமிழ் மக்களுக்கென்று எதையுமே சாதிக்க முடியாது என்பதை நன்கு அறிந்திருந்த அவர்கள் தங்களுடைய கையாலாகாத் தனத்தை மறைப்பதற்காக தங்கள் அரசியலில் அன்று மூட்டி வைத்த‌ இனவெறித் தீதான் அவர்களைப் போன்ற அரசியல்வாதிகளால் இன்றுவரை அணைந்து விடாமல் பாதுகாக்கப்பட்டு தமிழினத்தின் எதிர்காலத்தை சீரளித்துக் கொண்டிருக்கிறது என்பது ஒரு புறமிருக்க‌.. அன்றைய கால கட்டத்தில் இவர்கள் தங்களுக்கென்று எதையுமே உருப்படியாக சாதிக்கப் போவதில்லை என்பதை புரிந்து கொண்ட தமிழ் மக்கள் சலிப்படைந்து இவர்களை நிராகரிக்கத் தொடங்கி விட்டார்க‌ள் என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டிய கால‌ம் 1970ம் ஆன்டுப் பகுதியில் ஏற்பட்டிருந்தது. 1970ல் இலங்கையில் நடைபெற்ற‌ பொதுத் தேர்தலில் த‌மிழரசுக் கட்சியினரால் சிங்கள அரசாங்கத்திற்கும் சிங்கள மக்களுக்கும் எதிரான இனவெறிப் பொறி பறிக்கும் மேடை பேச்சுக்கள் குடாநாட்டு அரசியல் மேடைகளில் களைகட்டியிருந்தாலும் அது மக்கள் மத்தியில் எடுபடாமல் பல இடங்களில் அந்தப் பேச்சுக்களை மக்கள் நிராகரித்திருந்தார்கள்.. அதன் பலனாக தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் அன்றைய பாரளுமன்றத் தேர்தலில் வடக்கில் படு தோல்வியைத் தழுவிக் கொண்டார்கள்… நல்லூர் தொகுதியில் தமிழரசுக் கட்சியின் முக்கிய செயலாளர் நாயகம் நாகநாதனை தோற்கடித்து அவரை மண் கவ்வச் செய்திருந்தார் தமிழ் காங்கிரஸ் கட்சியில் போட்டியிட்ட அருளம்பலம் அவர்கள்.. அதேபோல கிளிநொச்சித் தொகுதியில் போட்டியிட்ட தமிழரசுத் தூண் ஆலாலசுந்தரத்தை வீழ்த்தி தமிழ் மக்கள் மத்தியில் தனக்கிருந்த‌ செல்வாக்கை காட்டியிருந்தார் தமிழ் காங்கிரஸில் போட்டியிட்ட ஆனந்தசங்கரி அவர்கள்.. இந்தத் தோல்விகளுக்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல் தமிழரசுக் கட்சிக்கு எவராலும் முட்டுக்கட்டை போட முடியாத கோட்டையாய் விளங்கிய‌ வட்டுக் கோட்டை தொகுதியில் தந்தை செல்வாவின் வாரிசாக தன்னை இனம் காட்டிக் கொண்ட அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களையே தோற்கடித்து அங்கே தன் வெற்றிக் கொடியை நாட்டியிருந்தார் ஏ.தியாகராஜா அவர்கள்… இதில் ஆச்சரியம் என்னவென்றால் 1970 ல் நடைபெற்ற இந்த‌ தேர்தலில் இன விடுதலை பற்றிப் பேசிய‌ தமிழரசுக் கட்சிக்கு எதிராக களமிறங்கி அவர்களை தோற்கடித்தவர்க‌ள் வைத்த கோரிக்கைகள் எதிலுமே அடக்கு முறைக்கு எதிராகவோ அல்லது இன விடுதலைக்கு ஆதரவாகவோ எதுவுமே இடம் பெற்றிருக்கவில்லை.. மாறாக‌ அவைகள் யாவுமே குடா நாட்டு மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில் தொழில் வாய்ப்புகள்.. கல்வி முன்னேற்றம்.. விவசாயக் கடன்.. தொகுதி மேம்பாடு போன்றவற்றின் திட்டங்களின் அடிப்படையிலேயே அமைந்திருந்தன‌ . அதைத்தான் அன்றைய கால கட்டத்தில் அங்கு வாழ்ந்த தமிழ் மக்கள் எதிர்பார்த்திருந்தார்கள் ஆகவேதான் சிங்கள இனத்தை எதிரியாக காட்டி தமிழரசுக் கட்சியினர் நடத்தி வந்த அந்த‌ அரசியல் பேய்க்காட்டல் அவர்களுக்கு அலுத்துப் போயிருந்தது ஆகவே அவர்களை நிராகரித்து இவர்களை அந்த பாராளுமன்ற தேர்தலில் தெரிவு செய்திருந்தார்கள்… இந்த எதிர்பாராத‌ தோல்விகளால் அதிர்ந்து போனது தமிழரசுக் கட்சி.. இந்த மண் கவ்வலைத் தொடர்ந்து விழித்துக் கொண்டார்கள் அதன் தலைவர்கள்.. இவ்வளவு காலமும் தாங்கள் அனுபவித்து வந்த‌ தங்கள் சொகுசான அரசியல் வாழ்வுக்கு வடபகுதித் தமிழர்கள் வெகு விரைவில் சாவு மணியடிக்கப் போவதற்கான முதல் எச்சரிக்கைதான் இந்த தேர்தல் தோல்வி என்பதை சரிவரப் புரிந்து கொண்ட அவர்கள் இனிமேல் தங்கள் இனவெறிப் பிரச்சாரங்கள் தமிழ் மக்கள் மத்தியில் எடுபடாது என்ற உண்மையையும் கூடவே உணர்ந்து கொண்டார்கள்.. ஆகவே ஏதாவது ஒரு வழியில் அவர்கள் கவனத்தை திருப்பி அடுத்த பாராளுமன்றத் தேர்தலிலாவது தங்கள் பாராளுமன்ற ஆசனங்களை கைப்பற்ற வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ஏற்பட்டிருந்தது… ஆகவே வேறு ஏதாவது ஒரு மாற்றீடை அதற்குப் பதிலாக கொண்டு வந்து மீண்டும் அவர்கள் வாக்குகளை கவர போடப்பட்ட திட்டத்தின் அடிப்படையில் மற்றைய தமிழ் கட்சிகளையும் இணைத்து உருவாக்கப்பட்டதுதான் தமிழர் விடுதலைக் கூட்டணி அமைப்பாகும்.. மேலும் தமிழர்களுக்கான ஒரு தாயகத்தை தங்களால் உருவாக்க முடியும் என்று மக்களை நம்பச் செய்வதற்காக அவர்கள் சூதாட்டச் சிந்தனையில் உதித்த “தமிழீழம்” என்ற வார்தைப் பதம் 1976 ஆம் ஆண்டு மே மாதத்தில் தந்தை செல்வாவின் தலைமையில் அமிர்தலிங்கம் அவர்கள் படு தோல்வியை