காணாமல் போன லங்கா ஈ நியுஸ் இணையத்தள ஆசிரியர் பிரகீத் எக்னெலிகொட தொடர்பில் இரண்டு வாரங்களுக்குள் தகவல் வெளியிடப்படும் என காவல்துறை திணைக்களம் அறிவித்துள்ளது. ஊடகவியலாளர் காணாமல் போன சம்பவம் குறித்து கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுத் திணைக்களம் விசாரணைகளை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 1ம் திகதிவரையில் மிரிஹான காவல்துறையினரால் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தமை குறிப்பிடதக்கது. இதேவேளை தமது கணவரை கண்டுபிடித்துக் கொடுக்குமாறு ஊடகவியலாளர் எக்னெலிகொடவின் மனைவி பல்வேறு தரப்பினரிடம் முறைப்பாடுகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடதக்கது.
அவசரகால [...]





























