இந்தியப்பிரதமர் மன்மோகன் சிங் திரும்பிச் சென்ற பின்பும் இந்தியப்படை விவகாரம் இன்னும் அடங்கவேயில்லை..

சார்க் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கை வந்த இந்தியப்பிரதமர் மன்மோகன் சிங்கின் பாதுகாப்புக்காக பெரும் எண்ணிக்கையிலான இந்தியப்படையினர் வந்தனர் என்றும் அவர்கள் சீதுவையில் உள்ள ஐந்து பாடசாலைகளில் தங்கியிருந்தனர் என்றும் ஜே.வி.பி எம்பி பிமல் ரட்ணாயக்க நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அவர்கள் கப்பல்கள் ஹெலிகொப்டர்கள் போன்றவற்றையும் கொண்டு வந்தனர் என்று அவர் கூறினார். நேற்றைய அவசரகால சட்டநீடிப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்ட ரோஹித்த போகொல்லாகம உரையாற்றிய போது திடீரென குறிக்கீடு செய்தே பிமல் மேற்கண்டவாறு கூறினார். இந்தியப்படையினரை தங்க வைப்பதற்காகவே பாடசாலைகள் மூடப்பட்டன என்றும் அவர் கூறினார். இதுதொடர்பாக மேலதிக தகவல்கள் தம்மிடம் நிறையவே உள்ளன என்றும் அவற்றை தாம் வெளிப்படுத்துவார்கள் என்றும் பிமல் சொன்னார். இந்த தகவலை ரோகித்த போகொல்லாகம மறுத்ததோடு முடிந்தால் இந்தியப்படையினர் வந்தனர் என்று நிரூபித்து காட்டுமாறு சவால் விடுத்தார்.

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள்

You can use these XHTML tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <blockquote cite=""> <code> <em> <strong>