சந்தித்திருந்த வட்டுக் கோட்டையில் பண்ணாகம் என்ற இடத்தில் வைத்து பிரகடனம் செய்யப்பட்டது… இதை உருவாக்கிய அதன் முக்கிய தலைவர்கள் அனைவருமே சட்ட வல்லுணர்கள்.. பொய்யை மெய்யாகவும்.. மெய்யைப் பொய்யாகவும் மாற்ற சட்டத்தின் ஓட்டைகளுக்குள் புகுந்து விளையாடும் சூட்சுமம் அறிந்தவர்கள் .. ஒரு நிரபராதியை குற்றவாளியென்றும் ஒரு குற்றவாளியை நிரபராதியென்றும் நிரூபித்து சட்டத்தையும் மக்களையும் ஏமாற்றும் சூதாட்டக்காரர்கள்.. அதனால்தான் நிறைவேற்ற முடியாத ஒன்றுக்கு தமிழீழமென்று பெயரிட்டு தமிழ் மக்களுக்கு ஆசைகாட்டி அவர்களை மோசம் செய்து அவர்கள் வாழ்க்கையை படுகுழிக்குள் தள்ளி அவர்கள் அழிவுக்கு அன்றே வலிகோலி வைத்து விட்டுப் போயிருக்கிறார்கள்… அதுமட்டுமல்லாமல் தமிழீழம் என்றை ஒருவாக்க தீர்மானிக்கப்பட்ட‌ போதே யாழ்ப்பாண மக்கள் மத்தியில் செல்வாக்குடன் திகழ்ந்து இவர்களின் இனவெறிப் பித்தலாட்டத்திற்கு முட்டுக் கட்டையாக‌ இருந்த யாழ் மேயர் அல்பிரட் துரையப்பா அவர்களை போட்டுத் தள்ளும் தீர்மானமும் கூடவே நிறைவேற்றப்பட்டு அதற்கான நாளும் தெரிவு செய்யப்பட்டு அதை செய்து முடிக்க அனுப்பி வைக்கப்பட்ட பிரபாகரன் என்ற இருபத்தொரு வயது இளைஞனை கொண்டு யாழ் நகரத்திற்காகவும் அங்குள்ள‌ மக்களின் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட அந்த நல்ல மனிதரை படு கொலையும் செய்வித்தார்கள்.. ஆம் தமிழீழத்தின் ஆரம்பமே ஒரு படு கொலையுடன்தான் ஆரம்பித்து வைக்கப்பட்டது.. பிரபாகரனை தங்கள் சுயநலத் தேவைக்காக உபயோகித்தன் பலனாக தமிழர் சமுதாயத்தில் ஒரு சீரியல் கில்லரையும் உருவாக்கி அவர் மூலம் தாங்களும் அழிந்து இவர்கள் ஆரம்பித்து வைத்த‌ தமிழீழம் என்ற திருகு தாளத்தை உண்மையென்று நம்பி விடுதலை வேட்கையுடன் ஆயுதமேந்திப் போராடப் புறப்பட்ட ஆயிரக் கணக்கான மற்றைய இயக்க‌ இளைஞர்களையும்.. அதன் சாத்தியமற்ற தன்மையை புரிந்து கொண்டு அதற்கு எதிர்ப்பு தெரிவித்த புத்தி ஜீவிகளையும்.. புலிகளுக்கு ஆதரவளிக்காத பொது மக்கள் என்று இலட்சக்கணக்கான இன்னுயிர்களையும் பிரபாகரனால் கொன்றொழிக்க வழிகோலி முடிவில் அந்தப் பிரபாகரனின் கூட்டமும் அழிந்தொழிந்து போக‌ வழி அமைத்துக் கொடுக்க‌ இந்த தமிழீழ வியாபாரம்தான் மூல‌ காரணமாக அமைந்திருந்தது… அத்துடன் நின்று போய் விடவில்லை தமிழீழமென்ற அந்த சாத்தானின் சக்தி இன்றுவரை அதன் பின்விளைவுகள் தமிழர் சமூகத்தின் மத்தியில் தொடரத்தான் செய்கிறது.. தமிழீழ வியாபாரத்தை இவர்களிடம் இருந்து அபகரித்து தொடர்ந்த பிரபாகரப் புலிகள் ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து முடிவில் மனிதர்களைக் கடிக்கும் கதையாக வ‌ங்கிகளில்.. பொது நிறுவனங்களில்.. கைவைத்து முடிவில் பொது மக்களின் சொத்துகளிலேயே கை வைக்கும் அளவுக்கு முன்னேறி தாங்களே முன்னோடியாக இருந்து.. இன்று இலங்கைத் தமிழர் சமூதாயத்தில் உழைத்துப் பிழைக்க வேண்டிய தமிழ் இளைஞர் சமூகம் ஒன்றை பொதுமக்களின் வீடுகளில் அத்துமீறிப் புகுந்து ஆயுதங்களை காட்டி வெருட்டி அவர்கள் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி சேர்த்து வைத்த செல்வங்களை எல்லாம் அவர்கள் கையைக் கட்டி காலைக் கட்டி கொள்ளையடித்துச் செல்லும் ஓடுகாலி சமூகமாக மாற்றியமைத்து விட்டுப் போயிருக்கிறது.. இலங்கை தமிழினத்திற்குள் புலிகள் நுழைவதற்கு முன்னர் இப்படியான நிகழ்வுகள் நடந்ததில்லையே…! இன்று நாடு கடந்து வந்து வெளி நாட்டில் குடியிருக்கும் இந்த தமிழீழமென்னும் சாத்தான் இந்தியாவிலும் அகலக் கால் பரப்பத் தவறவில்லை.. அதன் தீய சக்தியானது அன்று காங்கிரஸ் தலைவர் ராஜீவ் காந்தியை கொன்றதன் மூலம் புலிகள் இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக இந்தியாவின் பகையை வலுக்கட்டாயமாக வம்புக்கிழுக்க வைத்த‌து போல‌ இன்று தமிழகத்தில் காங்கிரசுக்கு எதிராக அதன் தலைவர்களை வாய்க்கு வந்தபடி வசைபாடும் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானுடன் இந்த நாடு கடந்த தமிழீழ கோஸ்டியை கூட்டுச் சேர வைத்திருக்கிறது… அண்மையில் தமிழகத்திற்கு விஜயம் செய்திருந்த அதன் உள்ளக அமைச்சர் நாகலிங்கம் பாலச்சந்திரன் சீமானை அவரது “நாம் தமிழர்” கட்சி தலைமை அலுவலகத்தில் சந்தித்தபொழுது அவரிடம் நாம் உங்களுக்கு என்றும் ஆதரவளிப்போம் என்று கூறியபோது “ஆதரவென்ன ஆதரவளிதே தீரணும்.. அண்ணன் கிட்ட சொல்லுங்க தைரியமா இருக்கும்படி” என்று சீமான் பதிலளித்திருப்பதன் பின்னணியில் மறைந்து கிடக்கும் அந்த திட்டங்கள்தான் என்ன?.. இவர்களின் இந்த சந்திப்பின் முழு