இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி….! அமரர் திரு.இராமலிங்கம் பசுபதிபிள்ளை (சின்னைய்யா)


Warning: strpos() [function.strpos]: Offset not contained in string in /usr/www/users/webone/wp-content/themes/options_old2/app/loop-functions.php on line 69

இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி….! அமரர் திரு.இராமலிங்கம் பசுபதிபிள்ளை (சின்னைய்யா) புங்குடுதீவு 3ம் வட்டாரம் யாழ்ப்பானம் ஆர்.பி ஸ்டோஸ் உறிமையாளர் அன்பிற்கு இலக்கணமாய் பண்பிற்கு சிகரமாய் பாசத்திற்கு ஒளிவிளக்காய் வாழ்ந்து எமை பாரினிலே எமை வளர்த்து பரிதவிக்கவிட்டு சென்ற எம் தெய்வமே! கண்ணை இமைக் காப்பது போல் எமை காவல் காத்த எம் காவல் தெய்வமே! விழி நீர் ஓயவில்லை இராண்;டு சென்றதுவே கண்முன்னே நடப்பது போல் நினைவுகள் வாட்டுகின்றன துணையின்றி உம்பிரிவால் நடைபிணம் போல் நிற்கின்றோம். பூப்போன்று என்னை என் செல்வங்கள் பார்த்தாலும் என் மனப்பாரம் இறக்கிவைக்க முடியவில்லை நாள்தோறும் உம் செல்வங்கள் உமக்கு பூ வைத்து வணங்குகின்றனர்…!! புங்குடுதீவு 3ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் கொழும்பு பொரலையை வதிவிடமாகவும் கொண்ட யாழ்ப்பானம் ஆர்.பி ஸ்டோஸ் உறிமையாளருமான அமரர் திரு.இராமலிங்கம் பசுபதிபிள்ளை (சின்னைய்யா) அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி. அன்னார், திரு.திருமதி. இராமலிங்கம் தம்பதிகளின் அன்பு மகனும் , திருமதி.புவனேஸ்வரி  அவர்களின் அன்புக் கணவரும் ,  ஜெயபாலன் , ஜெயகுமார் , ஜெசுகந்தன்  , ஜெயகாந்தன்  ,  ஜெயசிலன்  , ஜெயபரமேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்  ஆவார். அன்னாரின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி  23.12.2011 இன்று அன்னாரி கொழும்பு இல்லத்தில் நடைபெறும் என்பதினை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் தெரிவித்து கொள்வதேடு அன்னாரின் ஆத்மசாந்திக்காக பிராத்திக்கும் வன்னம் கேட்டுகொள்கின்றோம்.. தகவல் : மனைவி மற்றும் மகன்மார்கள் ஜெயபாலன்  லண்டன்   balanleicester@hotmail.co.uk ஜெயகுமார்  இலங்கை +94773507390 ஜெயசிலன்  இலங்கை   +94776366434  Read More »

இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி….! அமரர் திரு.இராமலிங்கம் பசுபதிபிள்ளை (சின்னைய்யா)

சூதாடிய தருமனும் துகிலுரிந்த துச்சாதனனும் (பாகம் 69) ‍ சித்திறெஜினா..! ”


Warning: strpos() [function.strpos]: Offset not contained in string in /usr/www/users/webone/wp-content/themes/options_old2/app/loop-functions.php on line 69

