இறுதிக்கட்ட யுத்தத்தில் கொல்லப்பட்டவர்கள், காணாமல் போனவர்களை இன்றைய தினம் நினைவுகூர்ந்து அவர்களுக்காக தீபமேற்றி ஆத்மசாந்திப் பிரார்த்தனையில் ஈடுபடுமாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இதேவேளை, கொல்லப்பட்டவர்கள், காணாமல் போனவர்கள் தொடர்பாக இலங்கை பொறுப்புக் கூறுவதற்கு சர்வதேசம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. வீரகேசரி சகோதர வெளியீடான யாழ். ஓசைக்கு கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராஜா வழங்கிய நேர்காணலின்போதே இதனைத் தெரிவித்துள்ளார். “இலங்கையில் இன முரண்பாடு காரணமாக குறிப்பாக 2009 ஆம் ஆண்டு காலத்திற்கு இடைப்பட்ட [...]





