விபரம் இன்னமும் வெளியிடப்படவில்லை.. ஆனால் வெளியிடப்பட்டிருக்கும் இந்த வீடியோவில் இருந்து சீமானுக்கு இவர்கள் நிட்சயம் ஆதரவளித்தே தீர வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது தெளிவாகவே தெரிகிறது.. இந்த நாம் தமிழர் இயக்கம்தான் இவர்கள் செய்து கொண்டிருக்கும் இந்த தமிழீழ வியாபாரத்தின் முக்கிய பங்காளிகளா?.. இந்த இயக்கத்தில் இருக்கும் இளைஞர்களை கொண்டுதானா எஞ்சியிருக்கும் நமது இலங்கைத் தமிழர்களின் அழிவுக்காக‌ இலங்கையில் மீண்டும் கலவரங்களை ஆரம்பிக்க‌ சீமான் தயாராகிக் கொண்டிருக்கிறார்? அதற்காகத்தானா அண்ணா உருத்திரகுமாரனை மனம் தளராமல் இருக்க்கும்படி கூறியிருக்கிறார்…? இதற்கு ஆதாரமாக‌ கீழ்காணும் வீடியோவை பார்வையிடவும் http://www.youtube.com/watch?v=qZ3B5xOeSQo பைத்தியகாரர்களே! உலகிலுள்ள தமிழ் அமைப்புகள் எல்லாம் உங்கள் நாடு கடந்த‌ தமிழீழ அரசுடன் பதிவு செய்து இணைந்து செயல்படுமாறு உங்கள் நாகலிங்கம் பாலச்சந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளாரே… அதற்கு முதல் நீங்கள் தேட வேண்டியது இந்தியாவின் ஆதரவையல்லவா? தமிழகத்தில் யார்தான் ஆட்சியமைத்தாலும் இன்னும் மூன்றரை வருடங்களுக்கு நடக்கப் போவது காங்கிரஸ் ஆட்சியல்லவா? நீஙகள் தென் சூடானின் அங்கீகாரத்தை பெற்றிருந்தாலும் அல்லது தென் கொரியாவின் அங்கீகாரத்தை பெற்றிருந்தாலும் அதனால் எதுவித பயனும் இருக்கப் போவதில்லை என்பது உறுதியாகும்.. இலங்கைத் தமிழர்களை அங்கே தமிழகத்தில் பகடைக் காய்களாக வைத்து சூதாட்டம் நடத்தும் சீமான் தனது சுயநலத்திற்காகத்தான் காங்கிரசின் பகைவன் போல் நடித்துக் கொண்டிருக்கிறார் என்ற உண்மை உங்களுக்குத் தெரியுமா? நீங்களே உங்கள் தமிழீழ வியாபாரத்திற்காக் எமது தமிழினத்தின் இன்னுயிர்களை பலி கொடுக்கத் தயாராகும்போது அவரை குற்றம் சொல்வதில்தான் என்ன பயன்? மனித குலத்தால் ஜீரணிக்க முடியாத‌ இவைகளை எல்லாம் இலட்சியம் செய்யாமல் வெளிநாடுகளில் சொகுசாக வாழ்ந்து கொண்டு உங்கள் சுயலாபத்திற்காக நாடு கடந்த தமிழீழமொன்றை ஆரம்பித்து மீண்டும் தமிழ் மக்களை பலி கொடுக்க தயாராகிக் கொண்டிருக்கும் உங்கள் புதிய புலித் தலைமை தமிழினத்தின் விடிவிற்காக‌ எதையும் சாதிக்கப் போவதில்லை என்பது உறுதியானதொன்றாகும்… அன்று அந்த இரண்டாம் உலக மகா யுத்தத்திற்கு வித்திட்ட‌ சர்வாதிகாரி ஹிட்லரின் இனவெறி பாசிச‌ சிந்தனைகளுக்கு பின்னால் அணி திரண்ட‌ ஜேர்மன் மக்கள் எப்படி கோடிக் கணக்கில் அழிந்தொழிந்து போனார்களோ அதே போல இன்று வெளி நாடுகளில் மீண்டும் எழும் இந்த நாடு கடந்த தமிழ் ஈழத்தின் பின்னால் புலம் பெயர்ந்த தமிழர்கள் அணி திரள முற்பட்டால் இங்கே இலங்கைத் தீவில் எஞ்சியிருக்கும் எமது பரிதாபத்திற்குரிய தமிழினத்தின் தலைவிதி மீண்டும் ஒரு அழிவுப்பாதையை நோக்கி பயணிக்கப் போவது நிட்சயமே… இந்த இலங்கை இந்திய இளைஞர்களைக் கொண்டு இலங்கையில் ஒரு போர் சூழல் உருவாக்கப்படும் பட்சத்தில் அந்தப் போரிலே சுட்டு வீழ்த்தப்படும் ஒரு இளைய சமுதாயமொன்றின் படங்களுக்கு வெளி நாடுகளில் குத்து விளக்கேற்றி குங்குமப் பொட்டு வைத்து தொட்டுக் கும்பிட்டு கையோடு கலக்சனுக்கும் காசு போடும் அந்த கேடு கெட்ட கலாச்சாரமும் மீண்டும் மீண்டும் களைகட்டும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை… அப்படியொரு யுத்த சூழ்நிலை இலங்கையில் உருவாக்கப்பட்டு அதனால் அல்லல்படப் போகும் பாவப்பட்ட நமது தமிழ் சமுதாயமோ.. ஒரு கொட்டும் மழையிலே கட்டிய கந்தல் துணியுடன் குடிசை வாசல்களில் குந்தியிருந்து புரண்டோடும் ஒரு ஆற்று வெள்ளத்தில் கலந்தோடும் தமது சொந்த பந்தங்களின் இரத்தத்தை பார்த்து ஒப்பாரி வைத்தழும்போது அவர்களுக்கு இந்த தமிழீழ வியாபாரிகளோ அல்லது அவர்களுடன் கூட்டு வியாபாரம் நடத்தும் இந்த தமிழக‌ அரசியல்வாதிகளோ உதவிக்கு வரப் போவதில்லை என்பது உறுதி.. ஆனால் அவர்களை எந்த சந்தர்ப்பத்திலும் விட்டு விலகாது என்றும் அவர்களுடன் கலந்து வாழும் மனித நேயம் கொண்ட மனிதர்கள் மட்டும் இலங்கை அரசாங்கத்தின் மூலமோ அல்லது சர்வதேச தொண்டு நிறுவனங்கள் மூலமோ அவர்களுக்கு ஒரு மறுவாழ்வு கிடைக்க இதய சுத்தியுடன் இயங்கிக் கொண்டுதான் இருப்பார்கள்.. தங்கள் தமிழீழ வியாபாரத்திற்கு இடையூறாக இருக்கும் இப்படிப்பட்ட‌ மனிதத் தலைவர்களை தங்கள் இணையத் தளங்களில் “தேசத் துரோகிகள்” என்று பட்டம் சூட்டி இந்த தமிழீழ‌ வியாபாரிகள் தினமும் திட்டித் தீர்த்துக் கொண்டுதான் இருப்பார்கள்… (தொடரும்) அன்புடன் சித்திறெஜினா  Read More »