அண்மையில் ஒரு அரசியல் நிகழ்வொன்றில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்.. கடந்த காலங்களில் நாமே எமக்கான புதைகுழிகளை தோண்டியிருக்கின்றோம். தற்போது இந்நிலை மாறியுள்ளது… இந்த அமைதிச் சூழலை நாம் அனைவரும் பாதுகாக்கும் நிலையிலேயே ஒளிமயமான எதிர்காலம் ஒன்றை நோக்கி எம்மால் பயணிக்க முடியும் என்றும் பின்னர் இன்னொரு சந்தர்ப்பத்தில் எதிர்ப்பு அரசியலின் மூலம் எதனையும் சாதிக்க முடியாது.. ஆனால் இணக்க அரசியலின் மூலம்தான் அதைச் சாதிக்க முடியும்.. என்றும் அவர் கூறியிருக்கும் வார்த்தைகள் உண்மையில் அர்த்தமுள்ளவைகள்தான்… அதேபோல‌.. புலிகள் தமிழ் ஈழம் எடுத்து தருவார்கள் .. தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் விடுதலைக்காக குரல் கொடுக்கும் என்றும் இனியும் வட கிழக்கு மக்கள் நம்புவார்களாயின் அவர்களை கடவுளினால் கூட காப்பாற்ற முடியாது.. என்று புளொட் இயக்கத்தின் தலைவர் சித்தார்த்தன் அவர்கள் கூறியிருப்பதையும் பார்க்கும்போது இவர்கள் அரசியல் சூதாட்டங்களை கடந்து அதற்கு அப்பால் இலங்கைத் தமிழினம் மீண்டும் ஒரு மனித‌ப் பேரழிவில் விழுந்து விடாமல் தடுக்க‌ விடுக்கப்படும் ஒரு எச்சரிக்கையாகவே இந்த வார்த்தைகளை கணிக்க முடிகிறது… இவர்கள் கூறியிருக்கும் இந்த கூற்றுகளில்தான் எத்தனை உண்மைகள் புதைந்து கிடக்கின்றன.. அந்தத் தமிழீழம் என்ற வார்த்தையில்தான் எத்தனை அழிவுகள் மறைந்து கிடக்கின்றன‌… இலங்கையில் தாங்கள் வாழ்ந்த சொந்த‌ மண்ணிலேயே தங்கள் சொத்தை இழந்து.. சொந்த பந்தங்களை இழந்து.. அனுதினமும் கண்ணீர் வடிக்கும் பரிதாபத்திற்குரிய‌ மக்கள்.. பெற்றோரை இழந்து தவிக்கும் பச்சிளம் பிள்ளைகள்.. தாலாட்டி சீராட்டி பாராட்டி வழர்ந்த தம் பிள்ளைச் செல்வங்களை போருக்கு பலி கொடுத்து பரிதவிக்கும் பெற்றோர்கள்.. கணவன்மார்களை பறிகொடுத்து பித்துப் பிடித்தலையும் அந்த மனைவிகள்.. கொலைகள்.. ஆட்கடத்தல்கள்.. குண்டு வெடிப்புகள்.. இவைகள் அனைத்துமே அன்றைய புலிகளின் காலகட்டத்தில் இலங்கைப் பத்திரிகைகளில் வெளி வந்து நெஞ்சை பதற வைத்து இரத்தத்தை உறைய வைத்த செய்திகளாக இருந்தன‌.. ஆனால் அன்றைய கால கட்டத்தில் இவைகள் யாவுமே வெளி நாடுகளில் வாழும் சிலருக்கு அவர்கள் வாழ்க்கையில் செல்வம் கொழிக்க‌ வைக்கும் விளம்பரங்களாக அமைந்திருந்தன‌.. . இப்படிப்பட்ட‌ விளம்பரங்களை செய்து அதனால் பலனடைந்தவர்கள் யாவரும் தமிழினத்தின் கண்ணீர் வெள்ளத்தில் தங்கள் வாழ்க்கை படகை வழமாகச் செலுத்தத் தெரிந்த‌ கில்லாடிகளாக‌ இருந்தார்கள்… ஆம் இந்தக் கண்ணீர் வடிப்புகளும் கதறல்களும் பரிதபிப்புகளும் இலங்கையில் இல்லாமல் போயிருந்தால்.. வெளி நாடுகளில் இவர்கள் வாழ்க்கையிலும் வசந்த காலம் என்பது இல்லாமல் போயிருக்கும்.. ஆகவே இவைகள் யாவும் தொடர்ந்து அங்கே நடைபெற்றுக் கொண்டிருக்க‌ வேண்டும் என்ற காரணத்திற்காகத்தான் அன்று அந்த பஞ்சமா பாதகங்கள் இலங்கையில் நடப்பதை ஊக்குவித்து தமிழீழம் என்ற இந்த வியாபாரத்தை வெளி நாடுகளில் கொடிகட்டிப் பறக்க வைத்தார்கள் அன்றிருந்த புலிப் பினாமிகள்… இன்று அந்த வியாபாரம் இலங்கையில் நிர்வாகமற்று போய்விட்ட நிலையில் அதை நாடு கடக்க வைத்து உருத்திரகுமாரனின் தலைமையில் “நாடு கடந்த தமிழீழமாக” பரிணமிக்க வைத்து அந்த வியாபாரத்தை மீண்டும் வெற்றிகரமாக நடத்தும் கைங்கரியத்தில் சுறுசுறுப்பாக‌ இறங்கியிருக்கிறார்கள்.. அன்று பிரபாகரனின் தலைமையில் வெளிநாட்டுப் புலிப் பினாமிகள் செய்து வந்த அதே நெஞ்சை பதற வைத்து இரத்தத்தை உறைய வைக்கும் விளம்பரங்களையே இன்று மீண்டும் உருத்திரகுமாரனின் தலைமையில் செய்வதற்கான‌ ஆயத்தப் பணிகளில் துணிகரமாக‌வும் இறங்கியிருக்கிறார்கள்… உலகில் தலை சிறந்த வியாபார ஸ்தாபனங்கள் அனைத்துமே தங்கள் வியாபார முன்னேற்றத்திற்காக‌ கவர்ச்சிகரமான‌ விளம்பர சுலோகங்களை உருவாக்கி அதன் மூலம் மக்கள் மனதை கவர்ந்து தங்கள் வியாபாரத்தை ஓஹோ என்று நடைபெறச் செய்கிறார்க‌ள்.. உதாரணமாக இளம் சமூகத்தினர் விரும்பிப் பருகும் குளிர் பானமான‌ கொக்கா கோலாவை எடுத்துக் கொண்டால்.. இதன் ஆரம்ப காலமான 1904 ம் ஆண்டில் “இன்சுவையும் புத்துணர்வும்” என்று பொருள்பட Delicious and refreshing என்று ஆரம்பித்து ஒவ்வொரு வருடமும் புத்துப்புது சுலோகங்களை உருவாக்கி அதன் பாவனையாளர்களை அசத்தி வந்தார்கள்.. “புத்துணர்வுக்கு மூடியை திருகு!” Twist The Cap To Refreshment என்று 2010 ம் ஆண்டிலும் “வாழ்க்கை இங்கே ஆரம்பமாகிறது” Life Begins here என்று 2011ம் ஆண்டிலும் இவர்களால் உருவாக்கப்பட்ட அந்த சுலோகங்கள் அதன் பாவனையாளர்கள் மத்தியில் மிகவும் பிரசித்தி பெற்றிருந்தன‌.. இதன் பலனாக மேலும் பல கோடி டாலர்களை கொக்கா கோலா ஸ்தாபனம் கூடுதல் இலாபமாக‌ சம்பாதிக்க முடிந்தது… பொதுவாகவே விளம்பரங்கள் என்பது மனோதத்துவ ரீதியில் மக்கள் மனதை கவர்ந்து தங்கள் வியாபாரத்தை பெருக்குவதற்காக‌ உருவாக்கப்படும் ஒரு சாதனமே..இதே பாணியில்தான் இலங்கைத் தமிழர்களின் பிரச்சனைகளை வைத்து வியாபாரம் செய்த.. செய்து கொண்டிருக்கும் நமது தமிழ் அரசியல்வாதிகளும் காலத்துக் காலம் மக்கள் மனதைக் கவரக் கூடியபடி புத்துப்புது சுலோகங்களை உருவாக்கி அதன் மூலம் தமிழர்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தி வந்தார்கள் என்பதை கடந்தகால சரித்திரங்களை ஆராய்ந்து பார்த்தவர்களுக்கு நன்கு புரிந்திருக்கும்… தமிழீழ வியாபாரம் இப்படித்தான் ஆரம்பமானது … மற்றைய தமிழ் கட்சிகளுடன் சேர்ந்து கூட்டமைத்துக் கொண்ட‌ தமிழரசுக் கட்சியினர் தமிழர் விடுதலைக் கூட்டணியாக பரிணாம‌ம் அடைந்த‌ கால கட்டத்தில்தான் தமிழர்களுக்கென்று ஒரு பாரம்பரிய பிரதேசம் இருக்கிறது அதை வென்றெடுக்கும் பட்சத்தில் அதன் பெயர் தமிழீழமாக அமையும் என்று ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த தமிழீழ வியாபாரத்திற்கான சுலோகம் “தமிழர்களுக்கான தீர்வு சுதந்திரத் தமிழ் ஈழமே” என்றிருந்தது.. அதன் பின்னர் இந்த வியாபாரத்தை அவர்களிடமிருந்து பலவந்தமாக பறித்துக் கொண்ட விடுதலைப் புலிகளின் தலைமை தங்களுக்கு சாதமாக அதை “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” என்று மாற்றியமைத்து அதன் மூலம் தங்கள் காலத்தில் பல கோடிகளை இலாபமாக சம்பாதித்துக் கொண்டது… புலிகளின் மறைவிற்குப் பின்னர் அந்த தமிழீழ வியாபாரத்தை புலிகளின் முக்கிய பதவியிலிருந்த கே.பி தனக்காக சுவீகரித்துக் கொள்ள‌ முயன்று கொண்டிருந்த போது இலங்கை அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்ட சூழ்நிலையில் தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்ற தோரணையில் அந்த தமிழீழத்தை தூக்கி கடாசி விட்டு அன்றே இலங்கை அரசாங்கத்துடன் ஒப்புரவாகிக் கொண்டார் அவர்… அவருக்குப் பின் வெளி நாட்டில் பாதுகாப்பாக வாழ்ந்து கொண்டிருந்த‌ உருத்திர குமாரனன் கோஸ்டியினரால் அது கையேற்கப்பட்டு அதற்கு மீண்டும் புத்துயிர் கொடுக்கப்பட்டு “நாடு கடந்த தமிழீழம்” என்று புதிய நாமம் சூட்டப்பட்டு மீண்டும் இயங்கத் தொடங்கிய சூழ்நிலையில் அதற்காக‌ உருவாக்கப் பட்டிருக்கும் புதிய சுலோகம்தான் “தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம்” என்பதாகும்… நாளை ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் உருத்திரகுமாரரின் உயிருக்கும் இலங்கை அரசாங்கத்தால் ஆபத்து ஏற்படும் பட்சத்தில் அவரும் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள இந்த தமிழீழ வியாபாரத்தை தூக்கி கடாசிவிட்டு சரணாகதி அடையத் தயங்க மாட்டார் என்பது நிட்சயமே.. (தங்கள் உயிருக்கு ஆபத்து என்றவுடன் சயனைட் குப்பியாவது மண்ணாங்க‌ட்டியாவது என்று தங்கள் கழுத்தில் கட்டியிருந்ததை கழட்டி கடாசி விட்டு தங்கள் கொள்கைகளை தூக்கி குப்பையில் எறிந்து விட்டு சரணாகதியடைவதுதான் சமயோசிதமான வழி