13வயது சிறுமியை வல்லுறவுக்குட்படுத்திய 45 வயதானவர் கைது..!

13 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாகக் கூறப்படும் 45 வயதான நபர் ஒருவரை வெலிவேரிய பொலிஸார் கைது செய்துள்ளனர். கம்பஹா மாவட்டம் வெலிவேரிய பிரதேசத்தைச் சேர்ந்த மேற்படி நபர், குறித்த சிறுமியின் பாட்டியார் சந்தைக்குச் சென்றிருந்தபோது அவ்வீட்டில் தனிமையிலிருந்த சிறுமியை வல்லுறவுக்குட்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. மேற்படி நபர் அவ்வீட்டுக்குள் இருந்த நிலையில் அயலவர் ஒருவர் கொடுத்த தகவலையடுத்து பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவு பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி கம்பஹா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுதிக்கப்பட்டாள். சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர்செய்யவுள்ளார்.

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள்

You can use these XHTML tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <blockquote cite=""> <code> <em> <strong>