சூதாடிய தருமனும் துகிலுரிந்த துச்சாதனனும் (பாகம் 69) ‍ சித்திறெஜினா..! ”

ஏனைய செய்திகள்

யுத்தத்தில் கொல்லப்பட்டவர்கள், காணாமல்போனோருக்காக தீபமேற்றிப் பிரார்த்திக்குமாறு த.தே.கூ. வேண்டுகோள்

யுத்தத்தில் கொல்லப்பட்டவர்கள், காணாமல்போனோருக்காக தீபமேற்றிப் பிரார்த்திக்குமாறு த.தே.கூ. வேண்டுகோள்

இறுதிக்கட்ட யுத்தத்தில் கொல்லப்பட்டவர்கள், காணாமல் போனவர்களை இன்றைய தினம் நினைவுகூர்ந்து அவர்களுக்காக தீபமேற்றி ஆத்மசாந்திப் பிரார்த்தனையில் ஈடுபடுமாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இதேவேளை, கொல்லப்பட்டவர்கள், காணாமல் போனவர்கள் தொடர்பாக இலங்கை பொறுப்புக் கூறுவதற்கு சர்வதேசம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. வீரகேசரி சகோதர வெளியீடான யாழ். ஓசைக்கு கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராஜா வழங்கிய நேர்காணலின்போதே இதனைத் தெரிவித்துள்ளார். “இலங்கையில் இன முரண்பாடு காரணமாக குறிப்பாக 2009 ஆம் ஆண்டு காலத்திற்கு இடைப்பட்ட [...]

இராணுவத்தினரிடம் சரணடையாத புலி உறுப்பினர்கள் மக்கள் மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்...!!! கோத்தபாய

இராணுவத்தினரிடம் சரணடையாத புலி உறுப்பினர்கள் மக்கள் மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்…!!! கோத்தபாய

இறுதிக்கட்டப் போரின் போது இராணுவத்தினரிடம் சரணடையாத தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள், மக்கள் மத்தியில் வாழ்ந்து வருவதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாள்தோறும் மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. சரணடையாதவர்கள் யார் யார் என்பது இன்னமும் புலனாகவில்லை. இவ்வாறு சரணடையாது மக்களுடன் மக்களாக புலி உறுப்பினர்கள் வாழ்ந்து வருவது நாட்டுக்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. பல நாடுகளில் இயங்கிவரும் சில அமைப்புக்கள் நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் ஏற்படுத்த முயற்சி எடுத்து வருகின்றன என [...]

lபுலம்பெயர் இலங்கையர்களுக்கு இரட்டைப் பிரஜாவுரிமை

lபுலம்பெயர் இலங்கையர்களுக்கு இரட்டைப் பிரஜாவுரிமை

புலம்பெயர் இலங்கையர்களுக்கு இரட்டைப் பிரஜாவுரிமை வழங்குவதற்காக குடிவரவு, குடியகல்வு சட்டத்தில் திருத்தம் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.இலங்கையிலிருந்து வெளிநாடு சென்ற பலர் இலங்கைப் பிரஜாவுரிமையை இழந்துள்ளனர். இவர்கள் மீண்டும் இலங்கைப் பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொள்ளும் வகையில் இந்தத் திருத்தங்கள் செய்யப்படவுள்ளன. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். வெளிநாடுகளில் பிரஜாவுரிமை பெற்றுக்கொண்ட புலம்பெயர் இலங்கையருக்கு மீண்டும் இலங்கைப் பிரஜாவுரிமையை இலகுவாக பெற்றுக்கொள்ள இது வசதியாக இருக்கும் [...]

போரும் வாழ்வும்: முள்ளிவாய்க்கால் நினைவுகள்...

போரும் வாழ்வும்: முள்ளிவாய்க்கால் நினைவுகள்…

  நேர்காணல்: முள்ளிவாய்க்கால்: “மிகவும் கோரமான சம்பவங்களின் சாட்சியாக நான் இருக்கிறேன்”   பாஷண அபேவர்த்தன தமிழில்: மீராபாரதி  நீங்கள், இலங்கையில் ஜனநாயகத்திற்கான பத்திரிகையாளர்கள் (Journalists for Democracy in Sri Lanka- JDS) என்ற உங்கள் அமைப்பினர், நண்பர்கள் ஆகியோர் பங்களிப்பு இல்லாமல் சர்வதேசச் சமூகத்தையே உலுக்கிய கைப்பேசி வீடியோவில் எடுக்கப்பட்ட படுகொலைக் காட்சிகள் வெளிச்சத்துக்கு வந்திருக்க மாட்டா. இந்த வீடியோ படங்களை சானல் 4 தொலைக்காட்சிக்குத்தான் வழங்க வேண்டுமென எப்படித் தீர்மானித்தீர்கள்? முதலில் நான் [...]

அரசாங்கத்தை எதிர்த்து ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் ஆர்ப்பாட்டம்...!!! ஐ.தே.க. // ஜனாதிபதியுடனான பேச்சுக் குறித்து ரணில் சம்பந்தனுக்கு விளக்கம்

அரசாங்கத்தை எதிர்த்து ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் ஆர்ப்பாட்டம்…!!! ஐ.தே.க. // ஜனாதிபதியுடனான பேச்சுக் குறித்து ரணில் சம்பந்தனுக்கு விளக்கம்

ஜனாதிபதியுடனான பேச்சுக் குறித்து ரணில் சம்பந்தனுக்கு விளக்கம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் விபரங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனிடம் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெளிவுபடுத்தியுள்ளார் என்று ஐ. தே.க வின் பொதுச் செயலாளரும் எம். பி.யுமான திஸ்ஸஅத்தநாயக்க தெரிவித்தார். இந்தியா அமெரிக்காவின் அழுத்தங்களே அரசாங்கத்தின் அரசியல் மாற்றத்திற்கு காரணமாகுமென்றும் அவர் சுட்டிக் காட்டினார். கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே திஸ்ஸ [...]

சர்வதேசம் பரிந்துரைக்கும் தீர்வை விட தேசிய தீர்வே பொருத்தமானது... நிரந்தர சமாதானத்துக்கும் இதுவே சிறந்த வழி... (YouTube)

சர்வதேசம் பரிந்துரைக்கும் தீர்வை விட தேசிய தீர்வே பொருத்தமானது… நிரந்தர சமாதானத்துக்கும் இதுவே சிறந்த வழி… (YouTube)

சர்வதேச சமூகம் பரிந்துரை செய்யும் வகையிலன்றி இலங்கையில் நிரந்தர சமாதானம் ஸ்திரத்தன்மை செளபாக்கியம் என்பவற்றை தேசிய தீர்வின் மூலமே பெற்றுக்கொள்ள முடியும் என அரசாங்கம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. பயங்கரவாதத்தை வெற்றிகரமாக தோல்வியுறச் செய்து மூன்று வருடங்களே நிறைவடைந்துள்ள நிலையில் இலங்கை பாரிய பல வெற்றிகளைப் பெற்றுக் கொண்டுள்ளதென வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் அமெரிக்க செனட் சபையினரைச் சந்தித்த போது தெரிவித் துள்ளார். அமெரிக்காவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். [...]