என்பதற்கு பல புலிப் பிரமுகர்களும் பல புலி தள(ர்)பதிகளும் இன்றுவரை சாட்சிகளாக இருந்து வருகிறார்கள் எனபது வேறு விசயம்).. அப்படி உருத்திரகுமாரன் அவர்களும் தளர்ந்துபோய் சரணாகதியடையும் பட்சத்தில் அதை மீண்டும் கொண்டு நடத்த வெளிநாடுகளில் பலர் போட்டி போட்டுக் கொண்டு முன்வருவார்கள்.. ஏனெனில் தங்கள் உயிருக்கு பாதுகாப்பான வெளி நாடுகளில் இருந்து கொண்டு இந்த வியாபாரத்தை கொண்டு நடத்துவது என்னவோ அவ்வளவு கடினமான காரியமல்ல‌.. வெளி நாடுகளில் சிந்திக்கத் தெரியாத இலங்கைத் தமிழர்கள் உள்ள‌வரை அவர்கள் காதுகளில் நைசாக‌ பூச்சுற்றி குறுகிய காலத்தில் பல கோடிகளை கறந்து கொள்ளும் அலாவுதீனின் அற்புத விளக்காக இந்த தமிழீழ வியாபாரம் அமைந்திருப்பதுதான் அதற்குக் காரணம்… இப்படிப்பட்ட இந்த தமிழீழ வியாபாரம் ஆரம்பிக்கப்பட்ட வரலாறு சுவையானது.. இதன் ஆரம்ப கர்த்தாக்களான தமிழரசுக் கட்சியினர் இதை தமிழர்களின் விடிவுக்காக உருவாக்காமல் அன்றைய காலகட்டத்தில் வாழ்ந்த‌ தமிழர்கள் மத்தியில் தாங்கள் இழந்து போயிருந்த‌ செல்வாக்கை மீண்டும் கட்டி எழுப்புவதற்காகத்தான் இதை உருவாக்கியிருந்தார்கள் என்ற அந்த உண்மையை கடந்தகால வரலாற்றை ஆராய்ந்து பார்க்கும்போது தெரிய வருகிறது… சுதந்திரமடைந்த இலங்கையில் அகில இலங்கை தமிழ் காங்கிரசிலிருந்து எஸ். ஜே. வி. செல்வநாயகம் தலைமையில் வெளியேறிய அணியினரால் டிசம்பர் 1949ம் ஆண்டில் யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தில் வைத்து உருவாக்கப்பட்டதே இலங்கைத் தமிழரசுக் கட்சியாகும்… அந்த நாட்களில் “தமிழரசுக் கட்சி” என்ற‌ பெயரே இவர்களுடைய அரசியல் வியாபாரத்திற்கு ஒரு கவர்ச்சிகரமான விளம்பரமாக அமைந்திருந்தது.. இதன் மூலம் தமிழர்களுக்கான அரசொன்று மலரப் போகிறது போன்ற ஒரு தோற்றப்பாடை தமிழ் மக்கள் மனதில் ஏற்படுத்தி அதன் மூலம் அவர்கள் மனதை கவர்ந்து அவர்கள் வாக்குகளை வென்று பாராளுமன்ற ஆசனங்களைக் கைப்பற்றி வந்தார்கள்.. தங்களால் தமிழ் மக்களுக்கென்று எதையுமே சாதிக்க முடியாது என்பதை நன்கு அறிந்திருந்த அவர்கள் தங்களுடைய கையாலாகாத் தனத்தை மறைப்பதற்காக தங்கள் அரசியலில் அன்று மூட்டி வைத்த‌ இனவெறித் தீதான் அவர்களைப் போன்ற அரசியல்வாதிகளால் இன்றுவரை அணைந்து விடாமல் பாதுகாக்கப்பட்டு தமிழினத்தின் எதிர்காலத்தை சீரளித்துக் கொண்டிருக்கிறது என்பது ஒரு புறமிருக்க‌.. அன்றைய கால கட்டத்தில் இவர்கள் தங்களுக்கென்று எதையுமே உருப்படியாக சாதிக்கப் போவதில்லை என்பதை புரிந்து கொண்ட தமிழ் மக்கள் சலிப்படைந்து இவர்களை நிராகரிக்கத் தொடங்கி விட்டார்க‌ள் என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டிய கால‌ம் 1970ம் ஆன்டுப் பகுதியில் ஏற்பட்டிருந்தது. 1970ல் இலங்கையில் நடைபெற்ற‌ பொதுத் தேர்தலில் த‌மிழரசுக் கட்சியினரால் சிங்கள அரசாங்கத்திற்கும் சிங்கள மக்களுக்கும் எதிரான இனவெறிப் பொறி பறிக்கும் மேடை பேச்சுக்கள் குடாநாட்டு அரசியல் மேடைகளில் களைகட்டியிருந்தாலும் அது மக்கள் மத்தியில் எடுபடாமல் பல இடங்களில் அந்தப் பேச்சுக்களை மக்கள் நிராகரித்திருந்தார்கள்.. அதன் பலனாக தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் அன்றைய பாரளுமன்றத் தேர்தலில் வடக்கில் படு தோல்வியைத் தழுவிக் கொண்டார்கள்… நல்லூர் தொகுதியில் தமிழரசுக் கட்சியின் முக்கிய செயலாளர் நாயகம் நாகநாதனை தோற்கடித்து அவரை மண் கவ்வச் செய்திருந்தார் தமிழ் காங்கிரஸ் கட்சியில் போட்டியிட்ட அருளம்பலம் அவர்கள்.. அதேபோல கிளிநொச்சித் தொகுதியில் போட்டியிட்ட தமிழரசுத் தூண் ஆலாலசுந்தரத்தை வீழ்த்தி தமிழ் மக்கள் மத்தியில் தனக்கிருந்த‌ செல்வாக்கை காட்டியிருந்தார் தமிழ் காங்கிரஸில் போட்டியிட்ட ஆனந்தசங்கரி அவர்கள்.. இந்தத் தோல்விகளுக்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல் தமிழரசுக் கட்சிக்கு எவராலும் முட்டுக்கட்டை போட முடியாத கோட்டையாய் விளங்கிய‌ வட்டுக் கோட்டை தொகுதியில் தந்தை செல்வாவின் வாரிசாக தன்னை இனம் காட்டிக் கொண்ட அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களையே தோற்கடித்து அங்கே தன் வெற்றிக் கொடியை நாட்டியிருந்தார் ஏ.தியாகராஜா அவர்கள்… இதில் ஆச்சரியம் என்னவென்றால் 1970 ல் நடைபெற்ற இந்த‌ தேர்தலில் இன விடுதலை பற்றிப் பேசிய‌ தமிழரசுக் கட்சிக்கு எதிராக களமிறங்கி அவர்களை தோற்கடித்தவர்க‌ள் வைத்த கோரிக்கைகள் எதிலுமே அடக்கு முறைக்கு எதிராகவோ அல்லது இன விடுதலைக்கு ஆதரவாகவோ எதுவுமே இடம் பெற்றிருக்கவில்லை.. மாறாக‌ அவைகள் யாவுமே குடா நாட்டு மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில் தொழில் வாய்ப்புகள்.. கல்வி முன்னேற்றம்.. விவசாயக் கடன்.. தொகுதி மேம்பாடு போன்றவற்றின் திட்டங்களின் அடிப்படையிலேயே அமைந்திருந்தன‌ . அதைத்தான் அன்றைய கால கட்டத்தில் அங்கு வாழ்ந்த தமிழ் மக்கள் எதிர்பார்த்திருந்தார்கள் ஆகவேதான் சிங்கள இனத்தை எதிரியாக காட்டி தமிழரசுக் கட்சியினர் நடத்தி வந்த அந்த‌ அரசியல் பேய்க்காட்டல் அவர்களுக்கு அலுத்துப் போயிருந்தது ஆகவே அவர்களை நிராகரித்து இவர்களை அந்த பாராளுமன்ற தேர்தலில் தெரிவு செய்திருந்தார்கள்… இந்த எதிர்பாராத‌ தோல்விகளால் அதிர்ந்து போனது தமிழரசுக் கட்சி.. இந்த மண் கவ்வலைத் தொடர்ந்து விழித்துக் கொண்டார்கள் அதன் தலைவர்கள்.. இவ்வளவு காலமும் தாங்கள் அனுபவித்து வந்த‌ தங்கள் சொகுசான அரசியல் வாழ்வுக்கு வடபகுதித் தமிழர்கள் வெகு விரைவில் சாவு மணியடிக்கப் போவதற்கான முதல் எச்சரிக்கைதான் இந்த தேர்தல் தோல்வி என்பதை சரிவரப் புரிந்து கொண்ட அவர்கள் இனிமேல் தங்கள் இனவெறிப் பிரச்சாரங்கள் தமிழ் மக்கள் மத்தியில் எடுபடாது என்ற உண்மையையும் கூடவே உணர்ந்து கொண்டார்கள்.. ஆகவே ஏதாவது ஒரு வழியில் அவர்கள் கவனத்தை திருப்பி அடுத்த பாராளுமன்றத் தேர்தலிலாவது தங்கள் பாராளுமன்ற ஆசனங்களை கைப்பற்ற வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ஏற்பட்டிருந்தது… ஆகவே வேறு ஏதாவது ஒரு மாற்றீடை அதற்குப் பதிலாக கொண்டு வந்து மீண்டும் அவர்கள் வாக்குகளை கவர போடப்பட்ட திட்டத்தின் அடிப்படையில் மற்றைய தமிழ் கட்சிகளையும் இணைத்து உருவாக்கப்பட்டதுதான் தமிழர் விடுதலைக் கூட்டணி அமைப்பாகும்.. மேலும் தமிழர்களுக்கான ஒரு தாயகத்தை தங்களால் உருவாக்க முடியும் என்று மக்களை நம்பச் செய்வதற்காக அவர்கள் சூதாட்டச் சிந்தனையில் உதித்த “தமிழீழம்” என்ற வார்தைப் பதம் 1976 ஆம் ஆண்டு மே மாதத்தில் தந்தை செல்வாவின் தலைமையில் அமிர்தலிங்கம் அவர்கள் படு தோல்வியை சந்தித்திருந்த வட்டுக் கோட்டையில் பண்ணாகம் என்ற இடத்தில் வைத்து பிரகடனம் செய்யப்பட்டது… இதை உருவாக்கிய அதன் முக்கிய தலைவர்கள் அனைவருமே சட்ட வல்லுணர்கள்.. பொய்யை மெய்யாகவும்.. மெய்யைப் பொய்யாகவும் மாற்ற சட்டத்தின் ஓட்டைகளுக்குள் புகுந்து விளையாடும் சூட்சுமம் அறிந்தவர்கள் .. ஒரு நிரபராதியை குற்றவாளியென்றும் ஒரு குற்றவாளியை நிரபராதியென்றும் நிரூபித்து சட்டத்தையும் மக்களையும் ஏமாற்றும் சூதாட்டக்காரர்கள்.. அதனால்தான் நிறைவேற்ற முடியாத ஒன்றுக்கு தமிழீழமென்று பெயரிட்டு தமிழ் மக்களுக்கு ஆசைகாட்டி அவர்களை மோசம் செய்து அவர்கள் வாழ்க்கையை படுகுழிக்குள் தள்ளி அவர்கள் அழிவுக்கு அன்றே வலிகோலி வைத்து விட்டுப் போயிருக்கிறார்கள்… அதுமட்டுமல்லாமல் தமிழீழம் என்றை ஒருவாக்க தீர்மானிக்கப்பட்ட‌ போதே யாழ்ப்பாண மக்கள் மத்தியில் செல்வாக்குடன் திகழ்ந்து இவர்களின் இனவெறிப் பித்தலாட்டத்திற்கு முட்டுக் கட்டையாக‌ இருந்த யாழ் மேயர் அல்பிரட் துரையப்பா அவர்களை போட்டுத் தள்ளும் தீர்மானமும் கூடவே நிறைவேற்றப்பட்டு அதற்கான நாளும் தெரிவு செய்யப்பட்டு அதை செய்து முடிக்க அனுப்பி வைக்கப்பட்ட பிரபாகரன் என்ற இருபத்தொரு வயது இளைஞனை கொண்டு யாழ் நகரத்திற்காகவும் அங்குள்ள‌ மக்களின் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட அந்த நல்ல மனிதரை படு கொலையும் செய்வித்தார்கள்.. ஆம் தமிழீழத்தின் ஆரம்பமே ஒரு படு கொலையுடன்தான் ஆரம்பித்து வைக்கப்பட்டது.. பிரபாகரனை தங்கள் சுயநலத் தேவைக்காக உபயோகித்தன் பலனாக தமிழர் சமுதாயத்தில் ஒரு சீரியல் கில்லரையும் உருவாக்கி அவர் மூலம் தாங்களும் அழிந்து இவர்கள் ஆரம்பித்து வைத்த‌ தமிழீழம் என்ற திருகு தாளத்தை உண்மையென்று நம்பி விடுதலை வேட்கையுடன் ஆயுதமேந்திப் போராடப் புறப்பட்ட ஆயிரக் கணக்கான மற்றைய இயக்க‌ இளைஞர்களையும்.. அதன் சாத்தியமற்ற தன்மையை புரிந்து கொண்டு அதற்கு எதிர்ப்பு தெரிவித்த புத்தி ஜீவிகளையும்.. புலிகளுக்கு ஆதரவளிக்காத பொது மக்கள் என்று இலட்சக்கணக்கான இன்னுயிர்களையும் பிரபாகரனால் கொன்றொழிக்க வழிகோலி முடிவில் அந்தப் பிரபாகரனின் கூட்டமும் அழிந்தொழிந்து போக‌ வழி அமைத்துக் கொடுக்க‌ இந்த தமிழீழ வியாபாரம்தான் மூல‌ காரணமாக அமைந்திருந்தது… அத்துடன் நின்று போய் விடவில்லை தமிழீழமென்ற அந்த சாத்தானின் சக்தி இன்றுவரை அதன் பின்விளைவுகள் தமிழர் சமூகத்தின் மத்தியில் தொடரத்தான் செய்கிறது.. தமிழீழ வியாபாரத்தை இவர்களிடம் இருந்து அபகரித்து தொடர்ந்த பிரபாகரப் புலிகள் ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து முடிவில் மனிதர்களைக் கடிக்கும் கதையாக வ‌ங்கிகளில்.. பொது நிறுவனங்களில்.. கைவைத்து முடிவில் பொது மக்களின் சொத்துகளிலேயே கை வைக்கும் அளவுக்கு முன்னேறி தாங்களே முன்னோடியாக இருந்து.. இன்று இலங்கைத் தமிழர் சமூதாயத்தில் உழைத்துப் பிழைக்க வேண்டிய தமிழ் இளைஞர் சமூகம் ஒன்றை பொதுமக்களின் வீடுகளில் அத்துமீறிப் புகுந்து ஆயுதங்களை காட்டி வெருட்டி அவர்கள் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி சேர்த்து வைத்த செல்வங்களை எல்லாம் அவர்கள் கையைக் கட்டி காலைக் கட்டி கொள்ளையடித்துச் செல்லும் ஓடுகாலி சமூகமாக மாற்றியமைத்து விட்டுப் போயிருக்கிறது.. இலங்கை தமிழினத்திற்குள் புலிகள் நுழைவதற்கு முன்னர் இப்படியான நிகழ்வுகள் நடந்ததில்லையே…! இன்று நாடு கடந்து வந்து வெளி நாட்டில் குடியிருக்கும் இந்த தமிழீழமென்னும் சாத்தான் இந்தியாவிலும் அகலக் கால் பரப்பத் தவறவில்லை.. அதன் தீய சக்தியானது அன்று காங்கிரஸ் தலைவர் ராஜீவ் காந்தியை கொன்றதன் மூலம் புலிகள் இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக இந்தியாவின் பகையை வலுக்கட்டாயமாக வம்புக்கிழுக்க வைத்த‌து போல‌ இன்று தமிழகத்தில் காங்கிரசுக்கு எதிராக அதன் தலைவர்களை வாய்க்கு வந்தபடி வசைபாடும் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானுடன் இந்த நாடு கடந்த தமிழீழ கோஸ்டியை கூட்டுச் சேர வைத்திருக்கிறது… அண்மையில் தமிழகத்திற்கு விஜயம் செய்திருந்த அதன் உள்ளக அமைச்சர் நாகலிங்கம் பாலச்சந்திரன் சீமானை அவரது “நாம் தமிழர்” கட்சி தலைமை அலுவலகத்தில் சந்தித்தபொழுது அவரிடம் நாம் உங்களுக்கு என்றும் ஆதரவளிப்போம் என்று கூறியபோது “ஆதரவென்ன ஆதரவளிதே தீரணும்.. அண்ணன் கிட்ட சொல்லுங்க தைரியமா இருக்கும்படி” என்று சீமான் பதிலளித்திருப்பதன் பின்னணியில் மறைந்து கிடக்கும் அந்த திட்டங்கள்தான் என்ன?.. இவர்களின் இந்த சந்திப்பின் முழு விபரம் இன்னமும் வெளியிடப்படவில்லை.. ஆனால் வெளியிடப்பட்டிருக்கும் இந்த வீடியோவில் இருந்து சீமானுக்கு இவர்கள் நிட்சயம் ஆதரவளித்தே தீர வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது தெளிவாகவே தெரிகிறது.. இந்த நாம் தமிழர் இயக்கம்தான் இவர்கள் செய்து கொண்டிருக்கும் இந்த தமிழீழ வியாபாரத்தின் முக்கிய பங்காளிகளா?.. இந்த இயக்கத்தில் இருக்கும் இளைஞர்களை கொண்டுதானா எஞ்சியிருக்கும் நமது இலங்கைத் தமிழர்களின் அழிவுக்காக‌ இலங்கையில் மீண்டும் கலவரங்களை ஆரம்பிக்க‌ சீமான் தயாராகிக் கொண்டிருக்கிறார்? அதற்காகத்தானா அண்ணா உருத்திரகுமாரனை மனம் தளராமல் இருக்க்கும்படி கூறியிருக்கிறார்…? இதற்கு ஆதாரமாக‌ கீழ்காணும் வீடியோவை பார்வையிடவும் http://www.youtube.com/watch?v=qZ3B5xOeSQo பைத்தியகாரர்களே! உலகிலுள்ள தமிழ் அமைப்புகள் எல்லாம் உங்கள் நாடு கடந்த‌ தமிழீழ அரசுடன் பதிவு செய்து இணைந்து செயல்படுமாறு உங்கள் நாகலிங்கம் பாலச்சந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளாரே… அதற்கு முதல் நீங்கள் தேட வேண்டியது இந்தியாவின் ஆதரவையல்லவா? தமிழகத்தில் யார்தான் ஆட்சியமைத்தாலும் இன்னும் மூன்றரை வருடங்களுக்கு நடக்கப் போவது காங்கிரஸ் ஆட்சியல்லவா? நீஙகள் தென் சூடானின் அங்கீகாரத்தை பெற்றிருந்தாலும் அல்லது தென் கொரியாவின் அங்கீகாரத்தை பெற்றிருந்தாலும் அதனால் எதுவித பயனும் இருக்கப் போவதில்லை என்பது உறுதியாகும்.. இலங்கைத் தமிழர்களை அங்கே தமிழகத்தில் பகடைக் காய்களாக வைத்து சூதாட்டம் நடத்தும் சீமான் தனது சுயநலத்திற்காகத்தான் காங்கிரசின் பகைவன் போல் நடித்துக் கொண்டிருக்கிறார் என்ற உண்மை உங்களுக்குத் தெரியுமா? நீங்களே உங்கள் தமிழீழ வியாபாரத்திற்காக் எமது தமிழினத்தின் இன்னுயிர்களை பலி கொடுக்கத் தயாராகும்போது அவரை குற்றம் சொல்வதில்தான் என்ன பயன்? மனித குலத்தால் ஜீரணிக்க முடியாத‌ இவைகளை எல்லாம் இலட்சியம் செய்யாமல் வெளிநாடுகளில் சொகுசாக வாழ்ந்து கொண்டு உங்கள் சுயலாபத்திற்காக நாடு கடந்த தமிழீழமொன்றை ஆரம்பித்து மீண்டும் தமிழ் மக்களை பலி கொடுக்க தயாராகிக் கொண்டிருக்கும் உங்கள் புதிய புலித் தலைமை தமிழினத்தின் விடிவிற்காக‌ எதையும் சாதிக்கப் போவதில்லை என்பது உறுதியானதொன்றாகும்… அன்று அந்த இரண்டாம் உலக மகா யுத்தத்திற்கு வித்திட்ட‌ சர்வாதிகாரி ஹிட்லரின் இனவெறி பாசிச‌ சிந்தனைகளுக்கு பின்னால் அணி திரண்ட‌ ஜேர்மன் மக்கள் எப்படி கோடிக் கணக்கில் அழிந்தொழிந்து போனார்களோ அதே போல இன்று வெளி நாடுகளில் மீண்டும் எழும் இந்த நாடு கடந்த தமிழ் ஈழத்தின் பின்னால் புலம் பெயர்ந்த தமிழர்கள் அணி திரள முற்பட்டால் இங்கே இலங்கைத் தீவில் எஞ்சியிருக்கும் எமது பரிதாபத்திற்குரிய தமிழினத்தின் தலைவிதி மீண்டும் ஒரு அழிவுப்பாதையை நோக்கி பயணிக்கப் போவது நிட்சயமே… இந்த இலங்கை இந்திய இளைஞர்களைக் கொண்டு இலங்கையில் ஒரு போர் சூழல் உருவாக்கப்படும் பட்சத்தில் அந்தப் போரிலே சுட்டு வீழ்த்தப்படும் ஒரு இளைய சமுதாயமொன்றின் படங்களுக்கு வெளி நாடுகளில் குத்து விளக்கேற்றி குங்குமப் பொட்டு வைத்து தொட்டுக் கும்பிட்டு கையோடு கலக்சனுக்கும் காசு போடும் அந்த கேடு கெட்ட கலாச்சாரமும் மீண்டும் மீண்டும் களைகட்டும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை… அப்படியொரு யுத்த சூழ்நிலை இலங்கையில் உருவாக்கப்பட்டு அதனால் அல்லல்படப் போகும் பாவப்பட்ட நமது தமிழ் சமுதாயமோ.. ஒரு கொட்டும் மழையிலே கட்டிய கந்தல் துணியுடன் குடிசை வாசல்களில் குந்தியிருந்து புரண்டோடும் ஒரு ஆற்று வெள்ளத்தில் கலந்தோடும் தமது சொந்த பந்தங்களின் இரத்தத்தை பார்த்து ஒப்பாரி வைத்தழும்போது அவர்களுக்கு இந்த தமிழீழ வியாபாரிகளோ அல்லது அவர்களுடன் கூட்டு வியாபாரம் நடத்தும் இந்த தமிழக‌ அரசியல்வாதிகளோ உதவிக்கு வரப் போவதில்லை என்பது உறுதி.. ஆனால் அவர்களை எந்த சந்தர்ப்பத்திலும் விட்டு விலகாது என்றும் அவர்களுடன் கலந்து வாழும் மனித நேயம் கொண்ட மனிதர்கள் மட்டும் இலங்கை அரசாங்கத்தின் மூலமோ அல்லது சர்வதேச தொண்டு நிறுவனங்கள் மூலமோ அவர்களுக்கு ஒரு மறுவாழ்வு கிடைக்க இதய சுத்தியுடன் இயங்கிக் கொண்டுதான் இருப்பார்கள்.. தங்கள் தமிழீழ வியாபாரத்திற்கு இடையூறாக இருக்கும் இப்படிப்பட்ட‌ மனிதத் தலைவர்களை தங்கள் இணையத் தளங்களில் “தேசத் துரோகிகள்” என்று பட்டம் சூட்டி இந்த தமிழீழ‌ வியாபாரிகள் தினமும் திட்டித் தீர்த்துக் கொண்டுதான் இருப்பார்கள்… (தொடரும்) அன்புடன் சித்திறெஜினா  Read More »