‘கோட்டாவின் யுத்தம்’ (Gota's War) பற்றி சுமந்திரன் எம்.பியின் சூடான பேச்சு

‘கோட்டாவின் யுத்தம்’ (Gota’s War) பற்றி சுமந்திரன் எம்.பியின் சூடான பேச்சு

 பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் அர்ப்பணிப்பு, புகழ் பற்றிக் கூறும் ‘கோட்டாவின் யுத்தம்’ என்ற நூல் தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். சுமந்திரன் காரசாரமான உரையொன்றினை சபையில் ஆற்றியிருந்தார். அவரது உரை சர்ச்சையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. திவயின பத்திரிகையின் ஊடகவியலாளரான சி.ஏ.சந்திரபிரேம எழுதியுள்ள ‘கோட்டாவின் யுத்தம்’ என்ற நூல் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தலைமையில் கடந்த திங்கட்கிழமை கொழும்பில் வெளியிடப்பட்டது. இதுதொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கருத்துத் [...]

ராஜீவ் காந்தி தமிழீழம் உருவாக தன்னால் உதவி செய்ய முடியும் என்று ஈழத்தமிழருக்காக சாகும்வரை உண்ணாவிரத புகழ் கருணாநிதியிடம் சொன்னாரா...??? (photos)

ராஜீவ் காந்தி தமிழீழம் உருவாக தன்னால் உதவி செய்ய முடியும் என்று ஈழத்தமிழருக்காக சாகும்வரை உண்ணாவிரத புகழ் கருணாநிதியிடம் சொன்னாரா…??? (photos)

“பிரபாகரன் எப்படி இருக்கிறார்? அவர் தலைமையில் தனித் தமிழீழம் உருவாக என்னால் ஆன உதவிகளைச் செய்வேன்” என இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தன்னிடம் கூறியதாக தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி தெரிவித்துள்ளார் In English: Rajiv Gandhi supported a Tamil Elaam…??? – Karunanidhi (photos) By athirady • May 16, 2012

அடாவடித்தனமாக அரச காணிகளில் குடியேறுவதையே எதிர்க்கிறேன் முஸ்லிம்கள் மீளக்குடியேறுவதையல்ல...!!! மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப்

அடாவடித்தனமாக அரச காணிகளில் குடியேறுவதையே எதிர்க்கிறேன் முஸ்லிம்கள் மீளக்குடியேறுவதையல்ல…!!! மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப்

மன்னார் மாவட்டத்தில் அடாவடித்தனமாக அரசாங்க காணிகளை ஆக்கிரமிப்பதையே நான் எதிர்க்கின்றேன். முஸ்லிம்கள் தமது சொந்தக் காணிகளில் மீள்குடியேறுவதை நான் எதிர்க்கவில்லை. முஸ்லிம்கள் வடக்கிலிருந்து புலிகளால் விரட்டியடிக்கப்பட்ட போது அதற்கு எதிராக குரல் கொடுத்தவனும் நானே என்று மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் தெரிவித்தார். தேசிய சமாதானப் பேரவை நேற்று மன்னாரில் கூட்டமொன்றை நடத்தியபோதும் இதை நான் தெரிவித்தேன். மன்னாரில் இடம்பெறும் அடாவடித்தனங்கள் சக்திகள் குறித்து ஜனாதிபதிக்கு கடிதம் எழுத எனக்கு பூரண உரிமை உண்டு. மன்னார் மாந்தை [...]

பதியுதீனின் கருத்து தமிழ் மக்களின் மனதைப் புண்படுத்தியுள்ளது...!!! வினோ எம்.பி

பதியுதீனின் கருத்து தமிழ் மக்களின் மனதைப் புண்படுத்தியுள்ளது…!!! வினோ எம்.பி

மன்னார் ஆயர் அதி வணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசேப் ஆண்டகை தொடர்பாக அமைச்சர் றிஸாட் பதியுதீன் கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் பேசிய விதம் ஒட்டு மொத்த கத்தோலிக்க மக்களின் மனதையும் புண்படுத்தியுள்ள செயல் எனவும் அமைச்சரின் கூற்றிற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் தெரிவித்தார். அமைச்சர் றிஸாட் பதியூதீன் மன்னார் ஆயர் குறித்து பாராளுமன்றத்தில் கதைத்தமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் பாராளுமன்ற [...]

சரத் பொன்சேகா விடுதலை செய்யப்படுவதைபோல் நீண்ட காலமாக சிறையில் வாடும் தமிழ் இளைஞர்களும் விடுவிக்கப்படவேண்டும்...!!! மனோ கணேசன்

சரத் பொன்சேகா விடுதலை செய்யப்படுவதைபோல் நீண்ட காலமாக சிறையில் வாடும் தமிழ் இளைஞர்களும் விடுவிக்கப்படவேண்டும்…!!! மனோ கணேசன்

சரத் பொன்சேகா விடுதலை செய்யப்படுவதை நாம் வரவேற்கின்றோம். ஆனால் அதேபோல் நீண்ட காலமாக சிறைச்சாலைகளில் தமது வாழ்வின் பெரும்பகுதியை கழித்துவிட்ட வட-கிழக்கு, மலையக, கொழும்பு தமிழ் இளைஞர்களும் விடுதலை செய்யப்படவேண்டும். ஆண்டாண்டுகாலமாக சிறைவாழ்க்கை வாழும் தமிழர்களதும், அவர்களது குடும்ப உறுப்பினர்களதும் கண்ணீரை துடைப்பதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க, கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் ஆகியோர் கூட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது [...]

முதுகெலும்பற்றவர்களின் ஏவலால்... அரசியல் ஜானம் அற்ற  புலிகளால்... மேற்கொள்ளப்பட்ட ஸ்ரீ மஹா போதி படுகொலையின் 27 ஆவது ஆண்டு நிறைவு...!!! (14.5.1985)

முதுகெலும்பற்றவர்களின் ஏவலால்… அரசியல் ஜானம் அற்ற புலிகளால்… மேற்கொள்ளப்பட்ட ஸ்ரீ மஹா போதி படுகொலையின் 27 ஆவது ஆண்டு நிறைவு…!!! (14.5.1985)

நீண்ட தூர அரசியல் ஜானம் அற்ற தமிழீழ விடுதலைப் புலிகளால்  மேற்கொள்ளப்பட்ட முதல்… மிக மோசமான… படுகொலைகளில் ஒன்றான, 146 பௌத்த பக்தர்களை அவர்களது புனித் தளமான அநுராதபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மஹா போதி விகாரையில் வைத்து கொடூரமான முறையில் படுகொலை செய்தது  27 ஆண்டுகள் கடந்துவிட்டன. 1985 ஆம் ஆண்டு மே 14 அம் திகதி நிகழ்ந்த இக் கொடூர சம்பவமானது, முழு நாட்டையும், முழு உலகத்தாரையும் திகைக்கவைத்த ஒரு சம்பவமாகும். சிறுவர்கள், பெண்கள் மற்றும் மதகுருக்கள் என [...]