சூதாடிய தருமனும் துகிலுரிந்த துச்சாதனனும் (பாகம் 69) ‍ சித்திறெஜினா..! ”

ஏனைய செய்திகள்

பாரதி ஒரு மகா கவியே...!!! ஆனால் மானுட விடுதலை நோக்கில்...??? இராமியா

பாரதி ஒரு மகா கவியே…!!! ஆனால் மானுட விடுதலை நோக்கில்…??? இராமியா

புலமையிலும் எளிமையிலும் பாரதி ஒரு மகா கவியே…!!! ஆனால் மானுட விடுதலை நோக்கி…???   சாதியப் பிரச்சினைகள் பற்றி ஹா¢ஜன்பத்திரிக்கையில் காந்தியார் எழுதிய கருத்துகளுக்கு அண்ணல் அம்பேத்கர் பதிலளிக்கும் போது ‘இவ்வாறுநான் அவருக்குப் பதில் அளித்து உள்ளதால்இ அவர் கூறியுள்ளவை முக்கியமானவை என்று பொருளாகாது. இந்துக்கள்அவரை ஒரு தீர்க்கதா¢சியாக மதிப்பதோடுஇ அவர் வாய் திறந்தால் பிறர் தம் வாயை மூடிக் கொள்ள வேண்டும்இதெருவில் போகும் நாயும் குரைக்கக் கூடாதுஇ என்ற அளவுக்கு அவருடைய சொற்கள் போற்றப்படுவதனாலேயே இதைச்செய்துள்ளேன்’ [...]

இம் முறை சுதந்திர தின விழா அநுராதபுரத்தில்... சுதந்திர தினப் பேரணியில் வவுனியாவின் எட்டு கலாசார நிகழ்வுகள்...

இம் முறை சுதந்திர தின விழா அநுராதபுரத்தில்… சுதந்திர தினப் பேரணியில் வவுனியாவின் எட்டு கலாசார நிகழ்வுகள்…

இம் முறை சுதந்திர தின விழா அநுராதபுரத்தில்… இம் முறை சுதந்திர தின விழா அநுராதபுரத்தில் கொண்டாட உத்தேசிக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி இலங்கையின் 64 சுதந்திர தினமாகும். இதன் பொருட்டு 3000 அதிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுதந்திர தினப் பேரணியில் வவுனியாவின் எட்டு கலாசார நிகழ்வுகள்… அடுத்த மாதம் 4ஆம் திகதி அநுராதபுரத்தில் நடைபெறவுள்ள 64ஆவது தேசிய சுதந்திரதின பண்பாட்டுப் பேரணியில் வவுனியா மாவட்டத்திலிருந்து எட்டு கலாசார நிகழ்வுகளை அரங்கேற்றுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன [...]

ஆயுதப் போராட்டத்துக்குத் தயாராகும் ஜே.வி.பியின் மாற்றுக்குழு

ஆயுதப் போராட்டத்துக்குத் தயாராகும் ஜே.வி.பியின் மாற்றுக்குழு” // இராணுவ மயமாக்கல் எனும் சர்வதேச குற்றச்சாட்டுகள் பொய்… கோத்தபாய ராஜபக்ஷ

இராணுவ மயமாக்கல் எனும் சர்வதேச குற்றச்சாட்டுகள் பொய்… உண்மையில்லை எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்…!!! வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அமைக்கப்பட்டிருந்த பல இராணுவ முகாம்கள் யுத்த நிறைவின் பின்னர் அகற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். எதிர்காலத்தில் இலங்கை முகங்கொடுக்கும் தேசிய பாதுகாப்புக்கான சவால்கள் எனும் தொனிப் பொருளிலான கருத்தரங்கொன்று நேற்று இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்றது. இதில் சிறப்புரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். “நாட்டின் எந்தவொரு பகுதியிலும் இராணுவத்தினரை நிலை நிறுத்தும் உரிமை அரசாங்கத்துக்கு உள்ளது. மக்களின் நன்மைக்காக இவ்வாறு [...]

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் உயிர் நீத்தவர்களின் நினைவுதினம் அனுஷ்டிப்பு...

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் உயிர் நீத்தவர்களின் நினைவுதினம் அனுஷ்டிப்பு…

1974ம் ஆண்டு தைமாதம் 10ம்திகதி யாழ். முற்றவெளி பகுதியில் அமைந்துள்ள வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த 04வது உலக தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாளன்று ஒன்பது தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்ட 38ம்ஆண்டு நினைவுதினம் இன்று (2012-01-10) அனுஷ்டிக்கப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் யாழ் முற்றவெளியில் அமைந்துள்ள நினைவுத்தூபியில் இன்றுகாலை 9.30மணியளவில் அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமாகி நடைபெற்றன. இதன்போது மலரஞ்சலியுடன், மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை [...]

ரொறொன்ரோவில் வங்கி மெஷின் கொள்ளை... இரண்டு தமிழ் இளைஞர்கள் கைது...

ரொறொன்ரோவில் வங்கி மெஷின் கொள்ளை… இரண்டு தமிழ் இளைஞர்கள் கைது…

ஸ்காபுரோ நகரில் இரவிரவாக ஒன்றரை மணி நேரத்திற்குள் 9 Tim Hortans உணவு நிலையத்தில் இரண்டு தமிழ் இளஞர்கள் வங்கி மெஷின்களை கொள்ளையடித்துள்ளனர். உசாரடைந்த பொலிசார் இன்னொரு Tim Hortons  நிலையத்தில் பதுங்கியிருந்து இரு இளைஞர்களைக் கைது செய்துள்ளனர். பிறம்ரன் நகரைச் சேர்ந்த பிறையன் தங்கராஜா,வயது 20, ரொறொன்ரோவைச் சேர்ந்த ஜேய்சன் அந்தோனி வயது 20. ஆகியோர் மீது 48 கொள்ளைச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மார்க்கம் வீதி ,கிங்க்ஸ்ரன் வீதியிலுள்ள Tim Hortans உணவு நிலையத்தில் [...]

ராமேஸ்வரம் வந்திருந்த இலங்கை அதிபர் ராஜபக்ஷே தங்கை கணவர் மீது ‘நாம் தமிழர் வானர கூட்டங்கள்’ தாக்குதல்... (photos & YouTube)

ராமேஸ்வரம் வந்திருந்த இலங்கை அதிபர் ராஜபக்ஷே தங்கை கணவர் மீது ‘நாம் தமிழர் வானர கூட்டங்கள்’ தாக்குதல்… (photos & YouTube)

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உறவினரான, திருக்குமரன் நடேசன் மீது  தமிழகத்தின் ராமேஸ்வரத்தில் வைத்து இன்று செவ்வாய்க்கிழமை காலை கற்கள் மற்றும் செருப்பு வீச்சு இடம்பெற்றுள்ளது. திருக்குமரன் நடேசன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின்  ஒன்றுவிட்ட சகோதரரின் மகளும் பிரதியமைச்சருமான நிருபமா ராஜபக்ஷவின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.  ராமேஸ்வரம் நடுத்தெரு பகுதியிலுள்ள வீடொன்றில் பூஜையொன்றை நடத்திவிட்டு வெளியில் வந்தபோது இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ‘த ஹிந்து’ பத்திரிகை தெரிவித்துள்து.  திருக்குமரன் நடேசன்  இப்பூஜையை நடத்துவதை அறிந்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம் மற்றும் [...]

அமரர் பண்டாரநாயக்காவின் 113ஆவது ஜனன தினம் அனுஷ்டிப்பு...!!! // காத்தான்குடியில் விவேகானந்தர் சிலை சேதமாக்கப்பட்டது...???

அமரர் பண்டாரநாயக்காவின் 113ஆவது ஜனன தினம் அனுஷ்டிப்பு…!!! // காத்தான்குடியில் விவேகானந்தர் சிலை சேதமாக்கப்பட்டது…???

காத்தான்குடியில் விவேகானந்தர் சிலை சேதமாக்கப்பட்டது…???   இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி மற்றும் ஆரையம்பதி பிரதேசங்களின் எல்லையில் நிறுவப்பட்ட சுவாமி விவேகானந்தரின் முழு உருவச் சிலை நிறுவப்பட்டு சில மணி நேரங்களுக்குள் அடையாளம் தெரியாத ஆட்களினால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது. ஆரையம்பதி பிரதேச சபையினால் வீதிகளை அலங்கரிக்கும் திட்டத்தின் கீழ் திங்களன்று சுவாமி விவேகானந்தர், சுவாமி விபுலானந்தர் உள்ளிட்ட ஐந்து சிலைகள் நிறுவப்பட்டன. இதில் சுவாமி விவேகானந்தரின் சிலை மட்டும் சேதமாக்கப்பட்டுள்ளமை பலரையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளதாக ஆரையம்பதி [...]