ஸ்ரீலங்காவில் போரினால் விதவையாக்கப்பட்ட பெண்கள் பாலியல் தொழிலுக்கு திரும்பியுள்ளார்கள்

ஸ்ரீலங்காவில் போரினால் விதவையாக்கப்பட்ட பெண்கள் பாலியல் தொழிலுக்கு திரும்பியுள்ளார்கள்

By Feizal Samath At a makeshift school in northern Sri Lanka. Credit:Feizal Samath/IPS Buy this picture வரும் மே மாதம் 18 ந்திகதி, ஸ்ரீலங்காவின் வடபகுதியில் உள்ள ஏறத்தாழ சுமார் 800 வரையான பெண்கள், கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக இங்கு நடைபெற்ற ஆயுதம் தாங்கிய தமிழ் பிரிவினைவாத மோதலை துடைத்தழிக்கும் முயற்சி இடம்பெற்றபோது,காணாமற்போன அல்லது இராணுவத்திடம் சரணடைந்த தங்கள் கணவன்மார்களின் நலன்வேண்டி இந்துமதச் சடங்குகளை நடத்த இருக்கிறார்கள். “அவர்களின் கணவர்களைப் போன்ற [...]

தமிழர்களின் போராட்டத்தை முறியடித்த பங்கு யாருடையது...??? – கிருஷ்ணமூர்த்தி

தமிழர்களின் போராட்டத்தை முறியடித்த பங்கு யாருடையது…??? – கிருஷ்ணமூர்த்தி

தமிழீழம் என்பது என்ன? அது ஒரு கனவா? அல்லது அது  தேவையான ஒரு அடிப்படையா? அல்லது  தேவை என்ற கற்பனையா? அல்லது  தேவையாக   இருக்கின்ற   போதும் அதை அடையக் கடினமாக உள்ள ஒரு அரசியல் இலக்கா? அல்லது   மாற்றுகளைக்    குறித்துச் சிந்திக்கவே முடியாத ஒரு அடையாளமா? அல்லது   யதார்த்தத்துக்கும்   தேவைக்கும் அப்பால் நின்று சிந்திக்கப்பட்டதன்  தண்டனைத்தளமா? இதில் எது சரியானது, ஏற்புடையது? இந்தக் கேள்விகள்   இன்று தவிர்க்க முடியாதவை. அதேவேளை விடை காணப்பட [...]

எண்பதுகளின் மத்தியில் இலங்கைப் பயங்கரவாதத்துக்கு இந்தியா உடந்தையாக இருந்தது...!!! ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க

எண்பதுகளின் மத்தியில் இலங்கைப் பயங்கரவாதத்துக்கு இந்தியா உடந்தையாக இருந்தது…!!! ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க

இந்தியா வகித்த பங்கு முழுமையாக ஆய்வு செய்யப்பட வேண்டும் என்கிறார் ஜனாதிபதியின் செலாளர். எண்பதுகளின் மத்தியில் இலங்கையில் பயங்கரவாத செயற்பாடுகளைத் திடமிடுவதிலும், நிறைவேற்றுவதிலும் இந்திய புலனாய்வலுத்துறை பெரும் பங்காற்றியுள்ளது என்று ‘கோட்டபாயாவின் போர்’ நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க கூறினார். அவர் மேலும் கூறியதாவது 2009 ஏப்ரலில் போரை நிறுத்துமாறு இந்தியா, ஐக்கிய இராச்சியம் மற்றும் பிரான்ஸ் என்பன கடும் அழுத்தம் பிரயோகித்தன என்றார். ஜனாதிபதியின் சகோதரரும் பாதுகாப்புச் செயலாளருமான கோட்டபாயாவின் [...]

தமிழ் தேசியக் கூட்டமைப்பை உடைக்க அரியநேந்திரன் சதியாம்...??? PLOTE மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் ரி. பாலசிங்கம் அறிக்கை

தமிழ் தேசியக் கூட்டமைப்பை உடைக்க அரியநேந்திரன் சதியாம்…??? PLOTE மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் ரி. பாலசிங்கம் அறிக்கை

தமிழ் தேசியக் கூட்டமைப்பை உடைக்கும் இரகசிய முயற்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.பா.அரியநேந்திரன் – பின்னனியில் சில திரைமறைவு சக்திகள். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான திரு.பாக்கியசெல்வம் அரியநேந்திரன், புலம்பெயர்ந்தவர்களால் நடாத்தப்பட்டுவரும் இணையத்தளமான – தினக்கதிருக்கு (www.thinakkathir.com – 12.05.2012) தெரிவித்திருக்கும் கருத்துக்கள் தொடர்பில், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE) இவ்வறிக்கையை வெளியிடுகின்றது. தனது செய்தியில், திரு அரியநேந்திரன் – எமது அமைப்பை தமிழ் தேசியக் கூட்டமைப்பில் ஒரு அங்கமாக இணைத்துக் கொள்வதை [...]

இடிந்தகரையில் காலவரையற்ற உண்ணாவிரதம் வாபஸ்

இடிந்தகரையில் காலவரையற்ற உண்ணாவிரதம் வாபஸ்

வள்ளியூர், மே 14: கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி இடிந்தகரையில் நடைபெற்ற காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் திங்கள்கிழமை வாபஸ் பெறப்பட்டது. எனினும், தொடர் உண்ணாவிரதம் தொடரும் என்று போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.  கூடங்குளம் அணுஉலையை எதிர்த்து இடிந்தகரையில் கடந்த மே 1-ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடந்து வந்தது. இப் போராட்டத்தில் 68 பெண்களும், 2 ஆண்களும் பங்கேற்றனர்.  இந்த நிலையில் சென்னை லயோலா கல்லூரி அரங்கத்தில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.பி.ஷா தலைமையில், [...]

சகலவித இனவாதத்தையும் நிராகரிக்கிறோம்... ஊடகங்களில் இனவாதம் தலைதூக்க இடமளிக்க வேண்டாம்...!!! இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

சகலவித இனவாதத்தையும் நிராகரிக்கிறோம்… ஊடகங்களில் இனவாதம் தலைதூக்க இடமளிக்க வேண்டாம்…!!! இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

தேசிய ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கக்கூடிய சாதி, மத, பிரதேச பேதங்களை ஏற்படுத்தும் செய்திகளை ஊடகங்கள் வெளியிடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டுமென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று வேண்டுகோள் விடுத்தார். நேற்றுக் காலை அலரி மாளிகையில் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடக நிறுவனங்களின் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடிய போது அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார். இந்த சந்திப்பில், இலங்கையின் அனைத்து இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களின் தலைவர்கள் பங்கேற்றனர். பரஸ்பர நம்பிக்கையையும் நட்புறவையும் மக்களிடையே ஏற்படுத்தக்கூடிய செய்திகளை வெளியிடுவது மிகவும் [...]

பொலநறுவையில் பழம்பெரும் சிவன் கோவிலில் சிவலிங்கத்தை அகற்றி புதையல் தோண்டி சிவாலயம் சேதம்...!!!