சென்னைப் புத்தகக் கண்காட்சியில்... ஈழப் போராட்டத்தில் முதலாவது வாழும் சாட்சி…!!! நூலுருவில்...

சென்னைப் புத்தகக் கண்காட்சியில்… ஈழப் போராட்டத்தில் முதலாவது வாழும் சாட்சி…!!! நூலுருவில்…

கணேசன்(ஐயர்). ஐயர் என்ற புனைபெயரில் அறியப்பட்ட கணேசன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் பிரபாகரனோடு ஆரம்பித்தவர்களில் ஒருவர். பல சிக்கல்கள் நிறைந்த தனது அரசியல் நினைவுகளை ஐயர் இனியொரு இணையத்தளத்தில் தொடர்ச்சியாகப் பதிவுசெய்திருந்தார். இவரின் பதிவுகள் பல புதிய தகவல்களோடு செழுமைப்படுத்தப்பட்ட வடிவில் நூலுருவில் வெளியாகின்றது. இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் புத்தகக் கண்காட்சியில் கீழைக்காற்றுப் பதிப்பகத்தின் புத்தகச் சந்தையில் ஐயரின் நூலைப் பெற்றுக்கொள்ளலாம். சென்னைப் புத்தகக் கண்காட்சியில் கீழைக்காற்று! கடை எண் 404 -405.

டெங்கு மீண்டும் தீவிரம்... டிசம்பரில் மாத்திரம் 4000 பேர் பாதிப்பு... நுளம்பு ஒழிப்புவாரம் பிரகடனம் 16-22 வரை

டெங்கு மீண்டும் தீவிரம்… டிசம்பரில் மாத்திரம் 4000 பேர் பாதிப்பு… நுளம்பு ஒழிப்புவாரம் பிரகடனம் 16-22 வரை

தேசிய நுளம்பு ஒழிப்பு வார மாக எதிர்வரும் 16ம் திகதி முதல் 22ம் திகதி வரையான காலப் பகுதி பிரகடனப்படுத்தப் பட்டுள்ளது. டெங்கு நோய் மீண்டும் தீவிரமடை யக் கூடிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருப் பதாலேயே தேசிய நுளம்பு ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சின் அதிகாரியொருவர் நேற்றுத் தெரிவித்தார். அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனையின் அடிப் படையில் இப்பிரகடனம் மேற்கொள்ளப் பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். நாட்டில் கடந்த டிசம்பர் மாதம் மாத்தி ரம் சுமார் நாலாயிரம் பேர் [...]

“மனித உரிமை பேரவையில் கேள்வியெழுப்பினால் பதிலளிப்போம்” // ஜெனிவா மாநாட்டில் இலங்கையின் வெளிப்படைத்தன்மை குறித்து விளக்க முடியும்... //

“மனித உரிமை பேரவையில் கேள்வியெழுப்பினால் பதிலளிப்போம்” // ஜெனிவா மாநாட்டில் இலங்கையின் வெளிப்படைத்தன்மை குறித்து விளக்க முடியும்… // “கிருஷ்ணாவின் விஜயத்தின்போது அரசியல் தீர்வு முக்கிய இடத்தை பிடிக்கும்”

“கிருஷ்ணாவின் விஜயத்தின்போது அரசியல் தீர்வு முக்கிய இடத்தை பிடிக்கும்” இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா அரசாங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருடனான சந்திப்புக்களின்போதும் அரசியல் தீர்வு சம்பந்தப்பட்ட விடயங்கள் குறித்து விரிவாக பேச்சு நடத்துவார் என்று எதிர்பார்க்கின்றோம். அதாவது கிருஷ்ணாவின் இலங்கை விஜயத்தின்போது அரசியல் தீர்வு விடயம் முக்கிய விவகாரமாக ஆராயப்படலாம் என நம்புவதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். இந்திய வெளிவிவகார [...]

பல்வேறு திட்டங்கள் நடைமுறையில் இருக்கின்ற போதும் அவற்றைவிட மக்களின் தேவைகள் அதிகமாக இருக்கின்றன… சந்திரகுமார் எம்.பி (EPDP) // சந்திரகுமார் எம்.பியின் (EPDP) செல்லிடத் தொலைபேசிக் கட்டணம் 300,000 ரூபா! (நெருப்பு இணையம்)

சந்திரகுமார் எம்.பியின் (EPDP) செல்லிடத் தொலைபேசிக் கட்டணம் 300,000 ரூபா! நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவராகிய முருகேசு சந்திரகுமார் எம்.பியின்(EPDP) 2011 நவம்பர் மாதத்துக்கான செல்லிடத் தொலைபேசிக் கட்டணம் 300,000 ரூபாவரையில் அதிகரித்துக் காணப்பட்டதாக தெரியவருகின்றது. இவரது செல்லிடத் தொலைபேசி அழைப்புக்கான உத்தியோகபூர்வப் படியானது மாதமொன்றுக்கு 10,000 ரூபா மட்டுமேயாகும். இந்தக் கட்டணத்தை சந்திரகுமார் சார்பில் முதலில் செலுத்திவிட்டு அதை அவரது சம்பளத்திலிருந்து மாதாந்த தவணைக் கட்டணமாக அறவிட நாடாளுமன்ற ஆலோசனைக்குழு தீர்மானித்துள்ளது. இதன்படி முதலாவது தவணைக் [...]

ஊழல் நிறைந்த இந்தியாவில் ஊட்டச்சத்துக் குறைவினால் உயிரிழப்பு ஏற்படுவது நாட்டுக்கே அவமானம் என்று திடீரென்று கவலைப்படும் இந்தியப் பிரதமர் மன்மோகன்

ஊழல் நிறைந்த இந்தியாவில் ஊட்டச்சத்துக் குறைவினால் உயிரிழப்பு ஏற்படுவது நாட்டுக்கே அவமானம் என்று திடீரென்று கவலைப்படும் இந்தியப் பிரதமர் மன்மோகன்

 ஊட்டச்சத்துக் குறைவினால் உயிரிழப்பு ஏற்படுவது நம் இந்தியாவில் தான் எனும்போது, அது நாட்டுக்கே பெரும் அவமானம் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். நாட்டில் ஊட்டச்சத்து குறைவாக உள்ளவர்கள் குறித்த ‘ஹங்கமா’ என்ற அறிக்கையை இன்று டில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் வெளியிட்டு வைத்து அவர் சிறப்புரை ஆற்றினார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், “பஞ்சம் இல்லாமல் விவசாயிகள் இருப்பது நம் இந்தியாவில் தான். இந்நிலையில், போதுமான அளவு உணவு உற்பத்தியும் உணவு பொருட்களும் உள்ளபோதிலும், ஊட்டசத்துக் [...]

தமிழ்ச்சமூகத்தின் முன்னேயிருக்கும் பாரியகடமை: கவனத்திற்கொள்ளப்படவேண்டிய ஆதரவற்ற சிறார்கள்... கிருஷ்ணமூர்த்தி அரவிந்தன்

தமிழ்ச்சமூகத்தின் முன்னேயிருக்கும் பாரியகடமை: கவனத்திற்கொள்ளப்படவேண்டிய ஆதரவற்ற சிறார்கள்… கிருஷ்ணமூர்த்தி அரவிந்தன்

கடந்த 2011 ஆம் ஆண்டின் இறுதி வாரத்தில் மேலும் ஒரு சிறுவர் இல்லம் வன்னியில்  முல்லைத்தீவில் – திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய ஆண்டின் தொடக்கத்தில்  இந்த வாரம் – கிளிநொச்சியில் மேலும் ஒரு முதியோர் இல்லம் புதிதாகத்திறக்கப்படுகிறது. இது எதனைக் காட்டுகிறது? சமூகத்தில் ஆதரவற்றோரின் நிலை அதிகரித்துள்ளது. அவர்களைப்பராமரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களைப் பராமரிக்கும் முயற்சிகள், அந்த அரும்பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன என்பதைத்தானே!வன்னியில் நடந்த போர் அங்கே, ஆதரவற்றோரையும் உதவி தேவைப்படுவோரையும்  பெருக்கியுள்ளது. ஆனால், இந்தத் [...]

பேச்சுவார்த்தைகள் மூலமாகவே பேச்சுவார்த்தைகளை குழப்பும் சிறிலங்கா... அனலை நிதிஸ் ச. குமாரன்

பேச்சுவார்த்தைகள் மூலமாகவே பேச்சுவார்த்தைகளை குழப்பும் சிறிலங்கா… அனலை நிதிஸ் ச. குமாரன்

அதிரடியின் நடுநிலைமையை தொடர்ந்து நிலை கொள்ளுமிடத்து இங்கு பதியும்  கட்டுரையை தொடரும் நடுநிலைமை கொண்டு  பதிகிறோம்…!!!    இக்கட்டுரையின் சில அம்சங்கள் ஏற்றுக்கொள்ளமுடியாவிடினும் தொடர்ந்து நாம்  பதியும்  அனலை நிதிஸ் ச. குமாரன் அவர்களின் கட்டுரைகளின் தொடர்ச்சியில் இக்கட்டுரையை இங்கு பதிகிறோம்… வாசகர்கள் தங்கள் ஆய்வுடனான கருத்துக்க்கள்… விமர்சனங்களுடன் தொடருங்கள்…   முள்ளை முள்ளால்த்தான் எடுக்கவேண்டும் என்பது பழமொழி. சிறிலங்கா அரசு இப்பழமொழிக்கு உயிர் கொடுக்கிறதென்றால் மிகையாகாது. தமிழர் தரப்பினருடன் பேச்சுக்களை நடத்துகிறோம் என்று ஒரு புறத்தில் கூறிவிட்டு மறுபுறத்தில் அப்பேச்சுக்களைக் குழப்புவதிலேயே சிறிலங்கா அரசு ஆர்வம் காட்டுகிறது. இந்தியா மற்றும் பல மேற்கத்தைய நாடுகளின் வற்புறுத்தல்களையடுத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பும் [...]