பொலநறுவையில் பழம்பெரும் சிவன் கோவிலில் சிவலிங்கத்தை அகற்றி புதையல் தோண்டி சிவாலயம் சேதம்…!!!

பொலநறுவையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற நைபென விகாரையை அண்மித்து அமைந்துள்ள பழம்பெரும் சிவாலயத்தை புதையல் கொள்ளையர்கள் சேதப்படுத்தியுள்ளனர். ஆலயத்தின் கருவறை அமைந்துள்ள பகுதியில் புதையல் கொள்ளையர்கள் பாரிய குழியொன்றை தோண்டியுள்ளனர். ஆலயத்தில் இருந்த லிங்கம் அகற்றப்பட்டு, அந்த இடத்தில் மேற்படி குழி தோண்டப்பட்டுள்ளது. பொலநறுவை ஆட்சிகாலத்திற்குரியது எனக் கருதப்படும் இந்த சிவாலயம் 13ஆம் இலக்க சிவாலயம் என தொல்பொருள் திணைக்களத்தினால் பெயரிடப்பட்டுள்ளது. பொலநறுவையை தலைநகராக கொண்டு, ஆட்சி செய்த சோழ மன்னனான ராஜராஜ சோழன் காலத்தில் இந்த [...]

பொலிஸ் முறைப்பாடுகளுக்கான பிரதியை அவ்விடத்திலேயே வழங்க நடவடிக்கை

பொலிஸ் முறைப்பாடுகளுக்கான பிரதியை அவ்விடத்திலேயே வழங்க நடவடிக்கை

பொதுமக்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகளை செய்யும்போது , அந்த முறைப்பாடுகளுக்கான பிரதியை அவ்விடத்திலேயே வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேசிய அடையாள அட்டை, சாரதி அனுமதிப்பத்திரம், வாகன அனுமதிப் பத்திரம் ஆகியன காணாமற்போதல் மற்றும் சிறிய வாகன விபத்துக்கள் தொடர்பிலான முறைப்பாடுகளை மேற்கொள்ளும் போது, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டின் பிரதியை பெற்றுக்கொள்ள முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன கூறியுள்ளார். அதற்காக அரசாங்கத்திற்கு 25 ரூபா செலுத்த வேண்டும் என பொலிஸ் ஊடகப் [...]

கோட்டாவின் யுத்தம் (Gota's war) நூல் வெளியீடு (photos)

கோட்டாவின் யுத்தம் (Gota’s war) நூல் வெளியீடு (photos)

எல்ரிரிஈ இயக்கம் ஒழிக்கப்பட்ட முறைகள் தொடர்பிலான தகவல்களை அடங்கிய ஷகோட்டாஸ் வோர்| எனும் நூல், ஜனாதிபதி தலைமையில் வெளியிடப்பட்டது. 30 ஆண்டுகாலமாக நீடித்தத பயங்கரவாதத்தினை ஒழிப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட வியூகங்கள் அடங்கிய விடயங்களை உள்ளடக்கியதாக, இந்நூல் அமைந்துள்ளது. இதனை ஊடகவியலாளர் சி.ஏ. சந்திரபிரேம எழுதியுள்ளார். பத்தரமுல்ல, வோட்டர்ஸ் ஏஜ்ஜில் வெளியிட்டு வைக்கப்பட்ட இந்நூலின் முதல் பிரதியை, ஜனாதிபதியிடம், நூல் ஆசிரியர் சந்திரபிரேம கையளித்தார். அதனை தொடர்ந்து பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது. 1956 ஆம் ஆண்டு தொடக்கம் [...]

முள்ளிவாய்க்காலில் அமரத்துவம் எய்திய எமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவது எம் அனைவரதும் கடமை...!!! சிவசக்தி ஆனந்தன்!

முள்ளிவாய்க்காலில் அமரத்துவம் எய்திய எமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவது எம் அனைவரதும் கடமை…!!! சிவசக்தி ஆனந்தன்!

வன்னியில் உயிர்நீத்த மக்ளுக்கான அஞ்சலி நிகழ்வினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மூன்றாவது ஆண்டாகவும் வவுனியாவில் எதிர்வரும் 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10மணிக்கு வவுனியா நகரசபை மண்டபத்தில் நடத்துவதற்கு ஒழுங்கு செய்துள்ளது. இதனையொட்டி வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன் தெரிவித்திருப்பதாவது: எமது உரிமைப் போராட்டத்தில் நாம் பல இழப்புக்களைச் சந்தித்துள்ளோம். இருந்தபோதிலும் இங்கு சென்றால் காப்பாற்றப்படுவோம், அங்கு சென்றால் பாதுகாப்பாக இருக்கும் என்று இறுதி நேரத்தில் மரணத்தைத் தவிர்ப்பதற்காக ஓடி ஓடி இறுதியில் காலனிடம் தம் [...]

கூடங்குளம் போராட்டம் தொடரும்...

கூடங்குளம் போராட்டம் தொடரும்…

கூடங்குள‌ம் அணுமின் நிலையத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் கடற்கரை கிராமங்களைச் சேர்ந்த போராட்டக்காரர்கள் போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும், கூடங்குளத்தைச் சுற்றி உள்ள கிராம மக்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்காக காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடந்து வந்தது. 63 பெண்கள் பங்கேற்ற இந்த உண்ணாவிரதம் நேற்று 14வது நாளாக நீடித்தது. இ‌ந்த ‌நில‌ை‌யி‌ல் உடல் நிலையை கருத்தில் கொண்டு பெண்களின் உண்ணாவிரதத்தை மேலும் நீட்டிக்காமல் முடிவுக்கு [...]

இனவாத யுத்தத்திற்குள் மீண்டும் நாட்டை தள்ளி விட அனுமதிக்க போவதில்லை...!!! நாமல் ராஜபக்ஷ

இனவாத யுத்தத்திற்குள் மீண்டும் நாட்டை தள்ளி விட அனுமதிக்க போவதில்லை…!!! நாமல் ராஜபக்ஷ

இனவாத யுத்தத்திற்குள் மீண்டும் நாட்டை தள்ளிவிட அனுமதிக்கப்போவதில்லை பயங்கரவாத சூழல் இலங்கையில் மீண்டும் ஏற்படாதவாறு தடுப்பது அனைத்து இன மக்களினதும் அரசியல் கட்சிகளினதும் பொறுப்பாகும் என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். வடக்கு மற்றும் கிழக்கில் மாணவர் சிப்பாய் படையணிகளை ஊக்குவிக்க வேண்டும். பௌதீக அபிவிருத்திகள் மாத்திரம் நாட்டின் தரத்தை ஒரு போதும் உயர்த்தப் போவதில்லை. சிறந்த ஆளுமையுடைய தலைவர்களை உருவாக்க வேண்டும். இதன் போது மொழிக்கோ இனத்திற்கோ முதலிடம் கொடுக்காது திறமைக்கு முக்கியத்துவம் கொடுத்து [...]

காக்காமுனையில் ஐந்து பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு... // ஏறாவூர் அல்.அக்சா கிராமத்தில் குடிசைகளுக்கு தீ வைப்பு (பட இணைப்பு)

காக்காமுனையில் ஐந்து பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு… // ஏறாவூர் அல்.அக்சா கிராமத்தில் குடிசைகளுக்கு தீ வைப்பு (பட இணைப்பு)

ஏறாவூர் அல்.அக்சா கிராமத்தில் குடிசைகளுக்கு தீ வைப்பு கிழக்கு மாகாணத்தில் யுத்த வெற்றிக்குப் பின்னர் யுத்த காலத்தில் இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் மீள்குடியேற்றப்பட்ட ஏறாவூர் தாமரைக்கேணி அல். அக்சா கிராமத்தில் நேற்றிரவு 9:00 மணியளவில் மூன்று குடிசைகள் எரியூட்டப்பட்டுள்ளன. 85 முஸ்லிம் குடும்பங்கள் மீள்குடியேற்றப்பட்டு வசித்து வரும் இக்கிராமத்தில் குடிசைகளுக்குத் தீ வைக்கப்பட்டுள்ளமை மூன்றாவது தடவை என்பது குறிப்பிடத்தக்கது. குறித்த இடத்துக்கு விஜயம் செய்த ஏறாவூர் வர்த்தக சங்கத் தலைவரும் நகர சபை உறுப்பினருமான எம்.எல்.றவுபாசம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு [...]

குமுதினிப் படகுப் படுகொலையின் 27ஆவது ஆண்டு நிறைவு இன்றாகும்

குமுதினிப் படகுப் படுகொலையின் 27ஆவது ஆண்டு நிறைவு இன்றாகும்

 யாழ்.குடாநாட்டைச் சூழவுள்ள சப்த தீவுகளில் ஒன்று நெடுந்தீவு. தீவகத்தில் வாழும் மக்கள் தமது பெரும்பாலான தேவைகளை நிறைவு செய்ய யாழ்.குடாநாட்டுடன் தொடர்புபட்டிருந்தனர். தீவையும் யாழ்ப்பாணத்துடன் தொடர்புபட்டிருந்த குறிகட்டுவானையும் பிரித்திருந்த 9 மைல் கடலாக இருந்தபடியால் தீவுக்கான அனைத்துத் தொடர்புகளும் கடல் மார்க்கமாகவே இடம்பெற்றன. பொது மக்களின் அன்றாட கடல் போக்குவரத்துக்கு குமுதினிப் படகே முக்கிய சாதனமாக இருந்தது. அவர்களது வாழ்வோடு இணை பிரியாத ஒன்றாக இருந்தது எனலாம். ஆனால் இன்று படுகொலையின் இரத்தச் சாட்சியாக வரலாறாகி நிற்கிறது [...]

குடும்ப சூழல் மாற்றமடைவதே முதியோரின் மறதி நோய்க்கான காரணமாகும்

குடும்ப சூழல் மாற்றமடைவதே முதியோரின் மறதி நோய்க்கான காரணமாகும்

கமல்ஹாசனின் “உன்னைப்போல ஒருவன்” படத்தில் “இந்தியாவின் தேசிய வியாதி மறதி” என்ற வசனம் இடம்பெறும். திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட இந்த வசனம், நிஜத்தில் மற்றொரு கோணத்தில் உண்மையாகும் வாய்ப்பு மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. “டிமென்ஷியா” என அறியப்படும் மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பது, உலகரங்கில் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது. உலகளவில் ஆண்டுதோறும் 7 இலட்சம் பேர் மறதி நோயால் பாதிக்கப்படுகின்றனர். உலக சுகாதார [...]

அப்பிளின் அதிரடி வியூகம்! (photos)

அப்பிளின் அதிரடி வியூகம்! (photos)

சந்தையில் அதிகமாக விற்பனையாகும் அண்ட்ரோய்ட் டெப்லட்களின் ஆதிக்கத்தை முறியடிக்கும் பொருட்டு புதிய வியூகமொன்றை அப்பிள் வகுத்துள்ளதாகத் தெரியவருகின்றது. அதாவது குறைந்த விலையில் ஐ பேட் டெப்லட்டினை அப்பிள் தயாரிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ‘ஐபேட் மினி’ என இது பெயரிடப்படலாம் எனவும் இதன் விலை சுமார் 250 அமெரிக்கடொலர்களாக இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. ஐ பேட் கொண்டுள்ள ‘ரெடினா’ வகை திரையே ‘ ஐபேட் மினி’ யும் கொண்டிருக்குமெனவும் அதன் அளவு 7.8 அங்குலமாக இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. குறைந்த [...]

'13ம் திருத்தத்தை ஒழிக்கும் கோரிக்கை இனவாதமானது' - கே.எஸ்.ரட்ணவேல்

’13ம் திருத்தத்தை ஒழிக்கும் கோரிக்கை இனவாதமானது’ – கே.எஸ்.ரட்ணவேல்

இலங்கையில் அரசியலமைப்பின் 13ம் திருத்தத்தை ஒழிக்க வேண்டும் என்று தொழில்சார் நிபுணர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு முன்வைத்துள்ள கோரிக்கைக்கு கண்டனக் குரல் எழுந்துள்ளது. தொழில்சார் நிபுணர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறும் அமைப்பொன்று இவ்வாறான தீர்மானத்தை முன்வைப்பது இனவாத நோக்குடையது என்று மூத்த சட்டத்தரணியும் கொழும்பு சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவருமான கே.எஸ்.ரட்ணவேல் தமிழோசையிடம் தெரிவித்தார். தொடர்புடைய பக்கங்கள் 13 வது திருத்தத்தை ரத்துச் செய்யக் கோரும் தொழில்சார் நிபுணர்கள் அமைப்பு தொடர்புடைய விடயங்கள் ஆட்கடத்தல், துஷ்பிரயோகம், தாக்குதல், மனித உரிமை, [...]

அமெரிக்காவுடன் உறவுகளை புதுப்பிக்க தரகு நிறுவனத்தின் உதவியை நாடியது இலங்கை

அமெரிக்காவுடன் உறவுகளை புதுப்பிக்க தரகு நிறுவனத்தின் உதவியை நாடியது இலங்கை

அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இரு தரப்பு உறவுகளை மீண்டும் புதுப்பித்துக் கொள்வதற்காக இலங்கை அரசாங்கம் வொஷிங்டனைத் தளமாகக் கொண்ட “பற்றன் பொக்ஸ்’ என்ற ஆதரவு தேடும் அமைப்பு ஒன்றை நியமித்துள்ளது. ஈழப் போர் முடிவுக்கு வந்த பின்னர் இலங்கை அரசுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள விரிசல்களை சரி செய்யும் நோக்கிலேயே “பற்றன் பொக்ஸ்’ என்ற ஆலோசனை நிறுவனத்தின் உதவியை இலங்கை நாடியுள்ளது. இந்த நிறுவனம் அமெரிக்க காங்கிரஸுடனும், ஏனைய ஒழுங்கமைக்கப்பட்ட முகவரமைப்புகளுடனும் நெருக்கமான தொடர்பை வைத்துள்ளது. இந்த [...]