  காணி, பொலிஸ் அதிகாரங்கள் குறித்து கிருஷ்ணா பேச்சுவார்த்தை நடத்துவார்... // ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் நூற்றாண்டில் தமிழ் கூட்டமைப்பு...

காணி, பொலிஸ் அதிகாரங்கள் குறித்து கிருஷ்ணா பேச்சுவார்த்தை நடத்துவார்… // ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் நூற்றாண்டில் தமிழ் கூட்டமைப்பு…

ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் நூற்றாண்டில் தமிழ் கூட்டமைப்பு… ஆப்பிரிக்க தேசியக் காங்கிரஸின் நூற்றாண்டு விழாவை தென்னாப்பிரிக்கா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடியது. ப்ளூம்பொன்டீன் நகரில் நடந்த நூற்றாண்டு விழா நிகழ்வுகளில் பல்லாயிரக்கணக்கான தென்னாப்பிரிக்கர்கள் கூடியிருந்தார்கள்.  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டனர். புலம்பெயர் தமிழர்கள் அங்கம் வகிக்கும் உலகத் தமிழர் பேரவையின் பிரதிநிதிகளும் விழாவில் கலந்துகொண்டிருந்தனர்.  தொடர்புடைய விடயங்கள் மனித உரிமை இதேவேளை, உலகத் தமிழர் பேரவைக்கு [...]

சீனாவுடனான இலங்கையின் தொடர்புகளுக்கு அழுத்தங்களை பிரயோகிக்க முடியாது...!!! கிருஸ்ணா  // இலங்கையில் அரசியல் தீர்வு ஏற்படுவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்...!!! யாழ். ஆயர்

சீனாவுடனான இலங்கையின் தொடர்புகளுக்கு அழுத்தங்களை பிரயோகிக்க முடியாது…!!! கிருஸ்ணா // இலங்கையில் அரசியல் தீர்வு ஏற்படுவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்…!!! யாழ். ஆயர்

இலங்கையில் அரசியல் தீர்வு ஏற்படுவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்…!!! யாழ். ஆயர் இலங்கையில் அரசியல் தீர்வு ஏற்படுவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள யாழ். மறை மாவட்ட ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம், புலம்பெயர்ந்த தமிழர்களை திருப்பி அனுப்புவதை பிரித்தானிய மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளார். யாழ்.ஆயர் இல்லத்தில் நேற்று வியாழக்கிழமை காலை பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் ஜேம்ஸ் வோட்டன் தலைமையிலான குழுவினர் யாழ். ஆயரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பின் போதே [...]

ஈழத்துச் சிதம்பரத்தில் பஞ்ச ரத பவனி (பட இணைப்பு)

ஈழத்துச் சிதம்பரத்தில் பஞ்ச ரத பவனி (பட இணைப்பு)

ஈழத்து சிதம்பரம் என அழைக்கப்படும் காரைநகர் சிவன் கோவில் மார்கழி திருவாதிரை உற்சவத்தின் பஞ்ச ரத தேர்த்திருவிழா இன்று நடைபெற்றது. அதிகாலை முதல் மூலவருக்கு விசேட அபிஷேகங்கள் ஆராதனைகள் இடம்பெற்று சோடச உபசாரங்களுடன் திருவிழா நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் இவ்விழாவில் கலந்துகொண்டிருந்தனர். படங்கள்: மயூரப்பிரியன் ___

அதிகரிக்கும் குற்றச்செயல்கள்; மர்ம மரணங்களின் பின்னணி என்ன...???

அதிகரிக்கும் குற்றச்செயல்கள்; மர்ம மரணங்களின் பின்னணி என்ன…???

ஆட்கடத்தல்கள்;, மர்மக் கொலைகள், கப்பம் பெறுதல் என குற்றச்செயல்கள் இடம்பெற்றே வண்ணமே உள்ளன. அண்மைக்காலமாக அரங்கேறி வரும் இச்சம்பவங்களால் பொது மக்கள் தினந்தோறும் பீதியுடனேயே காலத்தைக் கழிக்கின்றனர். சோதனைச் சாவடிகள், பொலிஸார் மற்றும் படையினரின் வீதி ரோந்து நடவடிக்கைகள், சிவிலுடை தரித்த பாதுகாப்புப் பிரிவினரின் கண்காணிப்பு என பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ள போதும் கொழும்பு உட்பட நாட்டின் சில பகுதிகளில் வெள்ளை வேன் ஆயுததாரிகளால் ஆட்கத்தல்கள், மர்மக் கொலைகள் தொடருகின்றன. கடந்த நாட்களில் நாட்டின் சில பகுதிகளில் [...]

வன்னிப் புலிக்கு சாமரை வீசி பிழைப்பு நடாத்தி... ஊடகவியலாளர் என்ற போர்வையில் உலா வந்த ஒற்றன் தராக்கி சிவராமின் கொலை வழக்கு ஒத்திவைப்பு...

வன்னிப் புலிக்கு சாமரை வீசி பிழைப்பு நடாத்தி… ஊடகவியலாளர் என்ற போர்வையில் உலா வந்த ஒற்றன் தராக்கி சிவராமின் கொலை வழக்கு ஒத்திவைப்பு…

வன்னிப் புலிக்கு சாமரை வீசி பிழைப்பு நடாத்தி… ஊடகவியலாளர் என்ற போர்வையில் உலா வந்த ஒற்றன்… தர்மரத்தினம் சிவராமின் கொலை வழக்கு விசாரணை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. இவ்வழக்கின் முக்கிய சாட்சியாளர்கள் ஆறுபேர் நீதிமன்றத்திற்கு வருகை தராமை காரணமாக வழக்கை நீதிபதி ஒத்திவைத்தார். குறித்த முக்கிய சாட்சிகள் ஆறுபேரும் நீதிமன்றத்திற்கு சமூகமளிக்காத நிலையில் வழக்கு விசாரணையை மேற்கொள்ள முடியாது என அரசதரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இந்நிலையில் வழக்கு விசாரணைகளை ஒத்திவைக்கும் படியும் அவர் நீதிமன்றத்தை [...]

ஈழத் தமிழர் இதயங்களுக்கு... வருத்தத்தின் பின்னரும் திருத்தத்திற்கான முயற்சிகள் மேற்கொள்ளப் படவில்லை...!!! அர்ச்சுணன்

ஈழத் தமிழர் இதயங்களுக்கு… வருத்தத்தின் பின்னரும் திருத்தத்திற்கான முயற்சிகள் மேற்கொள்ளப் படவில்லை…!!! அர்ச்சுணன்

புலிகளின் தலமையினாலும், அவர்களை ஏகப்பிரதிநிதிகளாக ஏற்றுக்கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பினராலும் மக்கள் பாரியளவில் ,துன்பங்களையும், அழிவுகளையும் எதிர்கொண்டார்கள். அந்த வருத்தங்களின் பின்னரும் அவர்களின் நடவடிக்கைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவில்லை! தகுதியான தலமை இல்லாமையினால் தகுதியற்ற தலமையினை தமிழர்கள் ஏற்றுகொள்ள வேண்டிதாயிற்று (The absence of qualified leadership we have agreed vain leadership). உலகெங்கும் பரந்து வாழும் எம்மின மக்கள் அனைவருக்கும் அர்ச்சுணனின் புத்தாண்டு வாழ்த்துக்கள். எங்கள் எல்லோரினது மூளைகளும் எப்போதும் ஏதாவது ஒன்றினை சிந்தித்து கொண்டே [...]

புதியபாதை சுந்தரத்தின் 30வது சிரார்த்ததினம்! (Jan-02-1982)

புதியபாதை சுந்தரத்தின் 30வது சிரார்த்ததினம்! (Jan-02-1982)

விடுதலை போராட்டத்தின் முன்னோடிகளில் முதன்மையானவரும் புதியபாதை பத்திரிகை ஆசிரியருமான சதாசிவம் சிவசண்முகமூர்த்தி(சுந்தரம்) அவர்களின் 30வது நினைவுதினம் இன்றாகும். சுந்தரத்தை படுகொலை செய்து சகோதரப்படுகொலையை உருவாக்கியதன் மூலம் எமது போராட்டத்தை நாமே சிதைப்பதற்கு அத்திவாரம் இடப்பட்டநாளும் இன்றைய நாளாகும். மக்களிற்கு அரசியல் தெளிவூட்டி அதன்வழி முன்னெடுக்கப்படும் போராட்டமே உண்மையான விடுதலை போராட்டமாக இருக்க முடியும் என்ற கொள்கையில் திடமான பாதைவகுத்த சுந்தரம். வெறுமனவே ஒரு பத்திரிகை ஆசானாகவோ அல்லது அரசியல் வாதியாகவோ திகழாமல் ஆயுதம் தாங்கிய விடுதலை போராளியாகவும் [...]

தான் ஒரு எடுத்துக்காட்டாகத் திகழப்போவதாக கூறும் ஸ்ரீலங்கா கனடா தமிழ் குடியேற்ற வாசி... நிசான் துரையப்பா...!!!

தான் ஒரு எடுத்துக்காட்டாகத் திகழப்போவதாக கூறும் ஸ்ரீலங்கா கனடா தமிழ் குடியேற்ற வாசி… நிசான் துரையப்பா…!!!

முதல் தடவையாக நிசான் துரையப்பா ஒரு ஆறு வயதான ஸ்ரீலங்கா குடியேற்ற வாசியாக ஒன்ராறியோவின் மில்ரன் பகுதிக்குள் கால்பதித்தார். பெற்றோருக்கு ஒரே குழந்தையான துரையப்பா ஒரு வயதாக இருக்கும்போதே இந்த கனடாவிற்கு வந்தார், ரொரான்ரோவில் ஒரு குறுகிய காலத்தை கழித்த பின்னர், மில்ரனின் முதலாவது புதிய துணைப் பிரிவுகளில் ஒன்றுக்குள் இடம் பெயர்ந்தார்கள். இன்று 31 வருடங்கள் கழிந்த பின்பு மிகவும் மாற்றங்கள் மற்றும் மக்கள் பெருக்கத்துக்கு ஆளாகிவிட்ட இயற்கை வளமிக்க மில்ரனின், ஹோல்டன் பிராந்திய காவல்துறை [...]

மட்டக்களப்பு புனித மரியாள் இணைப்பேராலயத்தில் இன்று... (பட இணைப்பு)

மட்டக்களப்பு புனித மரியாள் இணைப்பேராலயத்தில் இன்று… (பட இணைப்பு)

மலர்ந்துள்ள புத்தாண்டுக்கொண்டாட்டங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் களைகட்டியுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஆலயங்களில் இன்று காலைமுதல் விசேட பூஜைவழிபாடுகளும் சமய நிகழ்வுகளும் இடம்பெற்று வருகின்றன. மட்டக்களப்பு புனித மரியாள் இணைப்பேராலயத்தில் இன்று காலை நடைபெற்ற விசேட புத்தாண்டு வழிபாடுகளில் ஏராளமான பக்தர்கள் பங்கு கொண்டனர். புளியந்தீவு பங்குத்தந்தை அருட்தந்தை கே.இரட்ணகுமார் அடிகளார் வழிபாடுகளை நடத்தினார்.நாட்டின் அமைதிக்கான பிரார்த்தனைகளும் இடம்பெற்றன.

விடுதலை புலிகளின் உயர்மட்ட தலைவர்கள் இரகசிய முகாமில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை...??? நெருப்பின் புலனாய்வு...!!!

விடுதலை புலிகளின் உயர்மட்ட தலைவர்கள் இரகசிய முகாமில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை…??? நெருப்பின் புலனாய்வு…!!!

விடுதலை புலிகளின் உயர்மட்ட தலைவர்கள் இரகசிய முகாமில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. 2009ம் ஆண்டு மே மாதம் 17,18,19ம் திகதிகளில் சரணடைந்த, கைது செய்யப்பட்ட விடுதலை புலிகளின் முக்கியஸ்தர்களான யோகி, புதுவைரத்தினதுரை, எழிலன் உட்பட மேலும் பல முக்கியஸ்தர்கள் இரகசிய முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதேவேளை புலிகளின் மேலும் சில முக்கியஸ்தர்களான கே.பி. போன்றவர்கள் அரசிற்கு தமது முன்னைய சகாக்களை காட்டிக் கொடுத்து அரசுடன் [...]

கொச்சிக்டை ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தில் இன்று... (பட இணைப்பு)

கொச்சிக்டை ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தில் இன்று… (பட இணைப்பு)

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இன்று நாடளாவிய ரீதியில் புத்தாண்டு சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. இதற்கமைய கொழும்பு கொச்சிக்டை ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தில் இடம்பெற்ற விஷேட பூஜைகளில் பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்துகொண்டனர். Pics by:Jeeva

'கல்விக்கு உயிர்கொடுத்த காவியத் தலைவனின் காட்டு மிராண்டித்தனம் பாரீர்!' (photos)

‘கல்விக்கு உயிர்கொடுத்த காவியத் தலைவனின் காட்டு மிராண்டித்தனம் பாரீர்!’ (photos)

காத்தான்குடி நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தினரால் இன்று இலவச அப்பியாசப் புத்தகம் விநியோகிக்கப்படவிருந்த நிலையில் அதற்கென முற்பதிவு செய்யப்பட்டிருந்த ஹிஸ்புல்லா கலாசார மண்டபத்தினை வழங்க நகர சபைத் தவிசாளர் மறுப்புத் தெரிவித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் ஹிஸ்புல்லா கலாசார மண்டபத்தின் முன்னால் மக்கள் இயக்கத்தினர், மற்றும் பெற்றோர்கள், மாணவர்கள் என பெரும் எண்ணிக்கையிலானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த ஒரு வாரத்துக்கு முன்னரே மண்டபத்துக்கான முற்பதிவு செய்யப்பட்டபோதும் மண்டபம் வழங்குவதற்கு மறுப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் [...]

முட்டாள்களை படு முட்டாள்கள் ஆக்குகின்ற கதை தெரியுமா...??? மானமுள்ள தமிழா அவசியம் பார்...!!!

முட்டாள்களை படு முட்டாள்கள் ஆக்குகின்ற கதை தெரியுமா…??? மானமுள்ள தமிழா அவசியம் பார்…!!!

வெளிநாடுகளில்  இயங்குகின்ற பெரும்பாலான  இணையத் தளங்கள்   தமிழர்களை  எவ்வளவுக்கு  எவ்வளவு  முட்டாள்கள்   ஆக்க  முடியுமோ   அவ்வளவுக்கு அவ்வளவு   முட்டாள்கள்   ஆக்கி வைத்திருக்கிறார்கள். 2009 மே மாதம்  18 முன்பு ,  புலி  சார்பு  இணையத் தளங்கள்  பொய்யையும்  புரளியையும்  புனைந்து  எழுதி   ‘புலன்  மங்கிய’ புலம்பெயர்  தமிழர்களை  மூளைச்சலவை செய்து  வைத்துக்கொண்டு,   தாங்கள்  பிரசுரிக்கும்   தகவல்கள்  (செய்திகள்)  மட்டுமே   உண்மையென  நம்பச்செய்து   பிழைப்பு  நடத்திக்கொண்டிருந்தார்கள். ‘பொய் சொல்வார்க்கு பொரியும் கிடையாது என்பார்கள்’ அதுபோல்தான்,  சதாகாலமும்  [...]

உணர்ச்சி அரசியலை தவிர்ப்பீர்...

உணர்ச்சி அரசியலை தவிர்ப்பீர்…

தற்போது தமிழக மக்களிடையே கட்சி பாகுபாடற்ற ஒரு எழுச்சி ஏற்பட்டுள்ளது. அடுக்கடுக்கான நிகழ்வுகள் தமிழ் இளைஞர்களையும் அவர்களது சிந்தனையையும் தூண்டியுள்ளன. ஈழப்போரில் ஆரம்பித்து மீனவர் படுகொலை, மூவருக்கு தூக்குத் தண்டனை, கூடங்குள அணுத் திணிப்பு, முல்லைப் பெரியாறு பிரச்சனை என ஒவ்வொன்றாக அவர்களின் உணர்வுகளை தூண்டியுள்ளன. இதில் அரசியல் கட்சியில் உள்ளவர்கள் என்ன செய்வதென்று தங்களது தலைமையை நோக்க, எந்தவித அறிகுறிகளையும் காணமல் அவர்கள் உள்ளுக்குள் புழுங்கி தவித்து வருகின்றனர். அரசியல் கட்சி சாராதவர்கள் தங்களது அதிகாரம் [...]

மலர்கிறது... 2012!

மலர்கிறது… 2012!

2011 ஆம் ஆண்டு நம்மிடமிருந்து விடைபெற்றுச் செல்ல, 2012 ஆம் ஆண்டு இன்முகத்துடன் இன்று மலர்கின்றது. பிறக்கும் புது வருடம் எப்படி இருக்குமோ என்ற ஆதங்கம் நம் ஒவ்வொருவர் மனதிலும் எழத்தான் செய்கின்றது. கடந்த வருட துன்ப துயரங்கள் மறைந்து பிறக்கும் ஆண்டிலாவது அமைதியும் ஆனந்தமும் கிட்டாதா என்று ஏங்கித் தவிக்கும் உள்ளங்கள் பல கோடி. நோய் நொடிகள், கஷ்ட நஷ்டங்கள், வேதனை சோதனைகள் – இப்படித் துன்பங்களுக்கு மேல் துன்பங்களைச் சந்தித்தவர்கள் அதிலிருந்து மீட்பு பெற [...]

இணக்கப்பாட்டுடன் பொலிஸ், காணி அதிகாரங்கள் வழங்கித் தீர்வு காண வேண்டும்...!!! அமைச்சர் வாசுதேவா

இணக்கப்பாட்டுடன் பொலிஸ், காணி அதிகாரங்கள் வழங்கித் தீர்வு காண வேண்டும்…!!! அமைச்சர் வாசுதேவா

இணக்கப்பாட்டுடன் பொலிஸ், காணி அதிகாரங்கள் வழங்கித் தீர்வு காண வேண்டும்…!!! அமைச்சர் வாசுதேவா அரசியல் தீர்வில் இணக்கப்பாட்டுடன் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். இதற்கான வழிமுறைகளைக் கையாண்டு அரசாங்கம் புதுவருடத்தில் இனப்பிரச்சினைக்கு தீர்வை வழங்கிவிடும் என்று அமைச்சர் வாசுதேவநாணயக்கார நம்பிக்கை தெரிவித்தார். தமிழ் அரசியல் கட்சிகளுடன் அரசாங்கம் பரந்தளவில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றது. விரைவில் பாராளுமன்ற தெரிவுக் குழு ஊடாக தீர்வு வந்துவிடும் என்றும் அவர் குறிப்பிட்டார். இதைத் தொடர்ந்து அமைச்சர் வாசுதேவநாணயக்கார தொடர்ந்தும் [...]